ஐ.பி.எல்


மெகா சீரியல் மாதிரி எப்ப முடியும் இழுத்துகிட்டு இருந்த ஐ.பி.எல் , ஒரு வழியாக கொல்கத்தாவின் வெற்றியுடன் இந்த வருடம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இந்த ரெண்டு மாசமா நம்ம ஆளுங்க கிரிக்கெட்ட படுத்துன பாடோ, இல்ல கிரிக்கெட் நம்மள படுத்துன பாடோ பெரும்பாடு. சலூன், டீ கடை, ஆபீஸ், வீடு, காலேஜ், எப்.எம், டிவி னு எங்க போனாலும் இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தான்.
" நேத்து எவண்டா அவனுக்கு கடைசி ஓவர் கொடுத்தது ",
"போயும் போயும் அவன ஒபெனிங் எறக்கி விட்டு இருக்கான் அவன் பந்தை திண்ணே அவுட் ஆயிட்டான்",
"நேத்து கெய்ல் அடிச்சான் பாரு அடி வாண வேடிக்கைதான் போ", ,
"அஸ்வினுக்கு முன்ன மாதிரி பந்து எடுபடறது இல்ல",
"நல்ல பிளேயர்ஸ் எல்லாம் நெறைய இருக்கறானுங்க டீம்ல எடுக்க மாட்டேங்குறாங்க",
"நேத்து நைட் மணி பனிரெண்டு ஆயிடுச்சுபா துங்கறதுக்கு,
"இவனுங்க எப்பவுமே இப்படித்தான் ஜெயிக்கற மாதிரி இருந்துட்டு தோத்து போவானுங்க",
"எல்லாம் காசு விளையாடுது பா",
"இதுல எல்லாம் ஆடுவானுங்க வேற நாட்டுக்கு போனா மண்ணை கவ்விட்டு வருவானுங்க",
இப்படி இதையெல்லாம் டீ கடைலயோ, கோவில் திண்ணைலயோ எவனாவது பேசிட்டு இருக்கறப்ப எதாவது பெருசோ, கிரிக்கெட் புடிக்காதவனோ வந்து "ஏன்டா அவுங்க கிரிக்கெட் ஆடுனா உங்களுக்கு என்னடா சோத்துக்கா வருது, போய் வேலை வெட்டிய பாருங்கடா "-னு அவுங்கள கடுப்பேத்தி விட்டுட்டு இருப்பாங்க.(ஏன்னா அவங்க வேலை இல்லாமதான் வெட்டியா இதை பேசிட்டு இருப்பாங்க) அரைகுறையா ஐ.பி.எல்லையும், பி.சி.சி.ஐ யும் தெரிந்த சிலர் அதன் பின்புலன்களை விமர்சித்து விட்டு அவர்களும் அதையே பார்க்க செல்கின்றனர்.
என்னை பொறுத்தவரை, மன்னிக்கவும். ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும், ஐ.பி.எல் லில் விளையாடும் வீரர்களையும், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களையும் பொறுத்தவரை பக்காவான வியாபாரம் என்பது மட்டுமே உண்மை. மற்ற கிரிக்கெட் வாரியங்கள் சம்பளங்களை நம்ம ஊர் கம்பெனிகள் போல இழுத்துதடித்து கொடுப்பது போல் கொடுத்து கொண்டு இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நிலைமையோ பரிதாபம். சம்பளத்துக்கே போராட்டம் பண்ணி வாங்க வேண்டிய சூழல். நம்ம நாட்டு மக்கள் மாதிரி கிரிக்கெட் பைத்தியங்களும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருமானம் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் புரிந்து கொண்ட தொழில் அதிபர்களும், நடிகர் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு முதலீடு செய்தனர். இந்த பணபுழக்கம் வேறு நாட்டு வீரர்களையும் இங்கு இழுத்து வந்தது(அந்த வீரர்களும் சொந்த நாட்டுக்கு ஆடாம ஐ.பி.எல்லுக்கு ஆடுவது வேறு விஷயம்). இந்த ஐ.பி.எல் ஒவ்வொரு வினாடிக்கும் பல கோடிகளை பரிவர்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. இதை விட கொடுமை என்னவென்றால் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை கூட பேச இயலாமல் செய்து விடுகின்றது. இந்த விஷயங்களை ஐ.பி.எல் மறக்கடிப்பதால் என்னவோ இதை எல்லாம் இந்த பொம்மை அரசு கிரிக்கெட் பார்ப்பதை போல வேடிக்கை பார்க்கிறதோ?
டிஸ்கி: இவ்வளவு விஷயங்களை பேசும் எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது என்பது இல்லை. அது விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கும் போது மட்டுமே. வியாபாரம் ஆனா பின்பு நமக்கு என்ன சோத்துக்கா வருது.....

0 comments:

கலகலப்பு - சினிமா


என்னடா பொழுதே போகல எதாவது கொஞ்சம் ஜாலியா டைம் பாஸ் பண்ணனும்னு நீங்க நெனச்சிட்டு.. டிவி பொட்டிய திருப்பி ஐ.பி.ல் பாக்க ஆரம்பிச்சுடாதிங்க... கொஞ்சம் உங்க நண்பர்களோட தியேட்டருக்கு போய் பார்த்தால்.. ஒரு நல்ல காமெடி படம்..இந்த மசாலா கபே.. அதாவது ஐ மீன் கலகலப்பு...
ரெண்டு அண்ணன் தம்பிக. அண்ணன் விமல் தம்பி சிவா. கும்பகோணத்துல விமல் அவங்க தாத்தா, அப்பா நடத்திட்டு வந்த மசாலா கபேவ நடத்திட்டு வரார். ஆனா என்னமோ ஹோட்டல இவரால சரியா நடத்த முடியல.. அதுக்காக கடன் மேல கடன் வாங்கியும் எல்லாம் இவருக்கு மோசமாவே நடந்துட்டு இருக்குது. இப்படி நடக்கற அந்த மசாலாகபே- ல சமையல்காரரா வேலை செய்யற தாத்தாவோட பேத்திதான் ஒவியா. அப்பறம் மினிஸ்டர் வீட்டுல திருடி போலிஸ்ல மாட்டி 1 வருசம் ஜெயில்ல இருந்து திரும்பி வராரு சிவா. கும்பகோணத்துக்கு புது ஹெல்த் இன்ஸ்பெக்டரா வராங்க அஞ்சலி. மசாலாகபே ல மோசமான சாப்பாடுனு சொல்லி ரெண்டு மாசத்துக்குள்ள ஹோட்டல்ல சரியான சாப்பாடு போடலனா இழுத்து மூடிடுவேனு அஞ்சலி நோட்டீஸ் அனுப்பிடுறாங்க. ஓரு கட்டத்துல மசாலாகபே-வ விக்கற நிலைமை வந்துடுமோனு இருக்கறப்ப.. சமையல் தாத்தாவோட ஐடியா படி.. பழைமையான உணவுகளை புது புது வகையா செஞ்சு ஹோட்டல டெவலப் பன்றாங்க, சகோதரர்கள் ரெண்டு பேரும். இதுக்கு நடுவுல அண்ணன் அஞ்சலியையும், தம்பி ஒவியாவையும் காதலிக்கறாங்க. இது ஒரு பக்கம் இருக்க. 10 கோடி வைரத்தை மறைச்சு எமாத்தி இன்சூரன்ஸ் வாங்க ட்ரை பண்ணிட்டு, வைரத்தை செல்போனுல வச்சு தன் மச்சான் கிட்ட கொடுத்து அனுப்பறாரு சுப்பு.ஆனா அந்த போன் பல கை மாறி சிவாகிட்ட வருது... அந்த வைரத்தை தேடி கும்பகோணம் வராங்க..சுப்பு & கோ. அப்பறம் மசாலாகபே வை எப்படியாவது வித்து நல்ல கமிசன் வாங்க டிரை பண்ணுராரு விமலோட இன்ஸ்பெக்டர் நண்பன். இப்படி போய்ட்டு இருக்கறப்ப ஊருக்கு போன அஞலிக்கு அவங்க மாமன் சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுது. அதனால அஞ்சலியோட ஊருக்கு போய் அவங்கள கூட்டிட்டு வர போகறாரு விமல். போயிட்டு வர வரைக்கும் மசாலாகபே-வை சிவாவ பாத்துக்க சொல்லிட்டு ஊருக்கு போறார். அங்க சந்தானத்தை ஏமாத்தி அஞ்லிய கூட்டி வர விமல் பிளான் போட்டு சொதப்ப, திரும்பி கும்பகோணம் வந்துடறார். இங்க சிவா சீட்டு ஆட்டத்துல கபேவை இன்ஸ்பெக்டர் கிட்ட அடமானம் வச்சு தோத்து போறாரு. திரும்பி இங்க வந்த விமலுக்கு எப்படி பிரச்சனைய சமாளிக்கறதுனு நெனைக்கறப்ப, சுப்பு & கோ கிட்ட சிவாவும் விமலும் மாட்டிகிறாங்க.. இதுக்கு அப்பறம் அண்ணன் தம்பிக சுப்புகிட்ட இருந்து தப்பிச்சாங்களா,? மசாலாகபேவ மீட்டாங்களா?, காதலிய கைபுடிச்சாங்களாங்கறதை தியேட்டர்ல போய் பாருங்க.
காமெடி ஒன்ன மட்டும் கைல வச்சு. அந்த கதைக்கு சரியான கேரக்டர்கள பொருத்தி அதை ரசிகர்கள்கிட்ட சரியா கொண்டு சேர்த்ததிலேயெ வெற்றி பெற்று விட்டார் இயக்குனர் சுந்தர்.சி. படத்துல வர ஒவ்வொரு கேரக்டரும் காமெடில கலந்து கட்டி அடிக்கறாங்க.. விமல் படத்துல் இவர்தான் மெயின் ஹீரோ ஹோட்டல நடத்த கடன் வாங்கி, போட்ட பிளான் எல்லாம் பெயிலா போய் கடன்காரங்க கிட்ட பம்முரதும், அஞ்சலிகிட்ட எப்படியாவது நோட்டீஸ வாபஸ் வாங்க வைக்க சிவாவுடன் சேர்ந்து பிளான் போடுவதும் என அட்டகாசமாய் நடித்திருக்கிறார். துபாய் ரிட்டர்ன் என்று பொய் சொல்லிக்கொண்டு வந்து, இளவரசுவை எமாற்றுவது, பர்தா போட்டுக்கொண்டு கடையில் திருடுவது, டைமிங்காமெடிகளை அசால்ட்டாக அடிப்பது என பட்டையகெளப்பி இருக்கிறார்.
இடைவேளைக்கு அப்பறம் சந்தானம் வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இருந்தாலும் வெட்டுப்புலி என்கிற கேரக்டரில் அதகளப்படுத்தியிருக்கிறார். மனுசன் ஒவ்வொரு பிரேமிலும் பின்னுகிறார் என்றாலும் ஒரு கல் ஓரு கண்ணாடி கொடுத்த இம்பாக்ட் இல்லை. அஞ்சலி, ஒவியா இருவரும் அண்ணன் தம்பிகளின் காதலிகளாக வந்து கெட்ட ஆட்டம் போட்டு ரசிகர்களின் ஹார்ட்பீட் எகிறவைத்து உள்ளனர். மற்றும் இளவரசு, சுப்பு, மனோபாலா, V.S. ராகவன், ஜான் விஜய் ஆகியோரும் கலகலப்பாக திரைக்கதை நகர உதவி உள்ளனர். விஜய் எபினேசரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். ஒளிப்பதிவு U.K. செந்தில்குமார் தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். எடிட்டிங் பிரவீண் & ஸ்ரீகாந்த். படத்திற்கு தன் காமெடி வசனங்களால் தூள் பரத்தி உள்ளனர் பத்ரி மற்றும் கேபிள் சங்கர். படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ், சொதப்பல்கள் இருந்தாலும். சரியான காமெடி எண்டெர்டெய்னராக ரசிகர்களை சந்தோசபடுத்தி உள்ளது. இந்த கோடைவிடுமுறைக்கு ரிலாக்ஸ் பண்ணனும்னா - கலகலப்பு போய் பாருங்க...

0 comments: