ஒரு தலைப்பட்சம்




ஒரு தலைப்பட்சம் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகும்

"முதலாளிய வர்க்கத்தை புரிந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது"

"பெருநில உடைமையாளர்களைப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிந்து கொள்வது"

"எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளாமல் கடந்தகாலத்தை மட்டும் புரிந்து கொள்வது"

"முழுமையைப் புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது"

"சாதனைகளைப் புரிந்து கொள்ளாமல் குறைபாடுகளை மட்டும் புரிந்து கொள்வது"

"எதிர்வழக்காடுபவரைப் புரிந்து கொள்ளாமல் வழக்காடுபவரை மட்டும் புரிந்து கொள்வது"

"வெளிப்படையான புரட்சிப்பணியை புரிந்து கொள்ளாமல் ரகசிய புரட்சிப்பணியை மட்டும் புரிந்து கொள்வது"

முதலியன ஒரு தலைப்பட்ச போக்காகும் - தோழர்- மாவோ

0 comments:

THE DARK KNIGHT RISES


இந்த வருடத்தில் உலக பேட்மேன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்.அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணங்கள் நோலன், மற்றும் அவர் இதற்கு முன் இயக்கிய BATMAN BEGINS மற்றும் THE DARK KNIGHT படங்களின் வெற்றியும் தான்.
சூப்பர் ஹீரோ வரிசையில் பேட்மேன் பற்றி தெரியும் என்றாலும் பேட்மேன் சீரீஸ் படங்களை நான் பார்த்ததில்லை.நான் அதிகம் ரசித்த சூப்பர் ஹீரோ SPIDERMAN மட்டுமே, மற்றபடி சூப்பர்மேன் ரிட்டர்ன் மட்டும் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பேட்மேன் படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தும் அப்படங்களை பார்க்க இயலவில்லை. ஆக எனக்கு பேட்மேன் பேர தவிர ஒன்னும் தெரியாது. அப்பறம் கொஞ்ச நளைக்கு முன்னாடி நோலன், பேட்மேன் பத்தி எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க நானும் கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் லக்கி லிமட் ப்ளாக்ல அத பத்தி படிக்க போக, ஆர்வம் மிகுதில பழைய ரெண்டு படங்களையும் பார்த்துட்டு முதல் நாள் செகண்ட் ஷோவுக்கு போனேன்.

THE DARK KNIGHT RISES

ஆரம்ப காட்சியில் இந்த கதையின் வில்லன் BANE விமானத்தில் ரஷ்ய நியுக்ளியர் விஞ்ஞானி ஒருவரை கடத்துகிறான். பின் அந்த விமானத்தை விபத்துக்குள்ளாகி தப்புகிறான். இங்கே கோதம் சிட்டியில் ஹார்வி டென்டின் எட்டாவது நினைவு நாளில் உண்மையை சொல்லவரும் கமிஷ்னர் கோர்டன் அதை சொல்லாமலே பின் ஒரு நாளில் சொல்வதாக சொல்லி அந்த உரையை தன்னுடனே வைத்துகொள்கிறார். தனது காலில் அடிபட்ட காரணத்தால் மாளிகையை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறார் புரூஸ் வெயின். அவரது மாளிகைக்கு திருட வரும் கேட் வுமன் அங்கிருந்து நெக்லஸ் ஒன்றை திருடி செல்கிறாள் அத்துடன் புரூஸ் வெயின் கைரேகையும் திருடப்படுகிறது. அந்த கைரேகையை மாபியா கும்பலுக்கு விற்கும் போது. அந்த இடம் கமிஷ்னர் கோர்டன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து செல்லும் கோர்டன் பேன் இருப்பிடத்தை அறிகிறார். பேன் அவரை தாக்கி தூக்கி விசுகிறான். அவர் கீழ் நிலை போலீசான ஜான் பிளேக மூலம் காப்பாற்றபடுகிறார். கோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்துக்கு ப்ரூஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். அவரிடம் பேட்மேன் இனி வரமாட்டன் என்று சொல்கிறார். கோதம் சிட்டி மிக ஆபத்தில் இருப்பதாகவும் BANEஐ சமாளிக்க பேட்மேன் வரவேண்டும் என்றும் கோர்டன் சொல்கிறார்.


இந்த நிலையில் பேன் கோதம் நகரத்தில் படிப்படியாக தன்னுடய வில்லத்தன செயல்களில் ஈடுபட துவங்குகிறான். புரூஸ் வேய்ன் நிறுவனம் நட்டத்தில் இயக்குவதாக கூறி புதிய இயக்குனராக மிராண்டா டேட் என்ற பெண் நியமிக்க படுகிறாள். அவளிடம் தன்னுடைய நியுக்ளியர் எனர்ஜி ப்ராஜெக்ட் திட்டம் பற்றியும் கூறி அதனை புரூஸ் வேய்ன் அவளிடம் ஒப்படைக்கிறார். பின் புரூஸ் பேட்மேனாக மாறி கேட் வுமனிடம் பேன் இருப்பிடத்தை கட்டுமாறு கேட்க அவள் பேன் இடத்தை காட்டுகிறாள். அங்கு பேனால் புரூஸ் வேய்ன் முதுகு உடைக்கபட்டு பேட்மேன் பாதாள சிறையில் வைக்கபடுகிறார். இங்கு நகரில் பல இடங்களில் அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பேன் வேய்னின் நியுக்ளியர் எனர்ஜியை ரஷ்ய விஞ்ஞானி உதவியுடன் அணுகுண்டாக மாற்றி, பின் அவரையும் கொன்றுவிட்டு கொஞ்ச நாளில் நகரம் அழியபோகிறது என்று சொல்லிவிடுகிறான்.
இதன் பின் புரூஸ் வேய்ன் பாதாள சிறையில் இருந்து தப்புகிறரா? பேனை சமாளித்தாரா ? கோதம் சிட்டியை காப்பாற்றினாரா? என்பதை ரொம்ப நீளமாக சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவே, பேட்மேனும் சாதாரண மனிதனே அவனுக்குள்ளும் பல போராட்டங்கள் இருக்கிறது, எனவே மக்கள் எல்லா சூழ்நிலைகளிலும் யாராவது ஒருவர் தங்களை காப்பாற்ற வருவார் என்ற எண்ணத்தை கொள்ளாமல் மக்கள் தங்களுக்கான அளவில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஆளாளுக்கு எழுதி தள்ளி விட்டார்கள், சிலர் படம் அருமை என்றும், சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சிலர் மொக்கை என்றும் சொல்கிறார்கள், ஆனால் பேட்மேன் பேரை மட்டும் கேள்விப்பட்டு, சில பல பதிவுகளின் பேட்மேன் பற்றி தெரிந்து கொண்டு சென்றதாலும், மற்றும் இதற்கு முந்தைய பாகங்களை தற்சமயம் பார்த்து விட்டு சென்றதால் என்னவோ படம் எனக்கு நன்றாகவே இருந்தது போல் இருந்தது.
மற்றபடி ரசிகர்களை மோசம் செய்யவில்லை என்றே சொல்லுவேன்.
நோலன் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள் மற்றும் அவரின் படங்களை பற்றி அறிந்துகொள்ளவும் THE DARK KNIGHT RISES உதவியது.

இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில பதிவுகள் இங்கே
கருந்தேள்
பாதசாரி
லக்கி லிமட்
ஹாலிவுட்ராஜ்
யுவகிருஷ்ணா

0 comments:

பில்லா 2 - An REBOOT Of Don



மங்காத்தா படத்தோட வெற்றிக்கு பின் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, குறிப்பாக அஜித் ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் பில்லா 2. ஓபனிங் கிங் என்று சொல்லியதாலோ என்னமோ பில்லா படத்துக்கு டிக்கெட் விலை அட்டகாசமாய் ஏற்றி வைத்து இருந்தார்கள். ஆன்லைனில் கூட டிக்கெட் நூறு ரூபாய்க்கு குறைவாக இல்லை.தேவை இல்லாமல் தியேட்டர்காரன் கொள்ளைஅடிக்க விரும்பாததால் ரெண்டு மூணு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று நான் இருந்தேன். ஆனால் முதல் நாளே பார்க்கவேண்டிய நிலைமையும் வந்து பார்த்தும் விட்டேன். பில்லா படத்த எல்லோரும் எழுதி தள்ளி இருந்தாலும் நானும் எழுதறேன். ஆனாலும் அப்போது படத்த பத்தி எழுத நேரம் இல்லாமையால் இப்போது பதிவிடுகிறேன்.
ஹாலிவுட் இயக்குனர்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள ரீபூட் பண்ணிட்டு இருக்கும் போது நாமும் பண்ணுவோம்னு ஆரம்பிச்சாங்க பில்லாவை பில்லா II என்று.இந்த ரீபூட் இத்யாதிகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒத்துவருமா,? என்ற கேள்வி தொக்கி எழுந்து அதே எண்ணத்துடனே உள்ளே சென்று அமர்ந்தேன்.அஜித் ஸ்க்ரீனில் ட்ரெய்லரில் பேசிய அந்த வசனத்துடன் தோன்ற ஆரம்பித்ததுமே அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து பிளாஷ்பாக் ஆரம்பிக்கிறது. எந்தவித இலக்கும் இல்லாமல் இலங்கை அகதியாக இந்தியா வந்து இறங்குகிறார் அஜித். அங்கிருந்து கடத்தல் தொழில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து சென்னை, கோவா, ரஷ்யா என படிப்படியாக எப்படி பில்லா மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்ற கதைதான் பில்லா.
படத்தில் உயிர் நாடியே அஜித் மட்டுமே, அவர் மட்டுமே படம் முழுவதும் முழுக்க வியாபித்து இருந்தார். மற்ற அனைவரும் எதாவது ஒரு காட்சியில் வருகிறார்கள் பின் இன்னொரு காட்சியில் ஏனோ காரணத்துக்காக கொல்லபடுகிறார்கள்.ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாவிதத்திலும் ஸ்டைலிஷான ஹாலிவுட் தரத்திற்கு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்ப். அஜித் டயலாக் பேசும்போது எல்லாம் தியேட்டரில் ஒரே ஆரவாரம், "என் பேரு கேட்டல ? பில்லா டேவிட் பில்லா.." என்று சொல்லிக்கொண்டே சுடும் போது விசில் காதை பிளந்தது. ஆர்.டி ராஜாசேகரின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும், வசனகர்த்தா முருகனும், அஜித்தும் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார்கள். யுவனின் பின்னணி இசை ஓகே.
மதுரை பொண்ணு பாடலுக்கு தேடி தேடி ஹீரோயின்களை ஆட வைத்தவர்கள், புதிது புதிதாக லொகேசன்களுக்கு மெனக்கெட்டவர்கள், படு ஸ்டைலிஷாக எடுக்க முனைந்தவர்கள் திரைக்கதைக்கும் கொஞ்சம் கவனம் எடுத்து இருந்து இருந்தால்.யுவனின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லைஒரே இரைச்சல் பாடல்களில். பின்னணி இசையில் சில இடங்களில் மட்டும் ஓகே. ஒவ்வொரு கேரக்டரும் திடீர் என்று வருகிறார்கள் அப்படி வருகிற ஒரு கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. ஏன் அஜித் அகதியாக வருகிறார், எதற்காக கடத்துகிறார், ஏன் அவர் இத்தனை கொலைகள் செய்கிறார், ஏன் அவர் காதலிப்பதில்லை இப்படி பல ஏன் -கள் படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது.
பார்வதி ஓமனகுட்டன் அஜித்தின் அக்கா மகளாக வருகிறார். அவர் ஒருதலையாக அஜித் மேல் காதல் கொண்டு மாமா மாமா என்று ரெண்டு மூணு காட்சிகளில் வருகிறார் .அப்புறம் சாகடிக்கப்படுகிறார், அவர் சாகும் போது ரசிகர்களுக்கு எந்தவித ரியாக்சனும் இல்லை. படத்தில் இவரை கூட பார்க்க முடிகிறது, ஆனால் இன்னொரு ஹீரோயின் என்று சொல்லப்பட்ட புருனோ அப்துல்லா கோவா தாதா சுதன்சு பாண்டே வின் காதலியாய் வந்து பின் அஜித்தின் காதலியாய் மாறும் இவரை எங்கிருந்து தான் பிடித்தார்களோ பார்க்கவே சகிக்க வில்லை. பேசாமல் நமீதாவையே நடிக்க வைத்து இருக்கலாம். அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படத்தை எடுத்து சொதப்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் இறுதியில் எல்லோரும் கொல்லப்பட்டு அஜித்தும், அவரது கூட்டாளியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். படத்திற்கு இவ்வளவு செலவு செய்து , சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் இருந்தும் படம் பார்த்த ஒரு தாக்கம் ஒரு சதவீதம் கூட இல்லை.
இனி டான்..... அடுத்த பாகத்தில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.

ஆர்ப்பட்டமில்லாத அந்த அமைதியான ஸ்டைலிஷான அஜீத்துக்காக மட்டும் படம் பார்க்கலாம்.

0 comments:

பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்


வெகு நாட்களாகவே நான் இந்த பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் சீரீஸ் படங்களை பற்றி எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஏனோ எழுத முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்கான, நேரம் என்பது இப்போதுதான் கிடைத்துள்ளது என்று நினக்கிறேன். இதையும் ஒரே பதிவில் முடித்து விடலாமா அல்லது ஒவ்வொரு பார்ட்டையும் தனித்தனி பதிவாக போடலாமா என்றும் பல யோசனைகளும் தோன்றுகிறது.ஆனாலும் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் பற்றி நிறைய பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.இதை எழுத, இந்த படத்தின் வரலாறு பற்றியோ , பெரிதாக விமர்சனமோ செய்யவோ எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததை, அறிந்து கொண்டதை இங்கு எழுதுகிறேன் இதை படித்துவிட்டு கடுப்பனால் நான் பொறுப்பல்ல.

பேண்டசி கதைகள், சயின்ஸ் பிக்சன், சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் ஹாலிவுட்காரர்களை அடித்துக்கொள்ள முடியாது. அவர்கள் ஒவ்வொரு இயக்குனர்கள் வித்தியாசமான கதைகலன்களில் அசத்துவார்கள். அதற்கான இன்ஸ்பிரேசன் காமிக்ஸ் ஹீரோகளாகவோ, பேண்டசி நாவலாகவோ, வரலாற்று நிகழ்வாகவோ இருக்கும். ஒரு பார்ட் ஹிட் அடித்து விட்டால் உடனே அடுத்த பார்ட் ஆரம்பித்து விடுவார்கள், அதற்க்கு ஹாரிபாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், போன்ற படங்களே உதாரணம். அப்படி பல பாகங்கள் வந்து வெற்றி அடைந்த படங்களும் உண்டு, இரண்டாவது பாகத்திலேயே மண்ணை கவ்விய படங்களும் உண்டு.
ஹாலிவுட் படங்கள் பலருக்கு பிடிக்கும், அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை மிகவும் பிடித்துவிடும். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படவரிசைகளில் ஒன்றுதான் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன். பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் தனி ஒரு கதைக்களனுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை செல்வதாலும், ஜானி டெப்பின் சேட்டைகளாலும் , பிரமாண்ட கப்பல்கள் மற்றும் கடல் காட்சிகள், அருமையான கிராபிக்ஸ் , கதையின் போக்கிற்கு வலு சேர்க்கும் பின்னணி இசை இப்படி பல காரணங்களால் இந்த சீரீஸ் என்னை மிகவும் கவர்ந்துவிட்து.
இனி இந்த படங்கள் பத்தி அடுத்த பதிவில்...............

1 comments:

THE AMAZING SPIDERMAN (2012)


  சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் உடனே சில ஹீரோக்கள் டக்கென மனதில் தோன்றுவார்கள்.  அதில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஹீரோக்கள் பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன். அனால் ஸ்பைடர்மேன் மட்டும் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு டக்கென உடனடியாய் மனதில் தோன்றுபவர். அதற்கு காரணம் அவன் மிக இயல்பான சாதாரண மாணவன்,  அவனது அப்பாவித்தனம், மற்றும் மற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இல்லாத தனித்துவமான சிலந்திதன்மை. அகவே ஸ்பைடர்மேன் மிக எளிதாக எல்லோரையும் கவர்ந்துவிட்டார்.  மற்ற சூப்பர் ஹீரோக்களை போல் அல்லாமல் எடுத்த எடுப்பிலேயே வசூலில் பட்டையை கிளப்பியவர்  ஸ்பைடர்மேன்.

  இந்த  ஸ்பைடர்மேன் இதற்கு முன் வந்த பாகங்களின் தொடர்ச்சி அல்ல.  ஸ்பைடர்மேனின் சிறுவயது முதல் நடந்தவற்றை  UNTOLD STORY என்று இதனை படமாக்கி இருக்கிறார்கள். இதற்க்கு முன் வந்த  ஸ்பைடர்மேன் பாகங்கள் பார்த்தவர்களுக்கு இந்த அமேசிங் ஸ்பைடர்மேன் எளிதாக புரியும்.

அமேசிங் ஸ்பைடர்மேன் படத்தின் கதை என்ன?

கதை பீட்டர் பார்கரின் ஐந்து வயதில் தொடங்குகிறது. பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் தன் ஒரு கையினை இழந்த அவரது நண்பர் Dr.கர்ட் கான்னர்ஸ்-ம் பல்லிகள் வாலை இழந்தால் மீண்டும் வளர்வது போல. மனிதர்களுக்கும் தங்கள் உறுப்புகளை இழந்தால் மீண்டும் உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். ஏனோ காரணத்தால் ரிச்சர்ட் பார்க்கர் ஆராய்ச்சி குறிப்புகளை மறைத்துவிட்டு தனது தம்பி பென் பார்க்கரின் வீட்டில் பீட்டரை விட்டுவிட்டு மனைவியுடன் செல்கின்றர். சில நாட்களில் விமான விபத்தில் பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் அவரது மனைவியும் இறந்து விட்டனர் எனத்தகவல் கிடைக்கிறது. அதன் பின் பென்னின் வீட்டிலேயே வளர்கிறான் பீட்டர். அறிவியல் மாணவனான பீட்டர் தனது தந்தையை பற்றி தெரிந்து கொள்ள முற்படுகையில், தனது தந்தையின் ஆராய்ச்சி குறிப்புகளை பற்றி அறிந்து கொள்ள நேரிடுகிறது . இந்த விசயத்துடன் கர்ட் கான்னர்ஸ் பற்றியும் அறிந்து கொள்கிறான். அவரை சந்திப்பதற்காக அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் ஆஸ்கார்ப் நிறுவனத்திற்கு வருகிறான். அங்கு அவர் செயற்கையாக மனிதனுக்கு உடல் பாகங்கள் வளரும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார். அங்கு அவரை சந்தித்து தான் ரிச்சர்ட் பார்க்கரின் மகன் என்று அறிமுகபடுத்தி கொள்கிறான். அங்குள்ள ஆராய்ச்சி கூடத்தில் உள்ள சிலந்தி அவனை கடித்து விடுகிறது. அது கடித்ததின் விளைவாக அவனுக்கு சில விசேச திறமைகள் வருகிறது.

அதனை அறிந்து அதற்கேற்ப தன்னை மெருகேற்றி கொள்கிறான் .இந்நிலையில் பென் பார்க்கர் திருடன் ஒருவனால் கொல்லபடுகிறார். அவனை கண்டு பிடித்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகையில் பீட்டர் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். எளிதில் அறுந்து விடாத செயற்கை வலை ஒன்றை அவனுக்காக உருவாக்கி கொள்கிறான். தனக்கிருக்கும் விசேச திறமை மூலம் அவன் நகரின் குற்றங்களை தடுக்கிறான். அனால் அவன் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறான் என்று போலீஸ் அவனை தேடுகிறது. இதற்கிடையில் பள்ளியில் தனது தோழியான க்வென் ஸ்டேஸியுடன் காதல் கொள்கிறான் .க்வென் ஸ்டேஸி ஸ்பைடர்மேனை தேடும் போலீஸ் அதிகாரியின் மகள். இந்நிலையில் பீட்டர் கர்ட் கான்னர்ஸ் ஐ சந்தித்து அவரது ஆராய்ச்சிக்கு உதவுகிறான். அவரது சோதனை முடியும் முன்பே கர்ட் கான்னர்ஸ் ஆஸ்கார்பபிலிருந்து வெளியேற்றப்படுகிறார். தன் ஆராய்ச்சியினை கொண்டு தன் கையினையே சோதிக்கிறார், ஆனால் தவறான பார்முலாவால் அவர் ராட்சத பல்லியாக மாறிவிடுகிறார். அதன் பின் அவரை போலவே எல்லா மனிதர்களையும் மாற்ற முயல்கிறார்... இதற்கு பின் ஸ்பைடர்மேன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார்.? கர்ட் கான்னர்ஸ் ஐ எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறார் என்பதை வெண்திரையில் காண்க..... ஆரம்பம் முதலே மிக மெதுவாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.. தெளிவான டிடைலிங் கதையை நமக்கு சொல்ல முயன்று வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் ஸ்பைடர்மேன் சாகசங்களை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இது ஏமாற்றமே... ஸ்பைடர்மேன் கதையில் வரும் வில்லன்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இம்ப்ரெஸ் செய்துவிடுவதில்லை... அந்தவகையில் இந்த வில்லனும் எடுபடவில்லை..ஆனால் இந்த படம் ஸ்பைடர்மேன் உருவான கதையின் அடிப்படை என்பதால்.. இனி வரபோகும் பாகங்களில் நல்ல ஆக்சனை எதிர்பார்க்கலாம்... இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்களுக்கு பின்வரும் லிங்குகளை கிளிக்கவும்

The Amazing Spider-Man (2012) - English
The Amazing Spider-Man reboot
இந்த படத்தை 3D யில் பார்த்தேன் அதிகமான காட்சிகளில் பேசிக்கொண்டே இருப்பதால் 2D யிலேயே பார்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. சில காட்சிகளே இருந்தாலும் 3D காட்சிகள் நன்றாகவே உள்ளது.படம் எனக்கு பிடித்து இருந்தது.ஏனென்றால் ஸ்பைடர்மேனை எனக்கு பிடிக்கும்

0 comments:

ஐ.பி.எல்


மெகா சீரியல் மாதிரி எப்ப முடியும் இழுத்துகிட்டு இருந்த ஐ.பி.எல் , ஒரு வழியாக கொல்கத்தாவின் வெற்றியுடன் இந்த வருடம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இந்த ரெண்டு மாசமா நம்ம ஆளுங்க கிரிக்கெட்ட படுத்துன பாடோ, இல்ல கிரிக்கெட் நம்மள படுத்துன பாடோ பெரும்பாடு. சலூன், டீ கடை, ஆபீஸ், வீடு, காலேஜ், எப்.எம், டிவி னு எங்க போனாலும் இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தான்.
" நேத்து எவண்டா அவனுக்கு கடைசி ஓவர் கொடுத்தது ",
"போயும் போயும் அவன ஒபெனிங் எறக்கி விட்டு இருக்கான் அவன் பந்தை திண்ணே அவுட் ஆயிட்டான்",
"நேத்து கெய்ல் அடிச்சான் பாரு அடி வாண வேடிக்கைதான் போ", ,
"அஸ்வினுக்கு முன்ன மாதிரி பந்து எடுபடறது இல்ல",
"நல்ல பிளேயர்ஸ் எல்லாம் நெறைய இருக்கறானுங்க டீம்ல எடுக்க மாட்டேங்குறாங்க",
"நேத்து நைட் மணி பனிரெண்டு ஆயிடுச்சுபா துங்கறதுக்கு,
"இவனுங்க எப்பவுமே இப்படித்தான் ஜெயிக்கற மாதிரி இருந்துட்டு தோத்து போவானுங்க",
"எல்லாம் காசு விளையாடுது பா",
"இதுல எல்லாம் ஆடுவானுங்க வேற நாட்டுக்கு போனா மண்ணை கவ்விட்டு வருவானுங்க",
இப்படி இதையெல்லாம் டீ கடைலயோ, கோவில் திண்ணைலயோ எவனாவது பேசிட்டு இருக்கறப்ப எதாவது பெருசோ, கிரிக்கெட் புடிக்காதவனோ வந்து "ஏன்டா அவுங்க கிரிக்கெட் ஆடுனா உங்களுக்கு என்னடா சோத்துக்கா வருது, போய் வேலை வெட்டிய பாருங்கடா "-னு அவுங்கள கடுப்பேத்தி விட்டுட்டு இருப்பாங்க.(ஏன்னா அவங்க வேலை இல்லாமதான் வெட்டியா இதை பேசிட்டு இருப்பாங்க) அரைகுறையா ஐ.பி.எல்லையும், பி.சி.சி.ஐ யும் தெரிந்த சிலர் அதன் பின்புலன்களை விமர்சித்து விட்டு அவர்களும் அதையே பார்க்க செல்கின்றனர்.
என்னை பொறுத்தவரை, மன்னிக்கவும். ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும், ஐ.பி.எல் லில் விளையாடும் வீரர்களையும், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களையும் பொறுத்தவரை பக்காவான வியாபாரம் என்பது மட்டுமே உண்மை. மற்ற கிரிக்கெட் வாரியங்கள் சம்பளங்களை நம்ம ஊர் கம்பெனிகள் போல இழுத்துதடித்து கொடுப்பது போல் கொடுத்து கொண்டு இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நிலைமையோ பரிதாபம். சம்பளத்துக்கே போராட்டம் பண்ணி வாங்க வேண்டிய சூழல். நம்ம நாட்டு மக்கள் மாதிரி கிரிக்கெட் பைத்தியங்களும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருமானம் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் புரிந்து கொண்ட தொழில் அதிபர்களும், நடிகர் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு முதலீடு செய்தனர். இந்த பணபுழக்கம் வேறு நாட்டு வீரர்களையும் இங்கு இழுத்து வந்தது(அந்த வீரர்களும் சொந்த நாட்டுக்கு ஆடாம ஐ.பி.எல்லுக்கு ஆடுவது வேறு விஷயம்). இந்த ஐ.பி.எல் ஒவ்வொரு வினாடிக்கும் பல கோடிகளை பரிவர்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. இதை விட கொடுமை என்னவென்றால் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை கூட பேச இயலாமல் செய்து விடுகின்றது. இந்த விஷயங்களை ஐ.பி.எல் மறக்கடிப்பதால் என்னவோ இதை எல்லாம் இந்த பொம்மை அரசு கிரிக்கெட் பார்ப்பதை போல வேடிக்கை பார்க்கிறதோ?
டிஸ்கி: இவ்வளவு விஷயங்களை பேசும் எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது என்பது இல்லை. அது விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கும் போது மட்டுமே. வியாபாரம் ஆனா பின்பு நமக்கு என்ன சோத்துக்கா வருது.....

0 comments:

கலகலப்பு - சினிமா


என்னடா பொழுதே போகல எதாவது கொஞ்சம் ஜாலியா டைம் பாஸ் பண்ணனும்னு நீங்க நெனச்சிட்டு.. டிவி பொட்டிய திருப்பி ஐ.பி.ல் பாக்க ஆரம்பிச்சுடாதிங்க... கொஞ்சம் உங்க நண்பர்களோட தியேட்டருக்கு போய் பார்த்தால்.. ஒரு நல்ல காமெடி படம்..இந்த மசாலா கபே.. அதாவது ஐ மீன் கலகலப்பு...
ரெண்டு அண்ணன் தம்பிக. அண்ணன் விமல் தம்பி சிவா. கும்பகோணத்துல விமல் அவங்க தாத்தா, அப்பா நடத்திட்டு வந்த மசாலா கபேவ நடத்திட்டு வரார். ஆனா என்னமோ ஹோட்டல இவரால சரியா நடத்த முடியல.. அதுக்காக கடன் மேல கடன் வாங்கியும் எல்லாம் இவருக்கு மோசமாவே நடந்துட்டு இருக்குது. இப்படி நடக்கற அந்த மசாலாகபே- ல சமையல்காரரா வேலை செய்யற தாத்தாவோட பேத்திதான் ஒவியா. அப்பறம் மினிஸ்டர் வீட்டுல திருடி போலிஸ்ல மாட்டி 1 வருசம் ஜெயில்ல இருந்து திரும்பி வராரு சிவா. கும்பகோணத்துக்கு புது ஹெல்த் இன்ஸ்பெக்டரா வராங்க அஞ்சலி. மசாலாகபே ல மோசமான சாப்பாடுனு சொல்லி ரெண்டு மாசத்துக்குள்ள ஹோட்டல்ல சரியான சாப்பாடு போடலனா இழுத்து மூடிடுவேனு அஞ்சலி நோட்டீஸ் அனுப்பிடுறாங்க. ஓரு கட்டத்துல மசாலாகபே-வ விக்கற நிலைமை வந்துடுமோனு இருக்கறப்ப.. சமையல் தாத்தாவோட ஐடியா படி.. பழைமையான உணவுகளை புது புது வகையா செஞ்சு ஹோட்டல டெவலப் பன்றாங்க, சகோதரர்கள் ரெண்டு பேரும். இதுக்கு நடுவுல அண்ணன் அஞ்சலியையும், தம்பி ஒவியாவையும் காதலிக்கறாங்க. இது ஒரு பக்கம் இருக்க. 10 கோடி வைரத்தை மறைச்சு எமாத்தி இன்சூரன்ஸ் வாங்க ட்ரை பண்ணிட்டு, வைரத்தை செல்போனுல வச்சு தன் மச்சான் கிட்ட கொடுத்து அனுப்பறாரு சுப்பு.ஆனா அந்த போன் பல கை மாறி சிவாகிட்ட வருது... அந்த வைரத்தை தேடி கும்பகோணம் வராங்க..சுப்பு & கோ. அப்பறம் மசாலாகபே வை எப்படியாவது வித்து நல்ல கமிசன் வாங்க டிரை பண்ணுராரு விமலோட இன்ஸ்பெக்டர் நண்பன். இப்படி போய்ட்டு இருக்கறப்ப ஊருக்கு போன அஞலிக்கு அவங்க மாமன் சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுது. அதனால அஞ்சலியோட ஊருக்கு போய் அவங்கள கூட்டிட்டு வர போகறாரு விமல். போயிட்டு வர வரைக்கும் மசாலாகபே-வை சிவாவ பாத்துக்க சொல்லிட்டு ஊருக்கு போறார். அங்க சந்தானத்தை ஏமாத்தி அஞ்லிய கூட்டி வர விமல் பிளான் போட்டு சொதப்ப, திரும்பி கும்பகோணம் வந்துடறார். இங்க சிவா சீட்டு ஆட்டத்துல கபேவை இன்ஸ்பெக்டர் கிட்ட அடமானம் வச்சு தோத்து போறாரு. திரும்பி இங்க வந்த விமலுக்கு எப்படி பிரச்சனைய சமாளிக்கறதுனு நெனைக்கறப்ப, சுப்பு & கோ கிட்ட சிவாவும் விமலும் மாட்டிகிறாங்க.. இதுக்கு அப்பறம் அண்ணன் தம்பிக சுப்புகிட்ட இருந்து தப்பிச்சாங்களா,? மசாலாகபேவ மீட்டாங்களா?, காதலிய கைபுடிச்சாங்களாங்கறதை தியேட்டர்ல போய் பாருங்க.
காமெடி ஒன்ன மட்டும் கைல வச்சு. அந்த கதைக்கு சரியான கேரக்டர்கள பொருத்தி அதை ரசிகர்கள்கிட்ட சரியா கொண்டு சேர்த்ததிலேயெ வெற்றி பெற்று விட்டார் இயக்குனர் சுந்தர்.சி. படத்துல வர ஒவ்வொரு கேரக்டரும் காமெடில கலந்து கட்டி அடிக்கறாங்க.. விமல் படத்துல் இவர்தான் மெயின் ஹீரோ ஹோட்டல நடத்த கடன் வாங்கி, போட்ட பிளான் எல்லாம் பெயிலா போய் கடன்காரங்க கிட்ட பம்முரதும், அஞ்சலிகிட்ட எப்படியாவது நோட்டீஸ வாபஸ் வாங்க வைக்க சிவாவுடன் சேர்ந்து பிளான் போடுவதும் என அட்டகாசமாய் நடித்திருக்கிறார். துபாய் ரிட்டர்ன் என்று பொய் சொல்லிக்கொண்டு வந்து, இளவரசுவை எமாற்றுவது, பர்தா போட்டுக்கொண்டு கடையில் திருடுவது, டைமிங்காமெடிகளை அசால்ட்டாக அடிப்பது என பட்டையகெளப்பி இருக்கிறார்.
இடைவேளைக்கு அப்பறம் சந்தானம் வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இருந்தாலும் வெட்டுப்புலி என்கிற கேரக்டரில் அதகளப்படுத்தியிருக்கிறார். மனுசன் ஒவ்வொரு பிரேமிலும் பின்னுகிறார் என்றாலும் ஒரு கல் ஓரு கண்ணாடி கொடுத்த இம்பாக்ட் இல்லை. அஞ்சலி, ஒவியா இருவரும் அண்ணன் தம்பிகளின் காதலிகளாக வந்து கெட்ட ஆட்டம் போட்டு ரசிகர்களின் ஹார்ட்பீட் எகிறவைத்து உள்ளனர். மற்றும் இளவரசு, சுப்பு, மனோபாலா, V.S. ராகவன், ஜான் விஜய் ஆகியோரும் கலகலப்பாக திரைக்கதை நகர உதவி உள்ளனர். விஜய் எபினேசரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். ஒளிப்பதிவு U.K. செந்தில்குமார் தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். எடிட்டிங் பிரவீண் & ஸ்ரீகாந்த். படத்திற்கு தன் காமெடி வசனங்களால் தூள் பரத்தி உள்ளனர் பத்ரி மற்றும் கேபிள் சங்கர். படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ், சொதப்பல்கள் இருந்தாலும். சரியான காமெடி எண்டெர்டெய்னராக ரசிகர்களை சந்தோசபடுத்தி உள்ளது. இந்த கோடைவிடுமுறைக்கு ரிலாக்ஸ் பண்ணனும்னா - கலகலப்பு போய் பாருங்க...

0 comments:

59வது தேசிய விருதுகள்


59 வது தேசிய விருதுகள் அறிவிக்கபட்டுவிட்டன...
தமிழ் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது


1. சிறந்த தமிழ் படம் - வாகை சூட வா.
2.சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் -
அழகர்சாமியின் குதிரை.
3. சிறந்த எடிட்டிங் - பிரவீன்( ஆரண்யகாண்டம்).
4. சிறந்த பக்கபலமான நடிகர் - அப்புகுட்டி(அழகர்சாமியின் குதிரை).
5. இந்திராகாந்தி சிறந்த அறிமுக இயக்குனர் விருது -
தியாகராஜன் குமாரராஜா( ஆரண்யகாண்டம்).

மேலே குறிப்பிட்ட படங்கள். எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நல்ல படங்கள் தோல்வியை தழுவியது எனக்கு வருத்தமே. ஆக நல்ல கதைக்கரு உள்ள படங்களை தயவுசெஞ்சு பாருங்க மக்களே.....

0 comments:

திருப்பூர் புத்தக கண்காட்சி - 2012

எங்க ஊருக்கு பக்கத்து ஊரான திருப்பூரில் புத்தக கண்காட்சி.. இன்று தொடங்கி பிப்ரவரி 5 வரைக்கும் நடக்கிறது.. எனவே புத்தகப்பிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொழுது போகாமல் வீட்டில் இருப்பவர்கள், ஆபிசில் இருப்பவர்கள் எல்லோரும் திரளாக வந்து புத்தக கண்காட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் கண்டிப்பாக புத்தக கண்காட்சி வருவேன். நான் வந்த அப்பறம் என்னை அடையாளம் காணும் யாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்ககூடாது என இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் புத்தகங்கள் நிறைய வாங்க என்னிடம் குறைவான தொகையே இருப்பதால் வசதி உள்ள அன்பர்கள் எனக்கு புத்தகங்கள் வாங்கி பரிசளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments:

புதிய ஆண்டு 2012

ரொம்ப நாள் ஆகி போச்சு ப்ளாக்ல பதிவிட்டு..
புது வருசம் தொடங்கியாச்சு ஏதாவது பதிவு போடனும்..


அதனால.................




லேட்டா சொன்னாலும் பரவாயில்லைனு எல்லாருக்கும் சொல்றேன்.

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.....

0 comments: