எனது புத்தக அனுபவங்கள்

எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் அலாதி பிரியம், நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் நான் விரும்பி படித்தவை காமிக்ஸ் புத்தகங்கள், விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற கதைகள் படித்து வந்தேன்.ஆனாலும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அதில் வரும் படத்துடன் கூடிய கதைகளை படிப்பதில் ஒரு தனி பிரியம், அதிலும் மாயாவி, கரும்புலி, கௌபாய், ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதைகள் மிக பிடித்தவை. காமிக்ஸ் புத்தகங்கள் யார் வீட்டில் உள்ளது என்று தேடி பிடித்து படித்து எப்படியாவது படித்து விடுவேன்.

பின்பு தினசரிகளில் வார வாரம் வரும் இணைப்பு புத்தகங்கள், ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளும் படிப்பேன். இத்தனையும் நான் படிப்பது நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி வந்துதான். ஒரு முறை நண்பன் ஒருவனின் துணையுடன் நூலகத்தில் இணைந்து புத்தகங்கள் படித்து வந்தேன். அந்த நூலகம் நான் படிக்கும் பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மாலை பள்ளி முடிந்தவுடன் தான் நூலகம் செல்ல இயலும்.ஆனால் அந்த நூலகர் நான்கு மணிக்கே கிளம்பிவிடுவார், பள்ளி நான்கு மணிக்கு தான் முடியும். நூலகத்தில் எப்படியாவது புத்தகம் எடுத்து விடவேண்டும் என்று சைக்கிளில் எவ்வளவு வேகம் செல்லமுடியுமோ அவ்வளவு வேகம் செல்வோம். அப்படியும் பல நாட்கள் ஏமாற்றம் தான். இப்படியாக நூலகத்தின் மூலம் தெனாலிராமன், பீர்பால், முல்லா போன்ற கதைகள் பரிச்சயமானது.

நாவல் என்றால் நான் முதலில் படித்து வந்தது ராஜேஷ்குமார் நாவல் தான், அவரது கதைகளின் ஓட்டமும் புத்திசாலிதனமான துப்பறிதலும் நாவலை முடிக்காமல் கீழ் வைக்கவிடாது. பள்ளி காலங்களில் நான் அறிந்த சில எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,, சுஜாதா, வைரமுத்து, பட்டுகோட்டை பிரபாகர்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரே, இவர்களும் நான் வார இதழ்கள் படித்து வந்ததால் தான் பரிச்சயம்.

மேல்நிலை, கல்லூரி என பின் வந்த காலங்களில் பல புத்தகங்கள் படிக்கும்
வாய்ப்புகள் கிடைத்தது. கலைஞர் அவர்கள் எழுதிய பொன்னர் - சங்கர் தான் நான் படித்த
பெரிய வரலாற்று நாவலாகும்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எனது வாசிப்பு
கல்லூரி நூலகம்,அரசு நூலகம் என தொடர்ந்தத்து. கவிதைகளை பள்ளி பருவத்தில்
விரும்பி படித்து இல்லை, பின்பு நான் மிகவும் விரும்பி படித்தது கவிதைகள் தான்,
வைரமுத்து அவர்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது,ஆனாலும் நான்
விரும்பும் மற்றொரு கவிஞர் தபூசங்கர். அவரது ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் தான்
என்னை அவரை, கவிதைகளை பிடிக்கவைத்தது, அவரது கவிதை தொகுப்புகள் சில படித்து
உள்ளேன். கவிதைகள் ஒவ்வொன்றும் காதலை இயல்பாக, புதுமையாக, எடுத்து கூறின.
அதனால் தான் என்னவோ அவரது கவிதைகள் என்னை கவர்ந்துவிட்டன.
அவரின் ஒரு கவிதை இங்கே
"உப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே"

அவரது ப்ளாக் இங்கே கிளிக்கவும்
ஆனாலும் புத்தகங்களுடன் எனது அனுபவம் என்பது மிக, மிக குறைவு. இன்னும் பல புதகங்ககளை தேடுகிறேன், தேடிக்கொண்டு இருக்கிறேன்.
---------------------------------------------------------------------------------

டிஸ்கி:
இந்த பதிவை ஒரே மூச்சில் எழுதவேண்டும் என்று நேற்று எழுத ஆரம்பித்து நான்கு முறை மின்வெட்டு ஆனது. புத்தகங்கள் பற்றி நிறைய எழுத யோசித்து இருந்தேன், விட்டு விட்டு எழுதியதால் முழுவதுமாக எழுத பல விஷயங்கள் ஞாபகம் வரவில்லை.
மீண்டும் மின்வெட்டை அமல்படுத்திவிட்டனர்.

0 comments:

பாரதியார் - இணையற்ற கவிஞன்

என்னங்க பண்றது நானும் எத எழுதுறதுனு ஒசிச்சு பார்த்தேன் ஒன்னும் புலப்படல. சரி பாரதியார் டக்குனு ஞாபகத்துக்கு வந்தாரு,. சரி அவர எனக்கு ரொம்ப பிடிக்குமே, அவர பத்தி ஒரு பதிவாவது போடணும்னு தோணுச்சு. அதனால இந்த ப்ளாக்கில் அவர பத்தி பதிவு போடலனா நல்லா இருக்காதுனு இத எழுதறேன். யார் இத படிச்சாலும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்.
--------------------------------------------------------------------------------
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞரான பாரதியார் நான் மிகவும் விரும்பும் ஒருவர்,தனக்கே உரிய பானியில், நடையில், எவரைக் கண்டும் அஞ்சாமல் கவிதைகளை அள்ளி வீசியவர், இவரது அஞ்சாமை உணர்வு என்னை மிகவும் கவர வைத்தது. சில கவிதைவரிகளில் வீரம் நம்மை ஆட்கொள்ளும், காதல் உணர்வு நம்மை காதல் வயப்பட வைக்கும்.
தமிழ் மொழியின் பெருமையை ஒரே வரியில் சொல்கிறார் பாருங்கள் இப்படி

" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் "

இப்படி இவர் சொல்ல வேண்டுமானால் மற்ற மொழிகளில் எவ்வளவு புலமை இருக்க வேண்டும்.
இவர் தான் செய்யும் தொழில் இதுதான் என்று சொல்லும் இடம் எவ்வளவு அழகானது, இயல்பானது என்று பாருங்கள்

" எமக்கு தொழில் கவிதை செய்வது "

நான் ரசித்த மற்றொரு வரி

"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் "

மரணத்தை இவ்வளவு துணிவுடன் எதிர் கொண்ட இவரது அஞ்சா நெஞ்சம் என்னை மிகவும் கவர்ந்தது
பெண்மை, காதல், வீரம், வாழ்க்கை, நீதி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரே மகாகவி பாரதி தான்.
-------------------------------------------------------------------------------
பாரதியார் பத்தி எழுதலாம்னு இதை எழுதுனேன். ஆனாலும் இன்னும் நல்லா எழுத முயற்சி செய்கிறேன்

2 comments:

நான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்

நேற்று மாலை திருப்பூர் வலை பதிவர்கள் சங்கமான சேர்தளம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து இருந்தது. நான் அவசர பணி காரணமாக கோவை சென்று விட்டதால், என்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. நானும் எனது நண்பனும் செல்ல திட்டமிட்டோம், இறுதியில் அவன் மட்டும் சென்று வந்தான். எதிர்பார்த்த அளவு நபர்கள் விழாவிற்கு வரவில்லை என்று சொன்னான். நான் கூட பரிசல்காரனின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன்.
உலகின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக நண்பன் கூறினான். எனக்கு சிறிய வருத்தம் இன்னும் உள்ளது ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டோம் என்று.

நேற்று மதியம் முதல் இன்று காலை வரை கோவையில் தான் இருந்தேன். கோவை எனக்கு பிடித்த நகரம். திருப்பூர் போல் பரபரப்பாக அல்லாமல் மிக நிதானமான நகரம், மற்றும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை எனக்கு பிடிக்கும். மற்றபடி கோவையில் எனக்கு அனுபவம் என்று எதுவும் இல்லை எப்போதாவது செல்வதோடு சரி. எனக்கு தெரிந்தவரை லிவிங் காஸ்ட் கோவையில் கொஞ்சம் அதிகம். அந்த வகையில் திருப்பூர் எவ்வளவோ பரவாயில்லை.
-------------------------------------------------------------------------------

0 comments:

அடுத்த கட்டம்

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற போட்டி தான் நான் பார்த்த கடைசி கிரிக்கெட் போட்டி. இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடிய தொடரின் போட்டிகளை நான் காணவில்லை என்றாலும் செய்திகள் மூலமாக விவரங்கள் அறிந்து கொண்டேன்.
இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் பல சொல்லப்பட்டன.
ஐ.பி.எல் போட்டிகள், தொடர் போட்டிகள்,காயம், அனுபவம் இன்மை என்று. அதை பற்றி இங்கு நான் சொல்லவில்லை, நம் அணியின் அடுத்த கட்டம் என்ன?

நம் அணி, அடுத்து செய்ய போகும் செயல்பாடுகள் என்ன என்று யோசிக்கவில்லை, அதற்குள் இப்போது சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன.இந்த தொடரில் இந்திய அணிகள் வெற்றி பெறும் பட்சத்தில் பழைய தோல்விகள் மறக்கபடலாம் அல்லது விமர்சனங்கள் உருவாகலாம். எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பும் பி.சி.சி.ஐ தான். சிறந்த அணியை உருவாக்கும் திட்டமிடல் இல்லதுதான் இதற்கு காரணம்.

அணிக்கு வீரர்கள் தேர்வு ஐ.பி.எல் -லில் நன்றாக விளையாடும், விளையாடிய வீரர்கள் மட்டும் தேர்வு செய்ய பட்டனர். 20-20 போட்டிகள் அதிர்ஷ்டம் தான் பல வெற்றிகளை தீர்மானித்துள்ளது. அதை மட்டும் கணக்கில் கொண்டு தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், ஒரு வீரர் அணியில் காயம் காரணமாக இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்பும் மாற்று வீரர் எவரும் இல்லை. அதனால் முழுமையாக உடல் தகுதி பெறாதவர்களை வலுக்கட்டாயமாக சேர்க்கும் நிலைதான் உள்ளது. ஒய்வு நிலையில் உள்ள வீரர்களை எதிர்பார்த்து கொண்டுதான் உள்ளோம்.
ஒரு டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடிவர்கள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாதவர்கள். உடல் தகுதி பெறாதவர்கள். இதே நிலை தான் ஒரு நாள் போட்டிகளுக்கும்.
120 கோடி மக்கள் கொண்ட நாட்டில், சிறந்த வீரர்களை கிரிக்கெட் மட்டும் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் நம்மால் உருவாக்க தற்போது முடிவதில்லை. காரணம் பயிற்சி குறைவு, மற்றும் சிறந்த பயிற்சியாளர்கள் இல்லாததுதான். சீனா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் செய்யப்படும் அளவிற்கு பயிற்சிகள் இங்கு செய்யபடுவதில்லை அல்லது உக்திகள் கற்றுக்கொள்ள படுவதில்லை.
ஒலிம்பிக் ஆகட்டும், டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம், கால்பந்து, ஹாக்கி உலககோப்பை ஆகட்டும் நாம் வெற்றி பெறுவோமா என்ற எண்ணம தான் உள்ளதே தவிர, நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நிலை இல்லை. திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்களுக்கான உக்குவிப்புகள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். திறமையானவர்களை கண்டு அவர்களை உக்குவித்து முறையான, புதிய உக்திகளுடனான பயிற்சி தரும்போது நாம் பல வீரர்களை உருவாக்க முடியும்.

பி.சி.சி.ஐ தனது வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் வரையும் கார்பரேட் கம்பெனிகளின் கீழ் அடமானத்தில் உள்ள வீரர்கள் நாட்டிற்காக விளையாடும் வரையும் இந்திய அணி சிறந்த அணியாக உருவாகாது .



டிஸ்கி: கிரிக்கெட் எனக்கு பிடிக்கும் என்பதால் தான் இதை எழுதினேன். தவிர மற்ற விளையாட்டுகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.

0 comments:

நான் வாசித்த முதல் ப்ளாக்

இங்கு எனது ப்ளாக் அனுபவம் பற்றி குறிப்பிடும் முன்னர், என்னுடைய இன்டர்நெட் அனுபவங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
நான் பதினோராம் வகுப்பில் வரலாறு பாட பிரிவில் படித்த காரணத்தால், எனது கணினி அறிவு அப்போது பூஜ்யம் தான். கணினி படத்தில் படிக்கும் என் நண்பர்கள் இன்டர்நெட், ஈமெயில் பற்றி பேசும் போதெல்லாம், அவர்கள் சொல்வது ஒன்றும் புரியாது. என்னடா பெரிய கம்ப்யூட்டர்னு. அவங்க லேப்ல போய், காதலர்தினம் படத்துல கவுண்டமணி மாதிரி கிண்டல் பண்ணிட்டு வந்துடுவோம்.
அப்பறம் +2 எக்ஸாம் முடிஞ்சு, காலேஜ் போறவரைக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ் போவோமே, அப்டினு போனேன். அங்க கொஞ்ச விஷயங்கள் கத்துகிட்டேன். ஆனாலும் இன்டர்நெட் பத்தி ஒன்னும் கத்துதரல(ஏன்னா அங்க இன்டர்நெட் இல்ல). சரி கம்ப்யூட்டர் பத்தி கத்துடோம் இனி கவலை இல்லன்னு. பி.சி.ஏ கோர்ஸ் எடுத்தேன். அப்பறம் தான் தோனுச்சு ஏன்டா எடுத்தோமுனு, ஏன்னா ப்ரோக்ராம், சாப்ட்வேர் அப்படிங்கற வார்த்தையவே அப்பதான் கேள்விபட்டேன். பேசாம பி.காம், பி.பி.எம் எடுத்து இருக்கலாமேனு தோணுச்சு. சரி என்ன ஆனாலும் இத கத்துக்கணும்னு முடிவு எடுத்தேன்.
அப்பறம் எங்க லெக்சரர் கேட்டாங்க இங்க யார்க்கு ஈமெயில் ஐடி இருக்குனு. நைசா பின்னாடி திரும்பி பாத்தேன் எத்தன பேருக்கு இருக்குனு. அப்புறம் என்னோட சந்தோசத்துக்கு அளவே இல்ல. ஏன்னா ஒருத்தன் தான் கைய தூக்கி இருந்தான். ஆஹா எல்லாரும் என்னைய
போலத்தான் போலன்னு தான் சந்தோசம். அப்புறம் ஒரு வருத்தம் என்னன்னா கைய தூக்குனவன் ஹீரோ ஆயிட்டான்(காரணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை).
காலேஜ் லேப்ல முதல் நாள் இன்டர்நெட் அட்ரஸ் பார்ல நான் டைப் பண்ணுன முதல் வெப்சைட் யாஹூ தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இன்டர்நெட் உபயோகத்த தெரிஞ்சுகிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு தான் கூகிள் சர்ச் இன்ஜின், ஜிமெயில், சாட்டிங் என எந்த இன்டெர்நெட் அறிவு கொஞ்சம் விரிவடைஞ்சது. வெறும் ஈமெயில் மட்டும் தான் அனுப்பலாம்னு நெனச்ச நான் இன்டர்நெட் பத்தி நெறய தெரிஞ்சுக்க விடுமுறை நாட்களில் கல்லூரி லேபை முழுமையா உபயோகபத்தி கிட்டேன்.

ப்ளாக் அறிமுகம்:
நான் இன்டர்நெட் தொடர்ந்து உபயோகபடுத்தி வந்தாலும் ப்ளாக் பத்தி ஓரளவுக்கு தெரியும். ஆனா தமிழ் ப்ளாக் படிச்சதில்ல. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆனந்தவிகடனில் கேபிள்சங்கர் அவர்களின் ப்ளாக் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரது ப்ளாக் தான் நான் வாசித்த முதல் வலைப்பூ, அப்போது இருந்து இன்று வரை பல ப்ளாக்குகள் வாசித்து வருகிறேன். பின்பு தான் ஜாக்கிசேகர், பரிசல்காரன், கருந்தேள் இன்னும் பல பிளாக்கர்கள் வலைத்தளம் அறிந்து கொண்டேன்.



நான் இன்னைக்கு இந்த ப்ளாக் எழுதறேன்னா அதுக்கு அன்னைக்கு ஆனந்தவிகடன்-ல கேபிள்சங்கர் அவர அறிமுக படுத்தியதுதான். எனவே இந்த நேரத்துல ஆனந்தவிகடனுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுகறேன்.

3 comments:

ST கொரிய,ர் ஒரு துன்பியல் அனுபவம்

கடந்த வாரம் இணையம மூலமாக PENDRIVE ஒன்று ஆர்டர் செய்தேன்..
மூன்று நாட்களில் டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். பின்பு மூன்ற நாள் கழித்து குன்னத்தூர் ST COURIER இல் இருந்து அழைத்தார்கள். உங்களுக்கு கொரியர் வந்துள்ளது வந்து வாங்கிகங்கனு, நான் பதிலுக்கு "ஏங்க ஊத்துக்குளில இருக்கற நான் எப்படி பதினைந்து கிலோ மீட்டர் வந்து வாங்கறது. நீங்க எப்படியாவது அனுப்புங்க"னு சொல்லிட்டேன்.
அப்பறம் ரெண்டு நாள் ஆகியும் கொரியர் வரல. சரி என்ன ஆச்சுனு குன்னத்தூர் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டா "அது அந்த அன்னைக்கே ஹெட் ஆபீஸ் திருப்பி அனுபிட்டோம், வந்துருமுனு சொன்னாங்க, அதுக்கு ரெண்டு நாள் ஆச்சு இனி எப்ப வரும் கேட்டா "நாங்க திருப்பி அனுபிட்டோம் எங்களுக்கு தெரியாது"-னு சொல்லிட்டாங்க, என்னடா இது ஆன்லைன ஆர்டர் பண்ணி வம்பா போச்சேனு PENDRIVE ஆர்டர் செஞ்ச கம்பெனிக்கு கால் பண்ணேன் (நல்லவேல அது டோல்-ப்ரீ நம்பர்). அவங்க கொரியர் புக்கிங் நம்பர் தந்தாங்க.
அத வச்சு ST COURIER வெப்சைட்ல டிரேக் பண்ணுனா, அது திருப்பூர் ஆபீஸ் வந்து மூணு நாள் ஆகுதுன்னு காட்டுது. சரின்னு திருப்பூர் ஆபீஸ்க்கு கால் பண்ணி கேட்டா. கொரியர் புக்கிங் நம்பர், பேரு, அட்ரஸ் சொல்லுங்க பாத்துட்டு கால் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணினதுதான் அப்புறம் எடுக்கவே இல்ல.
அடுத்த நாள் போன் பண்ணி சத்தம் போட்டேன், அதுக்கு ஒரு ரீசன் சொன்னாங்க பாருங்க,
சாரி சார், அட்ரஸ் அழிஞ்சுபோச்சு, உங்க அட்ரஸ் சொல்லுங்க, நாளைக்கு டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். சரினு விட்டுட்டேன்.
அந்த அன்னைக்கு சாய்ங்காலம் திருப்பூர் போக வேண்டி இருந்ததால, கொரியர் கையோட வாங்கிட்டு வந்தர்லாம்னு வாங்கிட்டு கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு வரவேண்டியதா போச்சு..

ஒரு பொருள வாங்கிட்டு ஒரு வாரம் நான் பட்ட அவஸ்த இருக்கே அய்யய்யோ னு..
சந்தானம் தான் ஞாபகம் வர்றார்

0 comments:

எங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்து உள்ள படம்தான் எங்கேயும் எப்போதும்...
ஒரு படத்தின் திரைக்கதை என்பது, படம் பார்க்க வருபவரை படத்தின் உள்ளே இழுத்து அதன் உடன் பயணிக்க வேண்டும், அந்த முயற்சியில் புதுமுக இயக்குனர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...
இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்...




எங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன ?

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தும் மோதிக்கொள்கின்றன.
திருச்சியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் ஜெய், அஞ்சலி , சரவ் வும்
அதேபோல் சென்னையில் இருந்து செல்லும் பேருந்தில் அனன்யாவும் பயணம் செய்கிறார்கள்.. யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலமாக சொல்லி இருக்கிறார்கள்...



பிளாஷ் பேக்கில் வரும் சரவ் - அனன்யா காட்சிகளும், ஜெய் - அஞ்சலி காதல் காட்சிகளும்
மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
ஜெய் இன்னோசென்ட் கேரக்டரில் அழகாக பொருந்துகிறார் அஞ்சலி கொஞ்சம் துடுக்கான கதாபத்திரத்தில் எல்லோர் மனதையும் கவர்கிறார், சரவ் - ன், சென்னை வாலிபராகவும்,
அனன்யா கிராமத்து பெண் வேடத்திலும ரசிக்க வைக்கின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சத்யா. இவர்கள் இருவரும் படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் மிகை இல்லை..

இரண்டரை மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ஒரு விழிப்புணர்வு எற்படுத்தியுள்ளார் இயக்குனர் சரவணன்.. வாழ்த்துக்கள்

இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் பார்கவும்..
Don't Miss the Travel..

4 comments:

பிள்ளையார் சுழி

எப்படியோ ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சு.. ஆனா என்னத்த எழுதறது.. ரெண்டு நாளா
பென்சில தலைல சொறிஞ்சுட்டு யோசிச்சா ஒண்ணுமே எழுத தோண மாட்டேங்குது...
அட ப்ளாக் எழுத பென்சில் எதுக்கு எடுத்தனு நீங்க கேக்கறது தெரியுது.... ஸ்கூல் படிக்கறப்ப இருந்து எக்ஸாம் எழுதும் போது.. மண்டைல சொறிஞ்சு.. எதையாவது தோணறது எழுதுவோம்ல.. அது மாதிரி தாங்க
மறுபடியும் பென்சில் எடுக்க வேண்டியதா போச்சு..
ஆனாலும் பாருங்க ஒண்ணுமே தோண மாட்டேங்குது....

அப்பறம் எதை தொடங்குனாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவாங்க.. அதனால ஒரு சென்டிமென்டா.. இந்த டைட்டில்...

அப்பறம் நான் எழுதறதுல குற்றம், குறை, பிழை, தவறு இருந்தா மன்னிச்சுடுங்க

3 comments: