tag:blogger.com,1999:blog-88525416900945630442024-03-13T09:45:38.885-07:00நானும் எழுதறேன்வரும்முன் காப்போம் என்பது பழமொழி,
வரட்டும் பார்ப்போம் என்பது என்மொழிRajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-80009707828397676882013-01-07T02:48:00.001-08:002013-01-07T02:48:21.531-08:00கிரிக்கெட்டும் நானும் உலகில் வேறு எந்த விளையாட்டை போலவும் கிரிக்கெட் இல்லை. ஆனால் கிரிக்கெட் அளவிற்கு வேறு எந்த விளையாட்டும் விளையாடப்படுவதில்லை. உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து அதிகம் பேரால் விளையாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். கால்பந்து, ஹாக்கியை விளையாட ஆட்களும் இடமும் அதிகமாக தேவை. ஆனால் இந்திய நகரங்களின் சாலைகளில், தெருக்களில் விளையாட கிரிக்கெட் தான் ஏதுவானது.இதற்கு ஒரு மட்டையும் பந்தும் இருந்தாலே போதுமானது. </br> கிரிக்கெட் மேல் முன்பு எனக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லை.ஆனால் சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை வீடு, ரோடு, காடு என எல்லா எடத்துலயும் விளையாடி இருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய தூங்காமல் பார்த்து இருக்கிறேன் . அப்போது பாகிஸ்தானை வீழ்த்தும் போதும் கடைசி ஓவரில் இந்தியா திரில் வெற்றி பெறும்போதும் துள்ளி குதித்த அந்த ஆர்வம் இப்போது இல்லை. இந்த பதிவுல எனக்கும் கிரிக்கெட்டுக்குமான சின்ன ப்ளாஷ்பேக்</br><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-DegfHr8n0VI/UOqdlANFykI/AAAAAAAAAQU/iQYkpRBwfaE/s1600/classicindia-srilankamatches_1999worldcup.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="400" width="324" src="http://2.bp.blogspot.com/-DegfHr8n0VI/UOqdlANFykI/AAAAAAAAAQU/iQYkpRBwfaE/s400/classicindia-srilankamatches_1999worldcup.jpg" /></a></div><br />
<br />
1997- 1998 அந்த வருடங்களில்தான் கிரிகெட் எனக்கு அறிமுகம் ஆனது. அப்போது எங்க ஊரில் கிரிக்கெட் Tournament நடந்துகொண்டு இருந்தது. நாங்களும் ஆர்வத்தின் காரணமாக அங்கு செல்வோம். நாம போன உடனே என்ன பேட் கொடுக்கவா போறாங்க. பவுண்டரில பந்து பொறுக்கி வீசத்தான் நம்மள உபயோகப்படுத்துவாங்க. அதுக்கே சரியான போட்டியா இருக்கும். எவன் மொதல்ல ஒடி பந்து எடுத்து வீசுவதுனு. இப்படியாக கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சோம். சரியா சொல்லனும்னா. 1999 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்தான், தொலைக்காட்சியில் எனக்கு கிரிக்கெட் அறிமுகம். அந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா விளையாடும் போட்டிகள், அரையிறுதி, இறுதி போட்டிகள் மட்டும் தூர்தர்ஷனில் போடுவார்கள். நான் இன்றுவரையில் மறக்காமல் இருக்கும் இரண்டு போட்டிகள். அந்த உலகக்கோப்பையில் இந்தியா - இலங்கை விளையாடிய ஆட்டம். அந்த போட்டியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட்டின் ஆட்டம் இன்னும் மறக்கமுடியாதது. அந்த போட்டியில் இருந்துதான் கங்குலி ரசிகன் ஆனேன். அடுத்த போட்டி அந்த உலகக்கோப்பை போட்டியில் துரதிஷ்டமாக இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்காவும் - ஆஸ்திரேலியாவும் மோதிய அரையிறுதி போட்டி. அந்த போட்டியில் இருந்து தான் குளூஸ்னர் பிடித்து போனார். </br>.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-1D2rkg4X678/UOqnFCfrARI/AAAAAAAAAQk/a2FPWpmfIFo/s1600/SGE.CSK23.240907172916.photo00.photo.default-512x407.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="318" width="400" src="http://4.bp.blogspot.com/-1D2rkg4X678/UOqnFCfrARI/AAAAAAAAAQk/a2FPWpmfIFo/s400/SGE.CSK23.240907172916.photo00.photo.default-512x407.jpg" /></a></div><br />
<br />
நான் கிரிகெட் விளையாடுவேனே தவிர பிரமாதமான ஆட்டம் எல்லாம் இல்லை. உயர்நிலையில் படிக்கும்போது ஆள் இல்லை என்றால் மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள். அப்படி சேர்ந்த ஆட்டத்திலும். பந்தும் வீச தரமாட்டானுக. பேட் பண்ணவும் தரமாட்டானுக. ஆனா பேட் வாய்ப்பு விக்கெட் எல்லாம் போன கடைசில தான் தருவாங்க. அதுக்காகவே மத்தவங்க சீக்கிரம் அவுட் ஆகனும்னு வேண்டிகிட்டு இருப்பேன். பள்ளி, உள்ளுர் என கிரிகெட் தொடர்ந்து கொண்டு இருந்தது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-Q_gysARjmpk/UOqn2TlQF7I/AAAAAAAAAQ0/NFxuo_2xzPk/s1600/39914.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="400" width="286" src="http://2.bp.blogspot.com/-Q_gysARjmpk/UOqn2TlQF7I/AAAAAAAAAQ0/NFxuo_2xzPk/s400/39914.jpg" /></a></div><br />
<br />
கிரிக்கெட்டின் அதீத ஈடுபாட்டின் காரணமாக 10 ஆம் வகுப்பில். நல்ல மதிப்பெண் பெரும் வாய்ப்பை இழந்தேன். உயர்நிலை பள்ளி சென்றதும் கிரிக்கெட் விளையாடுவது படிப்படியாக குறைந்தது. அதனாலோ என்னவோ +2 வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். கல்லூரி சென்ற பின். கிட்டதட்ட மறந்தே விட்டேன். ஆனால் பார்த்து கொண்டு இருந்தேன். ஐ,பி.எல் ஆரம்பித்த பின்,கிரிக்கெட் அரசியல், கார்பரேட் கைகளில் தஞ்சம் புகுந்து,பணம் கொழிக்கும் பணக்கார விளையாட்டாக மாறி போனதாலோ? அல்லது பணிச்சுழல் காரணமாகவோ? ஏன் என்று தெரியவில்லை எனக்கு முன்பு இருந்த ஆர்வம் இப்போது இல்லை. சில விசயங்கள் காலம் கடந்த பின்பு தான் எனக்கு புரிந்தது . அந்த வகையில் இப்போது கிரிக்கெட் பார்பதற்கு தடா போட்டு கொண்டேன் . அனால் இப்போது மட்டையை கையில் எடுத்துவிட்டேன். வார விடுமுறையில் விளையாட ஆரம்பித்தாயிற்று. <br />
( நானே விடனும்னு நெனச்சாலும் கிரிகெட் என்னை விடாது போல இருக்கு).<br />
Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-72837240455051512142013-01-07T01:55:00.000-08:002013-01-07T01:55:09.265-08:00Life Of Pi - 3D<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
</div>லைப் ஆப் பை படத்தோட ட்ரைலர் முதல் தடவையா அரைகுறையா பார்த்தேன். என்னமோ பாலிவுட் படம் போல இருக்குது. கப்பல், புலின்னு எல்லாம் காட்றானுங்களே , ஏற்கனவே கடந்த ரெண்டு,மூணு மாசமா வந்த படங்கள பாத்து நொந்து போய், பீட்சா, துப்பாக்கி-னு பாத்து கொஞ்சம் டீ குடிச்ச மாதிரி தெம்பா இருக்கேன் . இனி இந்த படமும் நம்ம லைப் ல முகமூடி , போட்டுக்கிட்டு தாண்டவம் ஆடிடுச்சுனா நம்மளும் skyfall ஆக வேண்டியது தான்னு நெனச்சுட்டு இருந்தேன். அப்பறம் படமும் ரிலீஸ் ஆச்சு, நம்ம பயலுகளும் இந்த படம் பார்க்கலையா,ஒரு தகவலும் காணோம்னு,யோசிச்சுகிட்டே இருந்தப்ப நம்ம மின்சாரவாரியம் மூலமா அதிசயமா கரண்ட் வந்துச்சு. நம்மளும் வந்த கரண்டுக்கு எப்படி நம்ம பங்க குடுக்கறதுன்னு யோசிச்சேன். ரொம்ப நாளா மின்சாரத்த பாக்காம இருக்கற டிவி கண்ணுல பட்டுச்சு அப்பறோம் அடுத்த ஐந்தாவது செகண்ட் ஒளியோடு, ஒலியையும் பரப்பியது. அந்தநேரம் எதேச்சையா மறுபடி ட்ரைலர் பார்த்தேன், அட நல்லா இருக்குதேனு.</br>அப்பறமா தான் தெரிஞ்சுது படத்த நம்ம நாட்டுல எடுத்துருக்காங்கனு.அப்பறம் கூகுள் சர்ச் பண்ணி மறுபடி ட்ரைலர் பார்த்ததுல நம்ம டைரக்டர் ஆங்-லீனு தெரிஞ்சுது. ஆனா இந்த பேர எங்கயோ கேள்விப்பட்டு இருக்கோமேனு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா புருஸ் லீ, ப்ரெட் லீ, சாம் லீ இப்படி லீயாவே நமக்கு நெறைய பேரு தெரியறதால இந்த லீ கேள்விப்பட்ட மாதிரி இருக்குதோனு விக்கிபீடியா தட்டுனதுல தெரிஞ்சுது croching tiger hidden dragon, hulk பட டைரக்டர்னு. இவர போய் மறந்துட்டோமே இந்த சினிமா உலகம் நம்மை மன்னிக்குமா?, அதனால இந்த படாத பாத்து அதுக்கு பரிகாரம் பண்ணிடலாம்னு இந்த படம் பாத்துட்டேன்,. லேட்டா பார்த்தாலும் பாருங்க இந்த படத்துக்கு ஒரு பதிவு போடற அளவுக்கு ஆகிடுச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி துப்பாக்கி, skyfall , pizza ,சுந்தரபாண்டியன் , தாண்டவம், பார்த்துட்டு எழுதாதவன் இதுக்கு எழுதறேன். அப்படினா இந்த படத்துல ஒன்னும் இல்லையோனு நீங்க நெனச்சுட வேண்டாம். ஆனாலும் விஷயம் இருக்கு. அது என்னனு பாக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-zzok-5bxvqc/ULd8Lfwk44I/AAAAAAAAAPQ/vSpbF9CheRg/s1600/life-of-pi.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="343" width="600" src="http://3.bp.blogspot.com/-zzok-5bxvqc/ULd8Lfwk44I/AAAAAAAAAPQ/vSpbF9CheRg/s400/life-of-pi.jpg" /></a></div>இர்பான் கான் அவர்தான் pi. கனடாவில் வசித்து வரும் அவரை எழுத்தாளர் ஒருவர் சந்திக்கிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி தெரிந்து கொண்டு கதை எழுத வருகிறார். இர்பான் கான் தனது சிறு வயதில் இருந்து வாழ்கை நிகழ்வுகளை ஆரம்பிக்கிறார். அவரது குடும்பம் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறது, அவரது தந்தை அதுல் ஹசன், அம்மா தபு, அண்ணன் என குடும்பம், அவர்கள் ஒரு மிருககாட்சி சாலையை நடத்தி வருகிறார்கள், ஒரு கட்டத்தில் மிருககாட்சி சாலை மூலம் பணம் சம்பாதிக்க இந்தியாவில் முடியாது. ஆக மிருகங்கள் அனைத்தையும் கனடாவில் விற்று அதன் மூலம் வேறு தொழில் செய்ய கப்பலில், தனது குடும்பம், மற்றும் மிருகங்களுடன் பயணம் செய்கிறார்கள், வழியில் புயல் தாக்குதலில் கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிட ஒரு சிறு படகில் சிறுவன் பை- உடன் ஒரு வரிக்குதிரை, ஒரு கழுதைப்புலி , ஒரு உராங்குட்டான், ஒரு பெங்கால் புலியும் தப்புகின்றன. ஒரு கட்டத்தில் கழுதைப்புலி வரிக்குதிரையும் , குரங்கையும் கொன்றுவிட, கழுதைப்புலி புலி கொன்றுவிடுகிறது. இப்போது படகில் பை மற்றும் புலி மட்டுமே பயணம் செய்கிறார்கள். யாரும் துணைக்கு இல்லாத படகில் பை. புலிக்கு இரை யாகிவிடுவோம் என்ற பயத்துடனே பயணிக்கிறான். சில நிகழ்வுகளுக்குப் பின். பையும் புலியும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். இறுதியில் புலியும் சிறுவனும் எப்படி தப்பிக்கின்றனர் என்பதே கதை. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-a8HD3KQJmXw/UOp4n-gy0rI/AAAAAAAAAPo/Xo1zRlVaF-4/s1600/lifeofpi.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="286" width="400" src="http://2.bp.blogspot.com/-a8HD3KQJmXw/UOp4n-gy0rI/AAAAAAAAAPo/Xo1zRlVaF-4/s400/lifeofpi.jpg" /></a></div>கிராபிக்ஸ், 3d எபக்ட்ஸ் ,சவுண்ட் எபக்ட்ஸ்,இசை என எல்லா துறைகளிலும் பட்டையை கிளப்பியுள்ளனர் இந்த படக்குழுவினர். இந்த படத்தில் வரும் புலி உண்மையான ஒன்றா, க்ராபிஸ்சா என்று கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவிற்கு கடுமையாய் உழைத்துள்ளனர். பெரியவனான பை ஆக நடித்த இர்பான் கானை விட, சிறுவனாக நடித்த சுராஜ் நடிப்பு நன்றாக இருந்தது. இந்த படத்தில் ஒன்றிரண்டு காதல் காட்சிகளும் உண்டு. ஒரு சில தேவை இல்லாத காட்சிகள்,ஒரு சில இடங்களில் வரும் லாஜிக் மிஸ்டேக்ஸ், சில நம்ப முடியாத காட்சிகள் தவிர படம் மிகவும் நன்றாக இருந்தது. அந்த காலத்திய பாண்டிச்சேரி, பை என்ற பெயர் ஏற்பட காரணம், சுராஜ் - சரவந்தி அகியோருக்கிடையான காதல், ரிச்சர்ட் பார்க்கர் என்ற பெயர் புலிக்கு வரும் கரணம் போன்ற சில சுவாரஸ்யமான காட்சிகளின் மூலம் நம்மை ஈர்க்கிறார்கள்.மத உணர்வுகளையும் மனித உணர்வுகளையும் மிருக குணங்களையும் ஒருங்கே சொல்ல முயன்று ஒரு பீல் குட் திரைப்படத்தை தந்துள்ளார் இயக்குனர் ஆங்-லீ. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-q34ThQhI7Hk/UOqZcQ4wCWI/AAAAAAAAAP8/nTb21nWCDG4/s1600/Life-of-Pi-Tiger-Banner.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="213" width="400" src="http://2.bp.blogspot.com/-q34ThQhI7Hk/UOqZcQ4wCWI/AAAAAAAAAP8/nTb21nWCDG4/s400/Life-of-Pi-Tiger-Banner.jpg" /></a></div>இந்த படம் யான் மர்டேல் எழுதி 2001 ஆம் ஆண்டு வெளிவந்த லைப் ஆப் பை நாவலை கொண்டு எடுக்கப்பட்டது . இந்த படம் ஒரு சில ஆஸ்கார்களை வெல்லும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. எதற்கு கிடைக்கிறதோ இல்லையோ கிராபிக்ஸ் பணிக்காக கிடைக்கும். இதை 2டி யில் விட 3டியில் பார்த்தால் நன்றாக இருக்கும். நிச்சயம் ஒரு நல்ல அனுபவமாக இந்த படம் இருக்கும். <br />
Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-18473802200856497472012-08-10T00:19:00.000-07:002012-08-10T00:19:41.915-07:00ஒரு தலைப்பட்சம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-jOUP1oieZdw/UCS19MOtpBI/AAAAAAAAAO0/xfTcpFCBo6k/s1600/75510-004-E0DA2DE8.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="400" width="308" src="http://4.bp.blogspot.com/-jOUP1oieZdw/UCS19MOtpBI/AAAAAAAAAO0/xfTcpFCBo6k/s400/75510-004-E0DA2DE8.jpg" /></a></div><br />
<br />
ஒரு தலைப்பட்சம் போக்கு என்பது பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகும் <br />
<br />
<b>"முதலாளிய வர்க்கத்தை புரிந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கத்தை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
<b>"பெருநில உடைமையாளர்களைப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
<b>"எதிர்காலத்தைப் புரிந்து கொள்ளாமல் கடந்தகாலத்தை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
<b>"முழுமையைப் புரிந்து கொள்ளாமல் தனிப்பகுதியை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
<b>"சாதனைகளைப் புரிந்து கொள்ளாமல் குறைபாடுகளை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
<b>"எதிர்வழக்காடுபவரைப் புரிந்து கொள்ளாமல் வழக்காடுபவரை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
<b>"வெளிப்படையான புரட்சிப்பணியை புரிந்து கொள்ளாமல் ரகசிய புரட்சிப்பணியை மட்டும் புரிந்து கொள்வது" </b><br />
<br />
முதலியன ஒரு தலைப்பட்ச போக்காகும் - <b>தோழர்- மாவோ</b><br />Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-77907682684371913582012-07-28T06:40:00.001-07:002012-07-28T07:20:59.272-07:00THE DARK KNIGHT RISES<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
</div>இந்த வருடத்தில் உலக பேட்மேன் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட படம்.அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணங்கள் நோலன், மற்றும் அவர் இதற்கு முன் இயக்கிய <b>BATMAN BEGINS</b> மற்றும் <b>THE DARK KNIGHT</b> படங்களின் வெற்றியும் தான்.<br />
சூப்பர் ஹீரோ வரிசையில் பேட்மேன் பற்றி தெரியும் என்றாலும் பேட்மேன் சீரீஸ் படங்களை நான் பார்த்ததில்லை.நான் அதிகம் ரசித்த சூப்பர் ஹீரோ <b>SPIDERMAN</b> மட்டுமே, மற்றபடி சூப்பர்மேன் ரிட்டர்ன் மட்டும் பார்த்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பேட்மேன் படங்கள் பார்க்க வாய்ப்பு இருந்தும் அப்படங்களை பார்க்க இயலவில்லை. ஆக எனக்கு பேட்மேன் பேர தவிர ஒன்னும் தெரியாது. அப்பறம் கொஞ்ச நளைக்கு முன்னாடி நோலன், பேட்மேன் பத்தி எல்லாரும் ஆளாளுக்கு பேச ஆரம்பிக்க நானும் கருந்தேள் கண்ணாயிரம் மற்றும் லக்கி லிமட் ப்ளாக்ல அத பத்தி படிக்க போக, ஆர்வம் மிகுதில பழைய ரெண்டு படங்களையும் பார்த்துட்டு முதல் நாள் செகண்ட் ஷோவுக்கு போனேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-24Pqhwr34Y0/UA1AC72uvyI/AAAAAAAAAMo/kjTKxVAZF4g/s1600/the-dark-knight-rises-imax-poster.jpeg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="400" width="270" src="http://1.bp.blogspot.com/-24Pqhwr34Y0/UA1AC72uvyI/AAAAAAAAAMo/kjTKxVAZF4g/s400/the-dark-knight-rises-imax-poster.jpeg" /></a></div><br />
THE DARK KNIGHT RISES<br />
<br />
ஆரம்ப காட்சியில் இந்த கதையின் வில்லன் <b>BANE</b> விமானத்தில் ரஷ்ய நியுக்ளியர் விஞ்ஞானி ஒருவரை கடத்துகிறான். பின் அந்த விமானத்தை விபத்துக்குள்ளாகி தப்புகிறான். இங்கே கோதம் சிட்டியில் ஹார்வி டென்டின் எட்டாவது நினைவு நாளில் உண்மையை சொல்லவரும் கமிஷ்னர் கோர்டன் அதை சொல்லாமலே பின் ஒரு நாளில் சொல்வதாக சொல்லி அந்த உரையை தன்னுடனே வைத்துகொள்கிறார். தனது காலில் அடிபட்ட காரணத்தால் மாளிகையை விட்டு எங்கும் செல்லாமல் இருக்கிறார் புரூஸ் வெயின். அவரது மாளிகைக்கு திருட வரும் கேட் வுமன் அங்கிருந்து நெக்லஸ் ஒன்றை திருடி செல்கிறாள் அத்துடன் புரூஸ் வெயின் கைரேகையும் திருடப்படுகிறது. அந்த கைரேகையை மாபியா கும்பலுக்கு விற்கும் போது. அந்த இடம் கமிஷ்னர் கோர்டன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து செல்லும் கோர்டன் பேன் இருப்பிடத்தை அறிகிறார். பேன் அவரை தாக்கி தூக்கி விசுகிறான். அவர் கீழ் நிலை போலீசான ஜான் பிளேக மூலம் காப்பாற்றபடுகிறார். கோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருக்கும் இடத்துக்கு ப்ரூஸ் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சென்று பார்க்கிறார். அவரிடம் பேட்மேன் இனி வரமாட்டன் என்று சொல்கிறார். கோதம் சிட்டி மிக ஆபத்தில் இருப்பதாகவும் <b>BANE</b>ஐ சமாளிக்க பேட்மேன் வரவேண்டும் என்றும் கோர்டன் சொல்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-Xx-dFQzyayo/UBPgbSb-rTI/AAAAAAAAAOA/WM1_j0oO924/s1600/the-dark-knight-rises-thumb-550x395-47864.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="287" width="400" src="http://1.bp.blogspot.com/-Xx-dFQzyayo/UBPgbSb-rTI/AAAAAAAAAOA/WM1_j0oO924/s400/the-dark-knight-rises-thumb-550x395-47864.jpg" /></a></div><br />
இந்த நிலையில் பேன் கோதம் நகரத்தில் படிப்படியாக தன்னுடய வில்லத்தன செயல்களில் ஈடுபட துவங்குகிறான். புரூஸ் வேய்ன் நிறுவனம் நட்டத்தில் இயக்குவதாக கூறி புதிய இயக்குனராக மிராண்டா டேட் என்ற பெண் நியமிக்க படுகிறாள். அவளிடம் தன்னுடைய நியுக்ளியர் எனர்ஜி ப்ராஜெக்ட் திட்டம் பற்றியும் கூறி அதனை புரூஸ் வேய்ன் அவளிடம் ஒப்படைக்கிறார். பின் புரூஸ் பேட்மேனாக மாறி கேட் வுமனிடம் பேன் இருப்பிடத்தை கட்டுமாறு கேட்க அவள் பேன் இடத்தை காட்டுகிறாள். அங்கு பேனால் புரூஸ் வேய்ன் முதுகு உடைக்கபட்டு பேட்மேன் பாதாள சிறையில் வைக்கபடுகிறார். இங்கு நகரில் பல இடங்களில் அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பேன் வேய்னின் நியுக்ளியர் எனர்ஜியை ரஷ்ய விஞ்ஞானி உதவியுடன் அணுகுண்டாக மாற்றி, பின் அவரையும் கொன்றுவிட்டு கொஞ்ச நாளில் நகரம் அழியபோகிறது என்று சொல்லிவிடுகிறான். <br />
இதன் பின் புரூஸ் வேய்ன் பாதாள சிறையில் இருந்து தப்புகிறரா? பேனை சமாளித்தாரா ? கோதம் சிட்டியை காப்பாற்றினாரா? என்பதை ரொம்ப நீளமாக சொல்லி இருக்கிறார்கள்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-A5ctZpTjpck/UBPm524M42I/AAAAAAAAAOY/ocKcC0rwpOo/s1600/the_dark_knight_rises_poster_lead.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="225" width="400" src="http://1.bp.blogspot.com/-A5ctZpTjpck/UBPm524M42I/AAAAAAAAAOY/ocKcC0rwpOo/s400/the_dark_knight_rises_poster_lead.jpg" /></a></div><br />
படத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவே, பேட்மேனும் சாதாரண மனிதனே அவனுக்குள்ளும் பல போராட்டங்கள் இருக்கிறது, எனவே மக்கள் எல்லா சூழ்நிலைகளிலும் யாராவது ஒருவர் தங்களை காப்பாற்ற வருவார் என்ற எண்ணத்தை கொள்ளாமல் மக்கள் தங்களுக்கான அளவில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தை ஆளாளுக்கு எழுதி தள்ளி விட்டார்கள், சிலர் படம் அருமை என்றும், சிலர் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், சிலர் மொக்கை என்றும் சொல்கிறார்கள், ஆனால் பேட்மேன் பேரை மட்டும் கேள்விப்பட்டு, சில பல பதிவுகளின் பேட்மேன் பற்றி தெரிந்து கொண்டு சென்றதாலும், மற்றும் இதற்கு முந்தைய பாகங்களை தற்சமயம் பார்த்து விட்டு சென்றதால் என்னவோ படம் எனக்கு நன்றாகவே இருந்தது போல் இருந்தது.<br />
மற்றபடி ரசிகர்களை மோசம் செய்யவில்லை என்றே சொல்லுவேன். <br />
நோலன் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள் மற்றும் அவரின் படங்களை பற்றி அறிந்துகொள்ளவும் THE DARK KNIGHT RISES உதவியது.<br />
<br />
இந்த படத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில பதிவுகள் இங்கே<br />
<a href="http://www.karundhel.com/2012/07/the-dark-knight-rises-2012-english.html"><b>கருந்தேள்</b> </a><br />
<a href="http://paathasaari.blogspot.in/"><b>பாதசாரி</b></a><br />
<a href="http://www.luckylimat.com"><b>லக்கி லிமட்</b></a><br />
<a href="http://hollywoodraj.blogspot.in/2012/07/the-dark-knight-rises-2012-mind-blowing.html"><b>ஹாலிவுட்ராஜ்</b> </a><br />
<a href="http://www.luckylookonline.com/2012/07/the-darknight-rises.html"><b>யுவகிருஷ்ணா </b></a>Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-80867137202656007102012-07-28T05:47:00.000-07:002012-07-28T05:47:01.569-07:00பில்லா 2 - An REBOOT Of Don<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
</div><br />
மங்காத்தா படத்தோட வெற்றிக்கு பின் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட, குறிப்பாக அஜித் ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட படம் பில்லா 2. ஓபனிங் கிங் என்று சொல்லியதாலோ என்னமோ பில்லா படத்துக்கு டிக்கெட் விலை அட்டகாசமாய் ஏற்றி வைத்து இருந்தார்கள். ஆன்லைனில் கூட டிக்கெட் நூறு ரூபாய்க்கு குறைவாக இல்லை.தேவை இல்லாமல் தியேட்டர்காரன் கொள்ளைஅடிக்க விரும்பாததால் ரெண்டு மூணு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று நான் இருந்தேன். ஆனால் முதல் நாளே பார்க்கவேண்டிய நிலைமையும் வந்து பார்த்தும் விட்டேன். பில்லா படத்த எல்லோரும் எழுதி தள்ளி இருந்தாலும் நானும் எழுதறேன். ஆனாலும் அப்போது படத்த பத்தி எழுத நேரம் இல்லாமையால் இப்போது பதிவிடுகிறேன்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-CEUEYVQfnPY/UBE0HagtbFI/AAAAAAAAAM4/3WbTDLzBakg/s1600/Billa-2-Stills-012012002122001.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-CEUEYVQfnPY/UBE0HagtbFI/AAAAAAAAAM4/3WbTDLzBakg/s400/Billa-2-Stills-012012002122001.jpg" /></a></div>ஹாலிவுட் இயக்குனர்கள் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள ரீபூட் பண்ணிட்டு இருக்கும் போது நாமும் பண்ணுவோம்னு ஆரம்பிச்சாங்க பில்லாவை பில்லா II என்று.இந்த ரீபூட் இத்யாதிகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒத்துவருமா,? என்ற கேள்வி தொக்கி எழுந்து அதே எண்ணத்துடனே உள்ளே சென்று அமர்ந்தேன்.அஜித் ஸ்க்ரீனில் ட்ரெய்லரில் பேசிய அந்த வசனத்துடன் தோன்ற ஆரம்பித்ததுமே அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கிருந்து பிளாஷ்பாக் ஆரம்பிக்கிறது. எந்தவித இலக்கும் இல்லாமல் இலங்கை அகதியாக இந்தியா வந்து இறங்குகிறார் அஜித். அங்கிருந்து கடத்தல் தொழில் இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து சென்னை, கோவா, ரஷ்யா என படிப்படியாக எப்படி பில்லா மிகப்பெரிய டானாக மாறுகிறார் என்ற கதைதான் பில்லா.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-H4sYOAvb-GQ/UBE7Qj6sRtI/AAAAAAAAANI/Pk6OmurgKDQ/s1600/ajith-billa-2-poster.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="256" width="400" src="http://2.bp.blogspot.com/-H4sYOAvb-GQ/UBE7Qj6sRtI/AAAAAAAAANI/Pk6OmurgKDQ/s400/ajith-billa-2-poster.jpg" /></a></div>படத்தில் உயிர் நாடியே அஜித் மட்டுமே, அவர் மட்டுமே படம் முழுவதும் முழுக்க வியாபித்து இருந்தார். மற்ற அனைவரும் எதாவது ஒரு காட்சியில் வருகிறார்கள் பின் இன்னொரு காட்சியில் ஏனோ காரணத்துக்காக கொல்லபடுகிறார்கள்.ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாவிதத்திலும் ஸ்டைலிஷான ஹாலிவுட் தரத்திற்கு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்ப். அஜித் டயலாக் பேசும்போது எல்லாம் தியேட்டரில் ஒரே ஆரவாரம், "என் பேரு கேட்டல ? பில்லா டேவிட் பில்லா.." என்று சொல்லிக்கொண்டே சுடும் போது விசில் காதை பிளந்தது. ஆர்.டி ராஜாசேகரின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும், வசனகர்த்தா முருகனும், அஜித்தும் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார்கள். யுவனின் பின்னணி இசை ஓகே. <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-EFfy--ou0aQ/UBFC5pcSyxI/AAAAAAAAANY/Hc0EYfMYr0c/s1600/billa2-release-june-3.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="256" width="400" src="http://4.bp.blogspot.com/-EFfy--ou0aQ/UBFC5pcSyxI/AAAAAAAAANY/Hc0EYfMYr0c/s400/billa2-release-june-3.jpg" /></a></div>மதுரை பொண்ணு பாடலுக்கு தேடி தேடி ஹீரோயின்களை ஆட வைத்தவர்கள், புதிது புதிதாக லொகேசன்களுக்கு மெனக்கெட்டவர்கள், படு ஸ்டைலிஷாக எடுக்க முனைந்தவர்கள் திரைக்கதைக்கும் கொஞ்சம் கவனம் எடுத்து இருந்து இருந்தால்.யுவனின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லைஒரே இரைச்சல் பாடல்களில். பின்னணி இசையில் சில இடங்களில் மட்டும் ஓகே. ஒவ்வொரு கேரக்டரும் திடீர் என்று வருகிறார்கள் அப்படி வருகிற ஒரு கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. ஏன் அஜித் அகதியாக வருகிறார், எதற்காக கடத்துகிறார், ஏன் அவர் இத்தனை கொலைகள் செய்கிறார், ஏன் அவர் காதலிப்பதில்லை இப்படி பல ஏன் -கள் படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-h6deSCbGbrY/UBPU4riASnI/AAAAAAAAANo/gVr8AsPr9V4/s1600/Parvathy-Omanakuttan-2.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="267" width="400" src="http://4.bp.blogspot.com/-h6deSCbGbrY/UBPU4riASnI/AAAAAAAAANo/gVr8AsPr9V4/s400/Parvathy-Omanakuttan-2.jpg" /></a></div>பார்வதி ஓமனகுட்டன் அஜித்தின் அக்கா மகளாக வருகிறார். அவர் ஒருதலையாக அஜித் மேல் காதல் கொண்டு மாமா மாமா என்று ரெண்டு மூணு காட்சிகளில் வருகிறார் .அப்புறம் சாகடிக்கப்படுகிறார், அவர் சாகும் போது ரசிகர்களுக்கு எந்தவித ரியாக்சனும் இல்லை. படத்தில் இவரை கூட பார்க்க முடிகிறது, ஆனால் இன்னொரு ஹீரோயின் என்று சொல்லப்பட்ட புருனோ அப்துல்லா கோவா தாதா சுதன்சு பாண்டே வின் காதலியாய் வந்து பின் அஜித்தின் காதலியாய் மாறும் இவரை எங்கிருந்து தான் பிடித்தார்களோ பார்க்கவே சகிக்க வில்லை. பேசாமல் நமீதாவையே நடிக்க வைத்து இருக்கலாம். அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் மட்டுமே நம்பி படத்தை எடுத்து சொதப்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். படத்தின் இறுதியில் எல்லோரும் கொல்லப்பட்டு அஜித்தும், அவரது கூட்டாளியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். படத்திற்கு இவ்வளவு செலவு செய்து , சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் இருந்தும் படம் பார்த்த ஒரு தாக்கம் ஒரு சதவீதம் கூட இல்லை. <br />
இனி டான்..... அடுத்த பாகத்தில் வெளிவருவார் என எதிர்பார்க்கலாம்.<br />
<br />
ஆர்ப்பட்டமில்லாத அந்த அமைதியான ஸ்டைலிஷான அஜீத்துக்காக மட்டும் படம் பார்க்கலாம்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-87629675832141938672012-07-10T01:48:00.000-07:002012-07-10T04:07:36.159-07:00பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
வெகு நாட்களாகவே நான் இந்த பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் சீரீஸ் படங்களை பற்றி எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன்.ஏனோ எழுத முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அதற்கான, நேரம் என்பது இப்போதுதான் கிடைத்துள்ளது என்று நினக்கிறேன். இதையும் ஒரே பதிவில் முடித்து விடலாமா அல்லது ஒவ்வொரு பார்ட்டையும் தனித்தனி பதிவாக போடலாமா என்றும் பல யோசனைகளும் தோன்றுகிறது.ஆனாலும் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் பற்றி நிறைய பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.இதை எழுத, இந்த படத்தின் வரலாறு பற்றியோ , பெரிதாக விமர்சனமோ செய்யவோ எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததை, அறிந்து கொண்டதை இங்கு எழுதுகிறேன் இதை படித்துவிட்டு கடுப்பனால் நான் பொறுப்பல்ல.</br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-v2Rk02gbQVs/T_vq7NLspdI/AAAAAAAAALw/5SWofMSwNOw/s1600/PiratesOfTheCaribbeanWallpaper1024.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="300" width="400" src="http://2.bp.blogspot.com/-v2Rk02gbQVs/T_vq7NLspdI/AAAAAAAAALw/5SWofMSwNOw/s400/PiratesOfTheCaribbeanWallpaper1024.jpg" /></a></div>
</br>
பேண்டசி கதைகள், சயின்ஸ் பிக்சன், சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் ஹாலிவுட்காரர்களை அடித்துக்கொள்ள முடியாது. அவர்கள் ஒவ்வொரு இயக்குனர்கள் வித்தியாசமான கதைகலன்களில் அசத்துவார்கள். அதற்கான இன்ஸ்பிரேசன் காமிக்ஸ் ஹீரோகளாகவோ, பேண்டசி நாவலாகவோ, வரலாற்று நிகழ்வாகவோ இருக்கும். ஒரு பார்ட் ஹிட் அடித்து விட்டால் உடனே அடுத்த பார்ட் ஆரம்பித்து விடுவார்கள், அதற்க்கு ஹாரிபாட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், போன்ற படங்களே உதாரணம். அப்படி பல பாகங்கள் வந்து வெற்றி அடைந்த படங்களும் உண்டு, இரண்டாவது பாகத்திலேயே மண்ணை கவ்விய படங்களும் உண்டு.</br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-vdw5wX8lpN4/T_vr9TrDFYI/AAAAAAAAAL8/B08eFGMXfwQ/s1600/main_image-34668.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="400" src="http://2.bp.blogspot.com/-vdw5wX8lpN4/T_vr9TrDFYI/AAAAAAAAAL8/B08eFGMXfwQ/s400/main_image-34668.jpg" /></a></div>
ஹாலிவுட் படங்கள் பலருக்கு பிடிக்கும், அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை மிகவும் பிடித்துவிடும். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படவரிசைகளில் ஒன்றுதான் பைரேட்ஸ் ஆஃப் கரிபியன். பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் தனி ஒரு கதைக்களனுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதை செல்வதாலும், ஜானி டெப்பின் சேட்டைகளாலும் , பிரமாண்ட கப்பல்கள் மற்றும் கடல் காட்சிகள், அருமையான கிராபிக்ஸ் , கதையின் போக்கிற்கு வலு சேர்க்கும் பின்னணி இசை இப்படி பல காரணங்களால் இந்த சீரீஸ் என்னை மிகவும் கவர்ந்துவிட்து.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-cOxL2qmINu4/T_vsY1nroeI/AAAAAAAAAMI/ykY7UIL50To/s1600/Johnny_Depp%252C_Pirates_of_the_Caribbean_Wallpaper_JxHy.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="300" width="400" src="http://4.bp.blogspot.com/-cOxL2qmINu4/T_vsY1nroeI/AAAAAAAAAMI/ykY7UIL50To/s400/Johnny_Depp%252C_Pirates_of_the_Caribbean_Wallpaper_JxHy.jpg" /></a></div>
இனி இந்த படங்கள் பத்தி அடுத்த பதிவில்...............Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-6021171840972712212012-06-30T08:02:00.000-07:002012-06-30T08:02:10.533-07:00THE AMAZING SPIDERMAN (2012)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-BKKJ3J_au-M/T-7rog-RzcI/AAAAAAAAAKw/pG3xfFsW8g0/s1600/Amazing%2BSpider%2BMan.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="350" width="550" src="http://4.bp.blogspot.com/-BKKJ3J_au-M/T-7rog-RzcI/AAAAAAAAAKw/pG3xfFsW8g0/s320/Amazing%2BSpider%2BMan.jpg" /></a></div>
<pre> சூப்பர் ஹீரோ கதைகள் என்றால் உடனே சில ஹீரோக்கள் டக்கென மனதில் தோன்றுவார்கள். அதில் கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஹீரோக்கள் பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன். அனால் ஸ்பைடர்மேன் மட்டும் சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கு டக்கென உடனடியாய் மனதில் தோன்றுபவர். அதற்கு காரணம் அவன் மிக இயல்பான சாதாரண மாணவன், அவனது அப்பாவித்தனம், மற்றும் மற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இல்லாத தனித்துவமான சிலந்திதன்மை. அகவே ஸ்பைடர்மேன் மிக எளிதாக எல்லோரையும் கவர்ந்துவிட்டார். மற்ற சூப்பர் ஹீரோக்களை போல் அல்லாமல் எடுத்த எடுப்பிலேயே வசூலில் பட்டையை கிளப்பியவர் ஸ்பைடர்மேன்.</pre>
<p><pre> இந்த ஸ்பைடர்மேன் இதற்கு முன் வந்த பாகங்களின் தொடர்ச்சி அல்ல. ஸ்பைடர்மேனின் சிறுவயது முதல் நடந்தவற்றை UNTOLD STORY என்று இதனை படமாக்கி இருக்கிறார்கள். இதற்க்கு முன் வந்த ஸ்பைடர்மேன் பாகங்கள் பார்த்தவர்களுக்கு இந்த அமேசிங் ஸ்பைடர்மேன் எளிதாக புரியும்.</p>
</pre>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-yEbcx_uXxB8/T-72EmgDtDI/AAAAAAAAALE/ZjPu9gg_pwE/s1600/spi3.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="350" width="550" src="http://2.bp.blogspot.com/-yEbcx_uXxB8/T-72EmgDtDI/AAAAAAAAALE/ZjPu9gg_pwE/s320/spi3.jpg" /></a></div>
<b>அமேசிங் ஸ்பைடர்மேன் படத்தின் கதை என்ன?</b></br>
</br>
கதை பீட்டர் பார்கரின் ஐந்து வயதில் தொடங்குகிறது. பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் தன் ஒரு கையினை இழந்த அவரது நண்பர் Dr.கர்ட் கான்னர்ஸ்-ம் பல்லிகள் வாலை இழந்தால் மீண்டும் வளர்வது போல. மனிதர்களுக்கும் தங்கள் உறுப்புகளை இழந்தால் மீண்டும் உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். ஏனோ காரணத்தால் ரிச்சர்ட் பார்க்கர் ஆராய்ச்சி குறிப்புகளை மறைத்துவிட்டு தனது தம்பி பென் பார்க்கரின் வீட்டில் பீட்டரை விட்டுவிட்டு மனைவியுடன் செல்கின்றர். சில நாட்களில் விமான விபத்தில் பீட்டரின் தந்தை ரிச்சர்ட் பார்க்கரும் அவரது மனைவியும் இறந்து விட்டனர் எனத்தகவல் கிடைக்கிறது. அதன் பின் பென்னின் வீட்டிலேயே வளர்கிறான் பீட்டர். அறிவியல் மாணவனான பீட்டர் தனது தந்தையை பற்றி தெரிந்து கொள்ள முற்படுகையில், தனது தந்தையின் ஆராய்ச்சி குறிப்புகளை பற்றி அறிந்து கொள்ள நேரிடுகிறது . இந்த விசயத்துடன் கர்ட் கான்னர்ஸ் பற்றியும் அறிந்து கொள்கிறான். அவரை சந்திப்பதற்காக அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் ஆஸ்கார்ப் நிறுவனத்திற்கு வருகிறான். அங்கு அவர் செயற்கையாக மனிதனுக்கு உடல் பாகங்கள் வளரும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார். அங்கு அவரை சந்தித்து தான் ரிச்சர்ட் பார்க்கரின் மகன் என்று அறிமுகபடுத்தி கொள்கிறான். அங்குள்ள ஆராய்ச்சி கூடத்தில் உள்ள சிலந்தி அவனை கடித்து விடுகிறது. அது கடித்ததின் விளைவாக அவனுக்கு சில விசேச திறமைகள் வருகிறது.
</p>அதனை அறிந்து அதற்கேற்ப தன்னை மெருகேற்றி கொள்கிறான் .இந்நிலையில் பென் பார்க்கர் திருடன் ஒருவனால் கொல்லபடுகிறார். அவனை கண்டு பிடித்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகையில் பீட்டர் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். எளிதில் அறுந்து விடாத செயற்கை வலை ஒன்றை அவனுக்காக உருவாக்கி கொள்கிறான். தனக்கிருக்கும் விசேச திறமை மூலம் அவன் நகரின் குற்றங்களை தடுக்கிறான். அனால் அவன் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறான் என்று போலீஸ் அவனை தேடுகிறது. இதற்கிடையில் பள்ளியில் தனது தோழியான க்வென் ஸ்டேஸியுடன் காதல் கொள்கிறான் .க்வென் ஸ்டேஸி ஸ்பைடர்மேனை தேடும் போலீஸ் அதிகாரியின் மகள். இந்நிலையில் பீட்டர் கர்ட் கான்னர்ஸ் ஐ சந்தித்து அவரது ஆராய்ச்சிக்கு உதவுகிறான். அவரது சோதனை முடியும் முன்பே கர்ட் கான்னர்ஸ் ஆஸ்கார்பபிலிருந்து வெளியேற்றப்படுகிறார். தன் ஆராய்ச்சியினை கொண்டு தன் கையினையே சோதிக்கிறார், ஆனால் தவறான பார்முலாவால் அவர் ராட்சத பல்லியாக மாறிவிடுகிறார். அதன் பின் அவரை போலவே எல்லா மனிதர்களையும் மாற்ற முயல்கிறார்... இதற்கு பின் ஸ்பைடர்மேன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார்.? கர்ட் கான்னர்ஸ் ஐ எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருகிறார் என்பதை வெண்திரையில் காண்க.....
ஆரம்பம் முதலே மிக மெதுவாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.. தெளிவான டிடைலிங் கதையை நமக்கு சொல்ல முயன்று வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் ஸ்பைடர்மேன் சாகசங்களை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு இது ஏமாற்றமே... ஸ்பைடர்மேன் கதையில் வரும் வில்லன்கள் அப்படி ஒன்றும் பெரிதாக இம்ப்ரெஸ் செய்துவிடுவதில்லை... அந்தவகையில் இந்த வில்லனும் எடுபடவில்லை..ஆனால் இந்த படம் ஸ்பைடர்மேன் உருவான கதையின் அடிப்படை என்பதால்.. இனி வரபோகும் பாகங்களில் நல்ல ஆக்சனை எதிர்பார்க்கலாம்...
இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்களுக்கு பின்வரும் லிங்குகளை கிளிக்கவும்</br>
</br>
<a href="http://http://www.karundhel.com/2012/06/amazing-spider-man-2012-english.html">The Amazing Spider-Man (2012) - English</a>
</br>
<a href="http://www.luckylimat.com/2012/06/amazing-spider-man-aka-spider-man.html">The Amazing Spider-Man reboot</a>
</br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-GW6LdeUuzqc/T-8TnRMLe5I/AAAAAAAAALg/3hVV22Hs98A/s1600/the_amazing_spider_man_2012-1920x1200.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="350" width="550" src="http://2.bp.blogspot.com/-GW6LdeUuzqc/T-8TnRMLe5I/AAAAAAAAALg/3hVV22Hs98A/s320/the_amazing_spider_man_2012-1920x1200.jpg" /></a></div>
இந்த படத்தை 3D யில் பார்த்தேன் அதிகமான காட்சிகளில் பேசிக்கொண்டே இருப்பதால் 2D யிலேயே பார்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. சில காட்சிகளே இருந்தாலும் 3D காட்சிகள் நன்றாகவே உள்ளது.படம் எனக்கு பிடித்து இருந்தது.ஏனென்றால் ஸ்பைடர்மேனை எனக்கு பிடிக்கும்Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-18882780560269178432012-05-28T05:22:00.000-07:002012-05-28T05:22:05.936-07:00ஐ.பி.எல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
மெகா சீரியல் மாதிரி எப்ப முடியும் இழுத்துகிட்டு இருந்த ஐ.பி.எல் , ஒரு வழியாக கொல்கத்தாவின் வெற்றியுடன் இந்த வருடம் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இந்த ரெண்டு மாசமா நம்ம ஆளுங்க கிரிக்கெட்ட படுத்துன பாடோ, இல்ல கிரிக்கெட் நம்மள படுத்துன பாடோ பெரும்பாடு. சலூன், டீ கடை, ஆபீஸ், வீடு, காலேஜ், எப்.எம், டிவி னு எங்க போனாலும் இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தான். </br> " நேத்து எவண்டா அவனுக்கு கடைசி ஓவர் கொடுத்தது ",</br> "போயும் போயும் அவன ஒபெனிங் எறக்கி விட்டு இருக்கான் அவன் பந்தை திண்ணே அவுட் ஆயிட்டான்", </br> "நேத்து கெய்ல் அடிச்சான் பாரு அடி வாண வேடிக்கைதான் போ", ,</br> "அஸ்வினுக்கு முன்ன மாதிரி பந்து எடுபடறது இல்ல",</br> "நல்ல பிளேயர்ஸ் எல்லாம் நெறைய இருக்கறானுங்க டீம்ல எடுக்க மாட்டேங்குறாங்க",</br> "நேத்து நைட் மணி பனிரெண்டு ஆயிடுச்சுபா துங்கறதுக்கு,</br> "இவனுங்க எப்பவுமே இப்படித்தான் ஜெயிக்கற மாதிரி இருந்துட்டு தோத்து போவானுங்க",<br> "எல்லாம் காசு விளையாடுது பா",<br> "இதுல எல்லாம் ஆடுவானுங்க வேற நாட்டுக்கு போனா மண்ணை கவ்விட்டு வருவானுங்க", </br>
இப்படி இதையெல்லாம் டீ கடைலயோ, கோவில் திண்ணைலயோ எவனாவது பேசிட்டு இருக்கறப்ப எதாவது பெருசோ, கிரிக்கெட் புடிக்காதவனோ வந்து "ஏன்டா அவுங்க கிரிக்கெட் ஆடுனா உங்களுக்கு என்னடா சோத்துக்கா வருது, போய் வேலை வெட்டிய பாருங்கடா "-னு அவுங்கள கடுப்பேத்தி விட்டுட்டு இருப்பாங்க.(ஏன்னா அவங்க வேலை இல்லாமதான் வெட்டியா இதை பேசிட்டு இருப்பாங்க) அரைகுறையா ஐ.பி.எல்லையும், பி.சி.சி.ஐ யும் தெரிந்த சிலர் அதன் பின்புலன்களை விமர்சித்து விட்டு அவர்களும் அதையே பார்க்க செல்கின்றனர்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-yw7TxKIi8o4/T72-A95M1kI/AAAAAAAAAJs/m6o4_IAxwLw/s1600/ipl-teams.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="226" width="320" src="http://3.bp.blogspot.com/-yw7TxKIi8o4/T72-A95M1kI/AAAAAAAAAJs/m6o4_IAxwLw/s320/ipl-teams.jpg" /></a></div>
என்னை பொறுத்தவரை, மன்னிக்கவும். ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களையும், ஐ.பி.எல் லில் விளையாடும் வீரர்களையும், ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களையும் பொறுத்தவரை பக்காவான வியாபாரம் என்பது மட்டுமே உண்மை. மற்ற கிரிக்கெட் வாரியங்கள் சம்பளங்களை நம்ம ஊர் கம்பெனிகள் போல இழுத்துதடித்து கொடுப்பது போல் கொடுத்து கொண்டு இருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நிலைமையோ பரிதாபம். சம்பளத்துக்கே போராட்டம் பண்ணி வாங்க வேண்டிய சூழல். நம்ம நாட்டு மக்கள் மாதிரி கிரிக்கெட் பைத்தியங்களும், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருமானம் கொழிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் புரிந்து கொண்ட தொழில் அதிபர்களும், நடிகர் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு முதலீடு செய்தனர். இந்த பணபுழக்கம் வேறு நாட்டு வீரர்களையும் இங்கு இழுத்து வந்தது(அந்த வீரர்களும் சொந்த நாட்டுக்கு ஆடாம ஐ.பி.எல்லுக்கு ஆடுவது வேறு விஷயம்).
இந்த ஐ.பி.எல் ஒவ்வொரு வினாடிக்கும் பல கோடிகளை பரிவர்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.
இதை விட கொடுமை என்னவென்றால் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை கூட பேச இயலாமல் செய்து விடுகின்றது. இந்த விஷயங்களை ஐ.பி.எல் மறக்கடிப்பதால் என்னவோ இதை எல்லாம் இந்த பொம்மை அரசு கிரிக்கெட் பார்ப்பதை போல வேடிக்கை பார்க்கிறதோ? </br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-SqfGvE75VXg/T8NtxdZqIZI/AAAAAAAAAJ8/JeCAkCCHSss/s1600/Kolkata_Knight_Riders_New_Jersey_IPL_2012.png" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="299" width="315" src="http://1.bp.blogspot.com/-SqfGvE75VXg/T8NtxdZqIZI/AAAAAAAAAJ8/JeCAkCCHSss/s320/Kolkata_Knight_Riders_New_Jersey_IPL_2012.png" /></a></div>
டிஸ்கி:
இவ்வளவு விஷயங்களை பேசும் எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது என்பது இல்லை. அது விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கும் போது மட்டுமே. வியாபாரம் ஆனா பின்பு நமக்கு என்ன சோத்துக்கா வருது.....Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-9836602653728698792012-05-15T07:32:00.001-07:002012-05-15T07:32:44.078-07:00கலகலப்பு - சினிமா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
என்னடா பொழுதே போகல எதாவது கொஞ்சம் ஜாலியா டைம் பாஸ் பண்ணனும்னு நீங்க நெனச்சிட்டு.. டிவி பொட்டிய திருப்பி ஐ.பி.ல் பாக்க ஆரம்பிச்சுடாதிங்க... கொஞ்சம் உங்க நண்பர்களோட தியேட்டருக்கு போய் பார்த்தால்.. ஒரு நல்ல காமெடி படம்..இந்த மசாலா கபே.. அதாவது ஐ மீன் கலகலப்பு...
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-3FnC8V8tExs/T7JoB-FB_oI/AAAAAAAAAI8/qLIc4w8yDRw/s1600/Masala-Cafe-Movie-First-Look-1.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="259" width="320" src="http://1.bp.blogspot.com/-3FnC8V8tExs/T7JoB-FB_oI/AAAAAAAAAI8/qLIc4w8yDRw/s320/Masala-Cafe-Movie-First-Look-1.jpg" /></a></div>
ரெண்டு அண்ணன் தம்பிக. அண்ணன் விமல் தம்பி சிவா. கும்பகோணத்துல விமல் அவங்க தாத்தா, அப்பா நடத்திட்டு வந்த மசாலா கபேவ நடத்திட்டு வரார். ஆனா என்னமோ ஹோட்டல இவரால சரியா நடத்த முடியல.. அதுக்காக கடன் மேல கடன் வாங்கியும் எல்லாம் இவருக்கு மோசமாவே நடந்துட்டு இருக்குது. இப்படி நடக்கற அந்த மசாலாகபே- ல சமையல்காரரா வேலை செய்யற தாத்தாவோட பேத்திதான் ஒவியா. அப்பறம் மினிஸ்டர் வீட்டுல திருடி போலிஸ்ல மாட்டி 1 வருசம் ஜெயில்ல இருந்து திரும்பி வராரு சிவா. கும்பகோணத்துக்கு புது ஹெல்த் இன்ஸ்பெக்டரா வராங்க அஞ்சலி. மசாலாகபே ல மோசமான சாப்பாடுனு சொல்லி ரெண்டு மாசத்துக்குள்ள ஹோட்டல்ல சரியான சாப்பாடு போடலனா இழுத்து மூடிடுவேனு அஞ்சலி நோட்டீஸ் அனுப்பிடுறாங்க. ஓரு கட்டத்துல மசாலாகபே-வ விக்கற நிலைமை வந்துடுமோனு இருக்கறப்ப.. சமையல் தாத்தாவோட ஐடியா படி.. பழைமையான உணவுகளை புது புது வகையா செஞ்சு ஹோட்டல டெவலப் பன்றாங்க, சகோதரர்கள் ரெண்டு பேரும். இதுக்கு நடுவுல அண்ணன் அஞ்சலியையும், தம்பி ஒவியாவையும் காதலிக்கறாங்க. இது ஒரு பக்கம் இருக்க. 10 கோடி வைரத்தை மறைச்சு எமாத்தி இன்சூரன்ஸ் வாங்க ட்ரை பண்ணிட்டு, வைரத்தை செல்போனுல வச்சு தன் மச்சான் கிட்ட கொடுத்து அனுப்பறாரு சுப்பு.ஆனா அந்த போன் பல கை மாறி சிவாகிட்ட வருது... அந்த வைரத்தை தேடி கும்பகோணம் வராங்க..சுப்பு & கோ. அப்பறம் மசாலாகபே வை எப்படியாவது வித்து நல்ல கமிசன் வாங்க டிரை பண்ணுராரு விமலோட இன்ஸ்பெக்டர் நண்பன். இப்படி போய்ட்டு இருக்கறப்ப ஊருக்கு போன அஞலிக்கு அவங்க மாமன் சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுது. அதனால அஞ்சலியோட ஊருக்கு போய் அவங்கள கூட்டிட்டு வர போகறாரு விமல். போயிட்டு வர வரைக்கும் மசாலாகபே-வை சிவாவ பாத்துக்க சொல்லிட்டு ஊருக்கு போறார். அங்க சந்தானத்தை ஏமாத்தி அஞ்லிய கூட்டி வர விமல் பிளான் போட்டு சொதப்ப, திரும்பி கும்பகோணம் வந்துடறார். இங்க சிவா சீட்டு ஆட்டத்துல கபேவை இன்ஸ்பெக்டர் கிட்ட அடமானம் வச்சு தோத்து போறாரு. திரும்பி இங்க வந்த விமலுக்கு எப்படி பிரச்சனைய சமாளிக்கறதுனு நெனைக்கறப்ப, சுப்பு & கோ கிட்ட சிவாவும் விமலும் மாட்டிகிறாங்க.. இதுக்கு அப்பறம் அண்ணன் தம்பிக சுப்புகிட்ட இருந்து தப்பிச்சாங்களா,? மசாலாகபேவ மீட்டாங்களா?, காதலிய கைபுடிச்சாங்களாங்கறதை தியேட்டர்ல போய் பாருங்க.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-ytTc7DwH4Q8/T7JoRIeugZI/AAAAAAAAAJI/8cv7dsPdQiE/s1600/kal.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="202" width="320" src="http://3.bp.blogspot.com/-ytTc7DwH4Q8/T7JoRIeugZI/AAAAAAAAAJI/8cv7dsPdQiE/s320/kal.jpg" /></a></div>
காமெடி ஒன்ன மட்டும் கைல வச்சு. அந்த கதைக்கு சரியான கேரக்டர்கள பொருத்தி அதை ரசிகர்கள்கிட்ட சரியா கொண்டு சேர்த்ததிலேயெ வெற்றி பெற்று விட்டார் இயக்குனர் சுந்தர்.சி. படத்துல வர ஒவ்வொரு கேரக்டரும் காமெடில கலந்து கட்டி அடிக்கறாங்க.. விமல் படத்துல் இவர்தான் மெயின் ஹீரோ ஹோட்டல நடத்த கடன் வாங்கி, போட்ட பிளான் எல்லாம் பெயிலா போய் கடன்காரங்க கிட்ட பம்முரதும், அஞ்சலிகிட்ட எப்படியாவது நோட்டீஸ வாபஸ் வாங்க வைக்க சிவாவுடன் சேர்ந்து பிளான் போடுவதும் என அட்டகாசமாய் நடித்திருக்கிறார். துபாய் ரிட்டர்ன் என்று பொய் சொல்லிக்கொண்டு வந்து, இளவரசுவை எமாற்றுவது, பர்தா போட்டுக்கொண்டு கடையில் திருடுவது, டைமிங்காமெடிகளை அசால்ட்டாக அடிப்பது என பட்டையகெளப்பி இருக்கிறார்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-GBGY7rhGFfE/T7Jo5Ww-uTI/AAAAAAAAAJU/qIGZbDB79-s/s1600/mfhu3zfaaai.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="213" width="320" src="http://4.bp.blogspot.com/-GBGY7rhGFfE/T7Jo5Ww-uTI/AAAAAAAAAJU/qIGZbDB79-s/s320/mfhu3zfaaai.jpg" /></a></div>
இடைவேளைக்கு அப்பறம் சந்தானம் வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. இருந்தாலும் வெட்டுப்புலி என்கிற கேரக்டரில் அதகளப்படுத்தியிருக்கிறார். மனுசன் ஒவ்வொரு பிரேமிலும் பின்னுகிறார் என்றாலும் ஒரு கல் ஓரு கண்ணாடி கொடுத்த இம்பாக்ட் இல்லை. அஞ்சலி, ஒவியா இருவரும் அண்ணன் தம்பிகளின் காதலிகளாக வந்து கெட்ட ஆட்டம் போட்டு ரசிகர்களின் ஹார்ட்பீட் எகிறவைத்து உள்ளனர். மற்றும் இளவரசு, சுப்பு, மனோபாலா, V.S. ராகவன், ஜான் விஜய் ஆகியோரும் கலகலப்பாக திரைக்கதை நகர உதவி உள்ளனர். விஜய் எபினேசரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். ஒளிப்பதிவு U.K. செந்தில்குமார் தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார். எடிட்டிங் பிரவீண் & ஸ்ரீகாந்த். படத்திற்கு தன் காமெடி வசனங்களால் தூள் பரத்தி உள்ளனர் பத்ரி மற்றும் கேபிள் சங்கர். படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ், சொதப்பல்கள் இருந்தாலும். சரியான காமெடி எண்டெர்டெய்னராக ரசிகர்களை சந்தோசபடுத்தி உள்ளது. இந்த கோடைவிடுமுறைக்கு ரிலாக்ஸ் பண்ணனும்னா - கலகலப்பு போய் பாருங்க...Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-5866094400359093942012-03-07T22:50:00.004-08:002012-03-08T02:27:41.713-08:0059வது தேசிய விருதுகள்<a href="http://2.bp.blogspot.com/-VmH6bCvDCTU/T1iInuzxGLI/AAAAAAAAAHE/9KiXPlFIiVs/s1600/vaagai-sooda-vaa-movie-poster.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/-VmH6bCvDCTU/T1iInuzxGLI/AAAAAAAAAHE/9KiXPlFIiVs/s320/vaagai-sooda-vaa-movie-poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5717469943108278450" /></a><br />59 வது தேசிய விருதுகள் அறிவிக்கபட்டுவிட்டன... </br> தமிழ் படங்களுக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது</br><br /><a href="http://4.bp.blogspot.com/-Og9iZcAUUEo/T1iJKF3dhkI/AAAAAAAAAHQ/FvrI1OPTTCE/s1600/AlagarSamiyin%252BKuthirai.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-Og9iZcAUUEo/T1iJKF3dhkI/AAAAAAAAAHQ/FvrI1OPTTCE/s320/AlagarSamiyin%252BKuthirai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5717470533413340738" /></a><br />1. சிறந்த தமிழ் படம் - வாகை சூட வா.</br>2.சிறந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் - </br> அழகர்சாமியின் குதிரை.</br> 3. சிறந்த எடிட்டிங் - பிரவீன்( ஆரண்யகாண்டம்).</br>4. சிறந்த பக்கபலமான நடிகர் - அப்புகுட்டி(அழகர்சாமியின் குதிரை).</br> 5. இந்திராகாந்தி சிறந்த அறிமுக இயக்குனர் விருது - </br>தியாகராஜன் குமாரராஜா( ஆரண்யகாண்டம்). <br /><a href="http://4.bp.blogspot.com/-5tzTiUiaGgA/T1iJhBMJIGI/AAAAAAAAAHc/y02HLoA-z5o/s1600/Aaranya-Kaandam.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 259px;" src="http://4.bp.blogspot.com/-5tzTiUiaGgA/T1iJhBMJIGI/AAAAAAAAAHc/y02HLoA-z5o/s320/Aaranya-Kaandam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5717470927294898274" /></a><br />மேலே குறிப்பிட்ட படங்கள். எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நல்ல படங்கள் தோல்வியை தழுவியது எனக்கு வருத்தமே. ஆக நல்ல கதைக்கரு உள்ள படங்களை தயவுசெஞ்சு பாருங்க மக்களே.....Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-25979468016909597552012-01-25T02:16:00.000-08:002012-01-25T02:34:03.211-08:00திருப்பூர் புத்தக கண்காட்சி - 2012எங்க ஊருக்கு பக்கத்து ஊரான திருப்பூரில் புத்தக கண்காட்சி.. இன்று தொடங்கி பிப்ரவரி 5 வரைக்கும் நடக்கிறது.. எனவே புத்தகப்பிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொழுது போகாமல் வீட்டில் இருப்பவர்கள், ஆபிசில் இருப்பவர்கள் எல்லோரும் திரளாக வந்து புத்தக கண்காட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் கண்டிப்பாக புத்தக கண்காட்சி வருவேன். நான் வந்த அப்பறம் என்னை அடையாளம் காணும் யாரும் என்னிடம் ஆட்டோகிராப் கேட்ககூடாது என இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் புத்தகங்கள் நிறைய வாங்க என்னிடம் குறைவான தொகையே இருப்பதால் வசதி உள்ள அன்பர்கள் எனக்கு புத்தகங்கள் வாங்கி பரிசளிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-38192152074621348692012-01-04T09:30:00.000-08:002012-01-04T09:38:30.718-08:00புதிய ஆண்டு 2012ரொம்ப நாள் ஆகி போச்சு ப்ளாக்ல பதிவிட்டு.. <br />புது வருசம் தொடங்கியாச்சு ஏதாவது பதிவு போடனும்..<br /><br /><br />அதனால.................<br /><br /><br /><br /> <br />லேட்டா சொன்னாலும் பரவாயில்லைனு எல்லாருக்கும் சொல்றேன்.<br /><br />இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.....Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-10900705893966061272011-11-20T08:30:00.000-08:002011-11-20T09:37:04.047-08:00விவசாயம்நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்தவன். தற்போது நான் தனியார் பிரிண்டிங் மேனேஜர் ஆக பணிபுரிகிறேன், எனது பெற்றோர் விவசாயம் செய்கிறார்கள். எனது பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்க வேலைக்கு செல்கிறேன்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் விவசாய பின்னணியில் இருந்து கொண்டு என் போன்றவர்கள் பலர் விவசாயம் செய்யாமல் வேறு வேறு வேலைகளுக்கு செல்கின்றனர். <br /> அதற்கு காரணங்கள் பல உண்டு. இன்றைய பொருளாதார சூழலில் மக்களுக்கு அதிக வருமானம் தேவைப்படுகிறது. அது விவசாயத்தில் கிடைக்காது என்ற எண்ணம் தான் காரணம். எந்த ஒரு தொழிலுலிம் இடர்பாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் விவசாயத்தில் பல இடர்கள் உள்ளதால் அதை செய்யவே பலர் தயங்குகின்றனர். இன்றைய விவசாய குடும்ப பெற்றோர்கள் தங்களோடு இந்த கஷ்டம் போகட்டும் எண்ணத்திலும் தன் பிள்ளைகள் வெளியில் வேலைக்கு சென்றாவது நல்லபடியாக இருக்கட்டும் என்றும் தங்களோடு விவசாய நெறிமுறைகளை நிறுத்திக்கொள்கின்றனர். தற்போதைய சந்ததியினர் அதை அறிந்து கொள்ள விளைவதும் இல்லை.<br /> ஏன் இந்த நிலை.? பருவமழைகளை நம்பியே விவசாயம் நடக்கும் நம் நாட்டில் சுற்றுச்சூழல் மாற்றத்தால் எப்போது மழை வரும் போகும் என்று தெரியாத நிலை. கடனுக்கு வாங்கி விவசாயம் செய்யும் போது வெள்ளம், மழை பொய்ப்பு போன்றவற்றால் நட்டம் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழல் அதிகமாகி வருகிறது. <br /> இன்றைய காலகட்டத்தில் அடுத்ததாக ஆட்கள் பற்றாக்குறை தான் விவசாயத்தின் மிகப்பெரிய சவால். உதாரணமாக எங்கள் பகுதியான திருப்பூர், கோவை பகுதியில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் என்பது குதிரைகொம்பாக உள்ளது. விவசாய நிலங்களில் வேலை செய்வதை காட்டிலும் தொழிற்ச்சாலைகளில் வேலை செய்வதை சிறப்பாக எண்ணுகிறார்கள். அடுத்ததாக மத்திய அரசு செய்த அற்புத திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். ஒட்டு மொத்தமாக விவசாயதிற்கு ஆப்பு வைத்த திட்டம். இன்றைய ஆட்கள் தான் தொழிற்சாலைகள் செல்கின்றனர். பழைய ஆட்கள் மூலமாக நடந்து வந்த கொஞ்ச நஞ்ச விவசாயமும் அம்பேல். <br /> ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரங்கள் வந்தாலும் அவற்றிற்கு வாடகை கொடுத்து கட்டுபடியாகாத நிலை. பல ஏக்கர் நிலம் வைத்து இருப்பவர்க்கே இயந்திரங்கள் உதவும். ஒன்று இரண்டு ஏக்கர் வைத்துள்ளவர்களுக்கு ..???. <br /> சீனா போன்ற ஒப்பிடுகையில் நமது நாட்டில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி என்பது மிகவும் குறைவே. அதற்கு காரணம் பசுமைப்புரட்சி. நமது பசுமை புரட்சி திட்டங்கள் ரசாயனங்களை அறிமுகம் செய்து நிலத்தை கெடுத்து உற்பத்தியை குறைத்துவிட்டன. வெளிநாட்டு ரசாயன உர நிறுவனங்கள் மேல் தான் அரசுக்கு அக்கறையே தவிர. விவசாயத்தின் மேலோ, நாட்டு மக்கள் மேலோ அல்ல. ரசாயன மருந்துகளின் விளைவுகள் கண்கூடாக கண்ட பிறகும் அதை இன்னும் அரசு ஆதரிப்பது விளங்கவே இல்லை...<br /> ஒரு விவசாயி இயந்திரங்கள் மூலம் உழவு செய்து, களைகொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்து, உரம் இட்டு எல்லாம் செய்து விற்பனை செய்கையில். அவனுக்கு கிடைப்பது என்னமோ சொற்பம் தான். விவசாய பொருட்களுக்கு உரிய விலை என்பது எப்போதும் கிடைப்பதே இல்லை. அப்படி மக்களிடம் தான் குறைவாக சென்று சேர்கிறதா என்றால் அதுவும் இல்லை. இடையில் புகுந்து சில மணிகளில் பலமடங்கு லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் தான் லாபமடைகின்றனர். விவசாயத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் கூட விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்று லாபமடைகின்றனர். கார்பரேட் கம்பனிகள் கூட இதில் இறங்கி செயல்படுகின்றன. இருப்பு வைக்கவோ, விலை கிடைக்கவோ முடியாத விவசாயிகள் கொடுத்ததை வாங்கி கொள்ள கூடிய நிலைமை-.<br /><br /><br /><br />------------ இன்னும் விளையும்Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-48587900253781208692011-11-15T07:44:00.001-08:002011-11-15T08:46:05.019-08:00IMMORTALS - 3Dநம்ம தமிழ் படங்கள் சில சொதப்புவது போல் ஆங்கில படங்களும் சொதப்புவதுண்டு அந்த வரிசையில் நானும் தான் வருவேன்னு இந்த படமும் வந்துடுச்சு. இந்த படத்த நான் பாக்க காரணம் ரெண்டு. ஒன்னு 300 படத்த எடுத்தவங்க எடுத்து இருக்காங்கனு, ரெண்டாவது ஹாலிவுட் படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.இதுக்கு முன்னாடி டோனி ஜா வோட ONG BAK-3 பார்த்தேன்(இது ஹாலிவுட் இல்லை). நான் பார்த்து ரொம்பவும் நொந்து போன படு மொக்கை படம். அதுக்கு அப்பறம் இந்த படம். ஆனா ONG BAK-3 அளவுக்கு படு மொக்கையாக இல்லை.<br />படத்தோட கதை என்ன?<br /><a href="http://2.bp.blogspot.com/-0ov-vedVZe0/TsKNT5qaKrI/AAAAAAAAAF0/7fZL1P2pvAo/s1600/Immortals_10.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/-0ov-vedVZe0/TsKNT5qaKrI/AAAAAAAAAF0/7fZL1P2pvAo/s320/Immortals_10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675253853475973810" /></a><br /><br />படத்தோட கதை படம் பார்த்து புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டமா இருக்கும். உங்களுக்காக கோர்வையா சொல்லி முடிச்சுடறேன்.<br />முன்னொரு காலத்துல கிரேக்க கடவுள்களுக்கும்(ஜீயஸ்) தீய சக்திகளுக்கும்(டைட்டன்ஸ்) சண்டை அதுல தோத்துபோன டைட்டன்ஸ்கள பாதாள சிறைல வச்சுடறாங்க. அவுங்கள விடுவிக்க ஒரு வில் ஒன்னு இருக்கு. அது இந்த உலகத்துல இருக்கற ஏதோ ஒரு தேவாலயத்துல இருக்கு. இது பிளாஷ்பேக்.<br />இப்ப அந்த வில்ல எடுத்து டைட்டன்ஸ் களை விடுவிக்க ஒரு குரூப் கெளம்புது. அதுக்கு ஒரு காரணம் ஒன்னு இருக்கனும்ல. அது இந்த உலகத்தயே ஆள்வதற்காம். சரி இந்த குரூப் ஒவ்வொரு தேவாலயமா போய் அங்கிருக்கற சந்நியாசிகள, மக்கள கொன்னுட்டு தேடிட்டு இருகாங்க.அந்த குரூப்புக்கு அரசர் பேரு ஹிபெரியன்.<br />அடுத்து கட் பண்ணா கிரேக்க நாட்ல ஒரு பகுதில ஒதுக்கப்பட்ட மக்கள் இருக்காங்க. அங்க தான் இருக்காரு நம்ம படத்தோட ஹீரோ தேசியஸ். அந்த இடத்துக்கும் வராங்க ஹிபெரியன் குரூப். ஹீரோவோட அம்மாவை கொன்னுடறாங்க. ஹீரோவையும் கைது பண்ணிடறாங்க. ஒரு பாலைவனத்தில் இருக்கற மடத்துல நாலு பொண்ணுங்க இருகாங்க அதுல ஒரு பொண்ணுக்கு அதிசய சக்தி இருக்கு. அந்த பொண்ணு தேசியஸ அடையாளம் கண்டு சொல்றாங்க இவனால தான் நம்ம மக்களை காப்பாற்ற முடியும்னு சாக போற நிலைமையில் இருக்கற அவன காப்பாத்தரா(ஹீரோயின்). அங்கிருந்து ஹீரோ, ஹீரோயின், துணைக்கு மூணு பேருன்னு தப்பிகறாங்க. <br /><a href="http://2.bp.blogspot.com/-wvIsiX0UgPI/TsKSpyhav3I/AAAAAAAAAGA/5Am1mKTMc6M/s1600/Immortals%2B3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 178px;" src="http://2.bp.blogspot.com/-wvIsiX0UgPI/TsKSpyhav3I/AAAAAAAAAGA/5Am1mKTMc6M/s320/Immortals%2B3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675259727074475890" /></a><br /><br />திரும்ப தன்னோட சொந்த ஊருக்கு வராரு ஹீரோ கூட தப்பிச்சவங்களோட. அவங்க அம்மாவ அடக்கம் பண்ணும்போது எதோச்சையா அந்த சக்தி வாய்ந்த வில்லை கண்டுபிடிக்கறார். இதுக்குள்ள வில்லன் ஹிபெரியன் ஹீரோ கிட்ட இருந்து வில்லை கைப்பற்றி டைட்டன்ஸ விடுவிக்க கிரேக்க நாட்டுல இருக்கற டர்டரோஸ் மலைக்கு போறாங்க.<br />அதுக்குள்ள கடவுள்கள் உதவியோட ஹீரோ கிரேக்கம் வரார். ஹீரோ அங்க படை திரட்டி படைக்கு தலைமை ஏற்று சண்டை போடறார். அதுக்குள்ள வில்லன் ஹிபெரியன் டைட்டன்ஸ விடுவிக்கறார், உடனே ஜீயஸ் கடவுள் தன்னோட ஆட்களோட வந்து டைட்டன்ஸ அழிக்கறார்.<br />அப்பறம் ஹீரோ வில்லன அழிக்கறார். அவரும் சாகறார். எதிரிகள் எல்லோரும் அழிகிறார்கள். அப்பறம் ஹீரோயின் தன்னோட மகனோட இருக்கிறார். எல்லாம் முடிகிறது.<br /><br /><a href="http://2.bp.blogspot.com/-d9V3iWByzsU/TsKV026-Q0I/AAAAAAAAAGM/CPUp46kjWfI/s1600/Immortals-Movie.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 271px;" src="http://2.bp.blogspot.com/-d9V3iWByzsU/TsKV026-Q0I/AAAAAAAAAGM/CPUp46kjWfI/s320/Immortals-Movie.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5675263215768847170" /></a><br /><br />படத்துல ஒரே ஒரு விஷயம் மட்டும் நல்லா இருக்கு அது ஹாலிவுட்டுகே உண்டான கிராபிக்ஸ். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. மற்றவை எல்லாம் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. 3 டி எபக்ட்ஸ் ஒன்றும் சொல்லி பெரிதாக இல்லை.<br />இவர்களின் முந்தய படமான 300 படத்தின் விறுவிறுப்பு பத்து சதவிகிதம் கூட இல்லை.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-53334743700713352902011-11-13T10:26:00.000-08:002011-11-13T10:40:26.816-08:00நொய்யலின் தாண்டவம்கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் நொய்யல் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல உயிர்கள் பலியானதும், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமை இழந்து வாடுவதும் அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.<br />மக்களுக்கு உதவிகள் வந்தாலும் என்னை கோபப்பட வைத்த செய்தி. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தந்த நிதிதான். கிட்டத்தட்ட மூன்றாயிரம் உறுப்பினர்களை கொண்ட சங்கம். ஏறத்தாழ அனைவரும் கோடிகளில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அளித்த உதவித்தொகை வெறும் ஒரு லட்சம். <br />நடுத்தர, ஏழை மக்கள் கூட தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் உற்றார் உறவினருக்கு செய்து வருகின்றனர். இந்த நிலைமையில் இப்படி ஒரு பேருதவி செய்து இழிவை தேடிக்கொண்டனர் ஏற்றுமதியாளர்கள்.<br /><br />உதவ விருப்பம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு இந்த பதிவின் மூலம் கேட்டு கொள்கிறேன்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-9375599655621852922011-11-13T09:38:00.000-08:002011-11-13T10:25:16.804-08:00மீண்டும் கிறுக்கல்கள்ஒரு மாசமா நேரம் கிடைக்காத காரணத்தால் ப்ளாக் பக்கம் உலாவ முடியல. நேரம் கெடைக்கலனு சொல்றத விட நேரம் ஒதுக்க முடியல. அப்பறம் அனேகமா எல்லாரும் தீபாவளிய சிறப்பா கொண்டாடி இருப்பிங்க. படங்களும் பார்த்து இருப்பீங்க. நானும் மூணு படமும் பார்த்தேன். ஆனா என்னால பகிர்வதற்கு வாய்ப்பு கிடைக்கல. <br /><br />தீபாவளி அப்ப 7 ஆம் அறிவு பாக்கலாம்னு ஒரு பிளான் பண்ணி ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவமேனு பாத்தேன் டிக்கெட் விலையெல்லாம் 120, 150 னு போட்டு இருக்கு. அப்படி போய் பக்கனுமானு அந்தன்னைக்கு பாக்கல. வேலாயுதம் பாக்கலாம் இதுக்கு முன்னாடி விஜய் படம் பார்த்து நொந்து இருந்ததால பாக்க தைரியம் வரல. ஸோ வீட்லயே பலகாரம் சாப்பிட்டு, நன்னா தூங்குனேன். மறுநாள் நண்பர்களோட ப்ரோக்ராம் போட்டு கொடுவேரி போலாமுனு போனோம். ஒரே மழை. அதனால போற வழியில் கோபிசெட்டிபாளையத்தில் <br />7 ஆம் அறிவு பாத்தோம். படம் ஒன்னும் பெருசா இம்ப்ரெஸ் பண்ணல, இருந்தாலும் பாக்கலாம். ஆனா டிக்கெட் ஐம்பது ரூபாய். அதுக்கான ஒரு வசதி கூட இல்ல தியேட்டரில். <br /><br />ரெண்டு நாளைக்கு அப்பறம் அதாவது சனிக்கிழமையன்று வேலாயுதம் பாப்போம்னு நண்பர்களுடன் திருப்பூரில் உள்ள உஷா சினி காம்ப்ளெக்ஸ் போனேன். அது வெகு காலமா ஓடம இருந்து புதுசா கட்டி முதல் முறையா வேலாயுதம் போடறாங்க. ஏற்கனவே படம் நல்லா இருக்கு அப்படிங்கற பேச்சால ஹவுஸ் புல். எல்லா தியேட்டகளிலும் இதே நிலைமை.சரி என்ன பண்ணலாம்னு இன்னொரு ஸ்க்ரீன்ல ரா ஒன் பாக்க போனோம்.<br />திருப்பூரில் வடநாட்டினர் அதிகம் இருப்பதால் அவர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இந்த படமும் சுமார்தான் ஷாருக்கானுக்காக படம் பாக்கலாம்.<br /><br />கடைசியா மறுபடி ரெண்டு நாள் கழிச்சு வேலாயுதம் பாக்க போனோம். அப்பவும் ஒரே கூட்டம். இந்த தடவ படம் பாக்காம வரக்கூடாது. அப்படி என்னத்த பண்ணி இருக்காங்கனு அடிச்சுபிடிச்சு டிக்கெட் வாங்கி படம் பாத்தேன் அதே உஷாவில். இடைவேளை வரை நல்லாவே சென்றது. விஜய் கஷ்டப்பட்டு டிரெய்ன நிருத்துனதோட படம் முடிஞ்சுதுன்னு நெனைச்சேன். அப்பறம் தான் சொதப்பி இருக்காங்க. இருந்தாலும் படம் நல்லாவே இருந்தது. பாடல்களும் கேட்கும்படி இருந்தது. விஜய்க்கு இது ஒரு ஹிட் படம்.<br /><br />இதெல்லாம் பார்த்த நான். ப்ளாக் எழுத முடியாத காரணம். (எனது இன்டர்நெட் டேட்டா கார்டு பழுதடைந்துவிட்டது. வேறு ஒன்று வாங்கலாம்னா நிதி பற்றாக்குறை. ஒரு வழிய ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிட்டேன். நான் இருப்பது திருப்பூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊத்துக்குளியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமம்.எங்க ஏரியாவில் தொலைபேசி வழி இணையம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இங்கு 3g வசதி இல்லை .அதனால் டேட்டா கார்டு மூலமும் போதுமான வேகம் இல்லை. இருந்தாலும் இணையம் இயக்கிவருகிறேன்.)<br /><br />என்ன செய்ய கிராமங்களை தான் எந்த ஒரு அரசும் கண்டுகொள்வதில்லையே.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-33538992796168416712011-10-20T10:35:00.000-07:002011-10-20T11:14:21.107-07:00திருப்பூர் எங்கே ?நான் ஊத்துக்குளியில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் லேபிள் பிரிண்டிங் வேலை என்பதால் திருப்பூர சார்ந்துதான் எங்க வேலை. திருப்பூருக்கும் ஊத்துகுளிக்கும் 15 கிலோமீட்டர் தான். வாரம் எப்படியாவது கம்பனி வேலையாக மூணு, நாலு தடவையாவது திருப்பூர் வருவேன் கடந்த பத்துநாளா சொந்த வேலைகள் காரணமா திருப்பூர் பக்கம் போக முடியல.. இப்பவும் வேலை இல்லை. சரி இன்னைக்காவது தீபாவளிக்கு துணி எடுக்க போலமேனு போனேன் போனேன்.(மன்னிக்கவும் எனக்கு எடுக்க போனேன்). <br />தீபாவளி பரபரப்புல இருக்கும்னு பார்த்தா எல்லா கடைகளும் காத்து வாங்கிட்டு கெடக்கு. திருப்பூர்லனு குறிப்பிட்டு சொல்லக்கூடிய சென்னை சில்க்ஸ்ல போன வருசத்துல 25 சதவீதம் கூட்டம் தான் இப்ப இருக்கு. நகை, வீட்டு உபயோகபொருள்கள் வாங்க மக்கள் இப்ப திருப்பூர்ல இல்லை. திருப்பூர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே உள்ளது. டையிங் பிரச்சனை புதிய ஆட்சி வந்தா மாறிடும்னு நெனச்சவங்களுக்கு ஏமாற்றம்தான். எக்ஸ்போர்ட் கம்பெனிகள்ல கிட்டத்தட்ட வேலையே இல்லை. டொமஸ்டிக் கம்பனிகள் மட்டும்தான் இப்போதைக்கு திருப்பூர்ல தீபாவளி பரபரப்புல ஓடிகிட்டு இருக்குது. இன்னைக்கு நெலமை என்னன்னா போனவருஷம் இதே தீபாவளி டைம்ல எல்லா துணிக்கடைலயும் கூட்டம். பஸ் ஸ்டாண்ட்ல கயிறு கட்டி வரிசையா பஸ் ஏத்துனாங்க. இந்த வருஷம் என்னமோ நெலமை தலைகீழ்உள்ளாட்சி தேர்தல் கூட காரணமா இருக்கலாம். <br />இப்ப அங்கங்க சோதனை முறைல டையிங் ஓட்டராங்கனு சொல்றாங்க. இருந்தாலும் ஆட்சில இருக்கறவங்க இந்த பிரச்சனைக்கு யாருக்கும் பாதிப்பு இல்லாம முடிவு எடுத்து கொஞ்சம் சீக்கிரம் கவனிச்சாதான் திருப்பூர் மீண்டும் பழையபொலிவு பெறும்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-72053493837658094012011-10-17T07:43:00.000-07:002011-10-17T08:52:39.257-07:00சினிமாவும் நானும்எனது சிறு வயதில் நான் திரைப்பாடல்களோ, திரைப்படமோ அதிகம் கேட்டது இல்லை ஏனென்றால் எங்கள் வீட்டில் மின்சாரம் அப்போது இல்லை. பாட்டரியில் இயங்கும் பிலிப்ஸ் ரேடியோ ஒன்று மட்டும் இருந்தது. அப்போது எப்.எம் கள் இல்லாத காலகட்டம் அதனால் கோவை வானொலி, திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மட்டும் கேட்டதுண்டு. அதில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு என்பது குறைவே, ஆனாலும் நாடகங்கள், சினிமா ஒலிச்சித்திரம் தவறாமல் கேட்பேன். <br /><br /> பள்ளி விடுமுறையில் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் படம் பார்க்க செல்வோம் , வெள்ளி, சனி, ஆகிய நாட்களில் இரவில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடுவார்கள் அதை பார்போம், பல நாட்கள் தூங்கி விடுவதுண்டு. ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் நான் பாடல்கள் பார்த்ததுண்டு. சில வருடங்களில் வீட்டிற்கு மின் இணைப்பு வந்தது, சில மாதங்களுக்கு பிறகு டி.வி வந்தது ஆனாலும் பாடல் கேட்பது ஒரு விருப்பமானதாக இருந்ததில்லை. திரைப்படம் ஞாயிறு மட்டும் பார்ப்பேன்.நானும் உயர்நிலையில் படிக்கும் போது பாட்டு புத்தகங்கள் நண்பர்கள் வாங்கி சினிமாவில் படுவதுபோல் பாடிக்கொண்டு இருப்பார்கள். பாட்டு புத்தகம் வாங்குவது ஒரு போட்டி எந்த புதிய திரைப்படம் வந்தாலும் ஓடி தேடி முதலாவதாக வாங்கினால் அவன் பெரிய ஆள். இந்த வகையில் நானும் வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். அதை வாங்கி ஒருமுறை படிப்பதோடு சரி. அதை திரும்ப படிக்க தோன்றியதில்லை. <br /><br /> கேபிள் இணைப்பு வீட்டிற்கு வாங்கியதும் சினிமா பார்ப்பது அதிகமானது, மேல்நிலை படிப்பு சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக பாடல்கள் கேட்பது விருப்பமான ஒன்றாக மாறியது.அந்த கால கட்டங்களில் பல நாட்கள் பள்ளியை கட் செய்துவிட்டு பல சினிமாக்கள் சென்றதுண்டு. ஆனாலும் பாடலாசிரியர் , இசையமைப்பாளர், இயக்குனர் போன்ற விஷயங்கள் கவனிப்பதில் எனக்கு ஆர்வம இருந்ததில்லை, ஆர்வம இருந்ததில்லை என்பதை விட தெரிந்ததில்லை. கல்லூரி சென்ற பிறகு பல நண்பர்கள் தொடர்பு, வெளி உலக அனுபவங்கள், கணினி, இணையம் போன்றவை சினிமா பற்றிய எனது பார்வையை மாற்றிவிட்டன. <br /> <br />எனக்கு ஆங்கில படங்கள் பார்ப்பது பிடிக்கும் அவர்களின் விசுவல், கிரியேடிவ் காரணமாக அவை எனக்கு பிடித்து விட்டன. நான முதன் முதல் பார்த்த ஆங்கில படம் டைட்டானிக். நான் பார்த்த முதல் ஹிந்தி படம் ஷாருக்கின் பாஷா. இன்று நான் சினிமா பார்ப்பது குறைந்து விட்டது. இருந்தாலும் சினிமாக்களை பற்றி ப்ளாக்கில் அறிந்து கொள்கிறேன். உலக சினிமாக்கள் பற்றி தெரியாத நான் ஜாக்கி, மற்றும் பட்டர்பிளை சூர்யா அவர்களின் வலைப்பூக்களின் மூலம் அவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. <br />இன்னும் சினிமாக்களின் பல முகங்கள் நான் அறிந்திராதாவை. முடிந்தவரை அறிந்து கொள்கிறேன். <br />------------------------------------------------------------------------------------------<br /><br /><br />டிஸ்கி:<br />இந்த பதிவு என்னோட சினிமா அனுபவங்கள்தான். வேறு ஒன்றும் பெரிதாக தெரியாது . ஒரு சினிமா ரசிகன் மட்டுமே நான்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-81891167310276917942011-10-11T09:45:00.000-07:002011-10-11T11:25:00.488-07:00என்னதான் நடக்குது இங்க?" <span title="Click to correct" class="transl_class" id="0">ஆரம்பத்தில்</span> <span title="Click to correct" class="transl_class" id="1">இருந்தே</span> <span title="Click to correct" class="transl_class" id="2">ஊழலை</span> <span title="Click to correct" class="transl_class" id="3">ஒழிப்பேன்</span> <span title="Click to correct" class="transl_class" id="4">என்று</span> <span title="Click to correct" class="transl_class" id="5">கூறியவர்</span> <span title="Click to correct" class="transl_class" id="6">எங்கள்</span> <span title="Click to correct" class="transl_class" id="7">தலைவர்</span> <span title="Click to correct" class="transl_class" id="8">விஜயகாந்த்</span>"<br />- <span title="Click to correct" class="transl_class" id="9">பிரேமலதா</span> <span title="Click to correct" class="transl_class" id="10">விஜயகாந்த்</span><br />" <span title="Click to correct" class="transl_class" id="11">ஊழல்</span> <span title="Click to correct" class="transl_class" id="12">ஒழிப்பதற்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="13">தான்</span> <span title="Click to correct" class="transl_class" id="14">இந்த</span> <span title="Click to correct" class="transl_class" id="15">ரத</span> <span title="Click to correct" class="transl_class" id="16">யாத்திரை</span> " - <span title="Click to correct" class="transl_class" id="17">அத்வானி</span><br />" <span title="Click to correct" class="transl_class" id="18">லோக்பால்</span> <span title="Click to correct" class="transl_class" id="19">மசோதா</span> <span title="Click to correct" class="transl_class" id="20">நிறைவேறும்</span> <span title="Click to correct" class="transl_class" id="21">வரை</span> <span title="Click to correct" class="transl_class" id="22">போராட்டம்</span> <span title="Click to correct" class="transl_class" id="23">தொடரும்</span> " -<br />" <span title="Click to correct" class="transl_class" id="26">ஊழலிற்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="27">எதிராக</span> <span title="Click to correct" class="transl_class" id="28">பாத</span> <span title="Click to correct" class="transl_class" id="29">யாத்திரை</span> <span title="Click to correct" class="transl_class" id="30">தொடங்கினார்</span>" - <span title="Click to correct" class="transl_class" id="31">பாபா</span> <span title="Click to correct" class="transl_class" id="32">ராம்</span> <span title="Click to correct" class="transl_class" id="33">தேவ்</span><br /><br /><span title="Click to correct" class="transl_class" id="34">இதெல்லாம்</span> <span title="Click to correct" class="transl_class" id="35">என்னனு</span> <span title="Click to correct" class="transl_class" id="36">உங்க</span> <span title="Click to correct" class="transl_class" id="37">எல்லாருக்கும்</span> <span title="Click to correct" class="transl_class" id="38">தெரிஞ்சு</span> <span title="Click to correct" class="transl_class" id="39">இருக்கும்</span>. <span title="Click to correct" class="transl_class" id="40">இந்த</span> <span title="Click to correct" class="transl_class" id="41">ஊழல்</span> <span title="Click to correct" class="transl_class" id="42">ஒழிப்பு</span> <span title="Click to correct" class="transl_class" id="43">பத்தி</span> <span title="Click to correct" class="transl_class" id="44">இப்ப</span> <span title="Click to correct" class="transl_class" id="45">எல்லோரும்</span> <span title="Click to correct" class="transl_class" id="46">தீவிரமா</span> <span title="Click to correct" class="transl_class" id="47">பேசிட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="48">இருக்காங்களே</span> <span title="Click to correct" class="transl_class" id="49">நாமளும்</span> <span title="Click to correct" class="transl_class" id="50">எதாவது</span> <span title="Click to correct" class="transl_class" id="51">பண்ணனும்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="52">ஆளாளுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="53">பேசிட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="54">இருக்காங்க</span>. <span title="Click to correct" class="transl_class" id="55">எதுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="56">இதெல்லாம்</span> <span title="Click to correct" class="transl_class" id="57">இவ்ளோ</span> <span title="Click to correct" class="transl_class" id="58">நாளா</span> <span title="Click to correct" class="transl_class" id="59">எல்லாரும்</span> <span title="Click to correct" class="transl_class" id="60">என்ன</span> <span title="Click to correct" class="transl_class" id="61">பண்ணிட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="62">இருந்தாங்க</span>?. <span title="Click to correct" class="transl_class" id="63">திடீர்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="64">ஏன்</span> <span title="Click to correct" class="transl_class" id="65">இவங்க</span> <span title="Click to correct" class="transl_class" id="66">இத</span> <span title="Click to correct" class="transl_class" id="67">பண்றாங்கனு</span> ? <span title="Click to correct" class="transl_class" id="68">மக்களும்</span> <span title="Click to correct" class="transl_class" id="69">திடீர்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="70">போராட்டம்</span>, <span title="Click to correct" class="transl_class" id="71">உண்ணாவிரதம்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="72">இருந்தாங்க</span>.<br /><br /> <span title="Click to correct" class="transl_class" id="73">இத</span> <span title="Click to correct" class="transl_class" id="74">பத்தி</span> <span title="Click to correct" class="transl_class" id="75">எல்லாம்</span> <span title="Click to correct" class="transl_class" id="76">பேசும்</span> <span title="Click to correct" class="transl_class" id="77">போது</span> <span title="Click to correct" class="transl_class" id="78">இயக்குனர்</span> <span title="Click to correct" class="transl_class" id="79">ஏ</span>.<span title="Click to correct" class="transl_class" id="80">ஆர்</span>.<span title="Click to correct" class="transl_class" id="81">முருகதாஸ்</span> <span title="Click to correct" class="transl_class" id="82">ஒரு</span> <span title="Click to correct" class="transl_class" id="83">பேட்டில</span> <span title="Click to correct" class="transl_class" id="84">பேசும்</span> <span title="Click to correct" class="transl_class" id="85">போது</span> <span title="Click to correct" class="transl_class" id="86">சொன்னது</span>. <span title="Click to correct" class="transl_class" id="87">மக்களுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="88">பொறுமைனா</span> <span title="Click to correct" class="transl_class" id="89">என்னன்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="90">தெரியல</span>, <span title="Click to correct" class="transl_class" id="91">ஒரு</span> <span title="Click to correct" class="transl_class" id="92">டிராபிக்</span> <span title="Click to correct" class="transl_class" id="93">ரூல்ஸ்</span> <span title="Click to correct" class="transl_class" id="94">பாலோ</span> <span title="Click to correct" class="transl_class" id="95">பண்ண</span> <span title="Click to correct" class="transl_class" id="96">நினைப்பதில்லை</span>, <span title="Click to correct" class="transl_class" id="97">தனக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="98">மட்டும்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="99">இருக்கற</span> <span title="Click to correct" class="transl_class" id="100">இவங்க</span> <span title="Click to correct" class="transl_class" id="101">எதுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="102">ஊழல்</span>, <span title="Click to correct" class="transl_class" id="103">லோக்பால்</span> <span title="Click to correct" class="transl_class" id="104">னு</span> <span title="Click to correct" class="transl_class" id="105">பேசிட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="106">இருக்காங்கனு</span>.<br /><br /> <span title="Click to correct" class="transl_class" id="107">இத</span> <span title="Click to correct" class="transl_class" id="108">பத்தி</span> <span title="Click to correct" class="transl_class" id="109">எல்லாம்</span> <span title="Click to correct" class="transl_class" id="110">பேசிட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="111">போராட்டம்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="112">இருக்கறவங்க</span> <span title="Click to correct" class="transl_class" id="113">எல்லாம்</span> <span title="Click to correct" class="transl_class" id="114">அவுங்களோட</span> <span title="Click to correct" class="transl_class" id="115">சுய</span> <span title="Click to correct" class="transl_class" id="116">லாபத்திற்காக</span> <span title="Click to correct" class="transl_class" id="117">தான்</span> <span title="Click to correct" class="transl_class" id="118">பேசிட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="119">இருக்காங்க</span>. <span title="Click to correct" class="transl_class" id="120">அரசியல்வாதிங்க</span> <span title="Click to correct" class="transl_class" id="121">இத</span> <span title="Click to correct" class="transl_class" id="122">அரசியலாக்கி</span> <span title="Click to correct" class="transl_class" id="123">தங்கள</span> <span title="Click to correct" class="transl_class" id="124">அடையாளபடுத்த</span> <span title="Click to correct" class="transl_class" id="221">நெனைக்கறாங்க</span>. <span title="Click to correct" class="transl_class" id="126">சில</span> <span title="Click to correct" class="transl_class" id="127">பேர்</span> <span title="Click to correct" class="transl_class" id="128">தங்கள</span> <span title="Click to correct" class="transl_class" id="129">ஹீரோ</span> <span title="Click to correct" class="transl_class" id="130">வாக</span> <span title="Click to correct" class="transl_class" id="131">காட்ட</span> <span title="Click to correct" class="transl_class" id="132">இத</span> <span title="Click to correct" class="transl_class" id="133">உபயோகபடுத்தறாங்க</span>. <span title="Click to correct" class="transl_class" id="134">ஒரு</span> <span title="Click to correct" class="transl_class" id="135">சட்டம்</span> <span title="Click to correct" class="transl_class" id="136">போட்ட</span> <span title="Click to correct" class="transl_class" id="137">மட்டும்</span> <span title="Click to correct" class="transl_class" id="138">ஊழல்</span> <span title="Click to correct" class="transl_class" id="139">ஒளிஞ்சுடும்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="140">நெனச்சுட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="141">இருக்கறது</span> <span title="Click to correct" class="transl_class" id="142">எவ்ளோ</span> <span title="Click to correct" class="transl_class" id="143">பெரிய</span> <span title="Click to correct" class="transl_class" id="144">முட்டாள்தனம்</span>. <span title="Click to correct" class="transl_class" id="145">உண்மைய</span> <span title="Click to correct" class="transl_class" id="146">சொல்லணும்னா</span> <span title="Click to correct" class="transl_class" id="147">எனக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="148">அன்னா</span> <span title="Click to correct" class="transl_class" id="149">ஹசாரே</span> <span title="Click to correct" class="transl_class" id="150">யார்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="151">அவர்</span> <span title="Click to correct" class="transl_class" id="152">போராட்டம்</span> <span title="Click to correct" class="transl_class" id="153">நடத்த</span> <span title="Click to correct" class="transl_class" id="154">ஆரம்பிக்கற</span> <span title="Click to correct" class="transl_class" id="155">வரைக்கும்</span> <span title="Click to correct" class="transl_class" id="156">தெரியாது</span>. <span title="Click to correct" class="transl_class" id="157">அதுக்காக</span> <span title="Click to correct" class="transl_class" id="158">அவர</span> <span title="Click to correct" class="transl_class" id="159">செஞ்சது</span> <span title="Click to correct" class="transl_class" id="160">தப்புன்னு</span> <span title="Click to correct" class="transl_class" id="161">நான்</span> <span title="Click to correct" class="transl_class" id="162">சொல்ல</span> <span title="Click to correct" class="transl_class" id="163">வரல</span>, <span title="Click to correct" class="transl_class" id="164">அவருக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="165">ஊழல்</span> <span title="Click to correct" class="transl_class" id="166">ஒழிக்க</span> <span title="Click to correct" class="transl_class" id="167">ஒரு</span> <span title="Click to correct" class="transl_class" id="168">கடுமையான</span> <span title="Click to correct" class="transl_class" id="169">சட்டம்</span> <span title="Click to correct" class="transl_class" id="170">வேணும்</span> <span title="Click to correct" class="transl_class" id="171">அதுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="172">நாம</span> <span title="Click to correct" class="transl_class" id="173">எதாவது</span> <span title="Click to correct" class="transl_class" id="174">பண்ணனும்</span> <span title="Click to correct" class="transl_class" id="175">தோணி</span> <span title="Click to correct" class="transl_class" id="176">இருக்கு</span>, <span title="Click to correct" class="transl_class" id="177">அது</span> <span title="Click to correct" class="transl_class" id="178">பெரிய</span> <span title="Click to correct" class="transl_class" id="179">ஆச்சர்யம்</span> <span title="Click to correct" class="transl_class" id="180">இல்ல</span>. <span title="Click to correct" class="transl_class" id="181">நம்ம</span> <span title="Click to correct" class="transl_class" id="182">நாட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="183">மக்களுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="184">ஒட்டு</span> <span title="Click to correct" class="transl_class" id="185">மொத்தமா</span> <span title="Click to correct" class="transl_class" id="186">தோணுது</span> <span title="Click to correct" class="transl_class" id="187">இவ்ளோ</span> <span title="Click to correct" class="transl_class" id="188">நாள்</span> <span title="Click to correct" class="transl_class" id="189">ஏன்</span> <span title="Click to correct" class="transl_class" id="190">இவங்களுக்கு</span> <span title="Click to correct" class="transl_class" id="191">தோனலனு</span> <span title="Click to correct" class="transl_class" id="192">ஆச்சர்யம்தான்</span>.<br /><br /> <span title="Click to correct" class="transl_class" id="193">இத</span> <span title="Click to correct" class="transl_class" id="194">பத்தி</span> <span title="Click to correct" class="transl_class" id="195">நெறய</span> <span title="Click to correct" class="transl_class" id="196">எழுதலாம்</span>, <span title="Click to correct" class="transl_class" id="197">ஆனா</span> <span title="Click to correct" class="transl_class" id="198">ஏற்கனவே</span> <span title="Click to correct" class="transl_class" id="199">நெறய</span> <span title="Click to correct" class="transl_class" id="200">எழுதிட்டாங்க</span>. <span title="Click to correct" class="transl_class" id="201">அது</span> <span title="Click to correct" class="transl_class" id="202">வேண்டாம்</span> <span title="Click to correct" class="transl_class" id="203">இப்ப</span> <span title="Click to correct" class="transl_class" id="204">நான்</span> <span title="Click to correct" class="transl_class" id="205">சொல்ல</span> <span title="Click to correct" class="transl_class" id="206">வந்தது</span> <span title="Click to correct" class="transl_class" id="207">என்னனா</span>?<br /><span title="Click to correct" class="transl_class" id="208">இந்த</span> <span title="Click to correct" class="transl_class" id="209">விஷயத்த</span> <span title="Click to correct" class="transl_class" id="210">உள்ளாட்சி</span> <span title="Click to correct" class="transl_class" id="211">தேர்தல்</span> <span title="Click to correct" class=" to_transl_class" id="220">வேட்பாளர்கள்</span><span title="Click to correct" class="transl_class" id="213"> கூட</span> <span title="Click to correct" class="transl_class" id="214">விட</span> <span title="Click to correct" class="transl_class" id="215">மாட்டேன்கறாங்க</span>. <span title="Click to correct" class="transl_class" id="216">தங்களது</span> <span title="Click to correct" class="transl_class" id="217">பிரசுரங்களில் </span>அன்னா ஹசாரே போட்டோ போட்டு சுயேட்சை வேட்பாளர்கள் <span title="Click to correct" class="transl_class" id="124">அடையாளபடுத்த</span> <span title="Click to correct" class=" to_transl_class" id="222">நினைக்கறாங்க</span>. தங்களோட சுய விளம்பரத்திற்காக அரசியல்வாதிகள் இப்போது உபயோகபடுத்தும் பகடைதான் "ஊழல் எதிர்ப்பு " என்கின்ற ஒன்று.<br />இவ்ளோ நாளா தோணாத ஒரு விஷயம் <span title="Click to correct" class="transl_class" id="24">அன்னா</span> <span title="Click to correct" class="transl_class" id="25">ஹசாரே போராட்டம் ஆரம்பிச்ச உடனே தான் எல்லோருக்கும் தோணுது . </span><br />ஒரு கடையில எம்.ஆர்.பி க்கு மேல பொருள் விற்பதை கேக்க துணிச்சல் இல்லாத மக்கள், எப்படி ஊழலுக்கு எதிரா போரடுவாங்க. <br /> ஒருத்தன் ஒன்னு செய்யறான், அது எதுக்குன்னு யோசிக்காம ஆட்டு மந்தை மாதிரி அவன் செய்யறது செஞ்சுட்டு, அப்பறம் வேற ஒன்னு செய்யும் போது இத மறந்துட்டு அதை செய்வாங்க. <br />அதை எல்லாம் விட்டுட்டு இனியாவது திருந்துங்க மக்களே..........Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-34412970697804524602011-10-09T10:32:00.001-07:002011-10-09T11:34:43.041-07:00ரசிகர்கள் Vs ரசிகர்கள்"இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் போல் முட்டாள்கள் எங்கும் பார்க்க முடியுமா என்பது எனக்கு கொஞ்சம் சந்தேகம் உள்ளது." <br />"எதுக்குயா இப்படி சொல்ற? அவங்கள பத்தி என்ன நெனச்ச ? என்னவெல்லாம் பண்றாங்க தெரியுமா மன்றம் மூலம் எவ்ளோ பண்றாங்க, நடிகைகளுக்கு கோவில் கட்ராங்க, கட் அவுட்டு வைக்கறாங்க, பால் குடம் எடுக்கறாங்க, பால் அபிசேகம் பண்றாங்க படம் ரிலீஸ் ஆனா உடன் டிக்கெட் எவ்ளோ ரூபாய் கொடுத்தும் படம் பாக்கறாங்க. அப்படி பட்டவங்கள முட்டாள்னு சொல்றியே "<br /> <br />"கொஞ்சம் இருங்க நான் சொல்ல வந்தத சொல்றேன். நீங்க சொல்றத பத்தி சொல்ல நான் சொல்ல வரல"<br /> <br />"என்ன சொல்ல வந்தியோ சொல்லிதொல"<br /><br />பொழுதுபோக்கின் ஒரு அம்சம் தான் சினிமா. நானும் சினிமா பார்ப்பவன் தான், சினிமாவாக மட்டும் பார்ப்பவன். அதில் குறைகள், குற்றங்கள் இருக்கும். அதனால் யாரும் சினிமாவை வெறுப்பதில்லை. ஆனால் பாவம் அதனை சார்ந்தவர்கள் தான், குறிப்பாக நடிகர்கள் நிலைமை கொஞ்சம் திண்டாட்டம் தான். அவரின் படம் வெற்றி பெற்றால் கொண்டடபடுகிறார்கள். தோல்வி அடைந்தால் இழிவு படுத்தபடுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் அல்ல விளையாட்டிலும் நடக்கிறது. <br /> அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு அவர்களின் நிலமையோ ரொம்ப மோசம். எஸ்.எம்.எஸ் களில், பேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் அவர்கள் மிக மோசமாக இழிவுபடுத்தபடுகிறார்கள். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை இழிவு செய்வது என்பது மனிதன் செயல் அல்ல. அவர்களும் மனுசங்க என்பதை மக்கள் உணரவில்லை. அவர்களை இழிவுபடுத்துவதால் அவங்களுக்கு கெடைப்பது என்னனுதன் தெரியல. ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் இன்னொரு பெரிய நடிகரை கேவலமாக சித்தரிப்பது, அவர்கள் இவரை கேவல்படுதுவது என தொடர்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க இதையும் ஒரு வேலையா செய்றவங்கள பாத்தா எனக்கு கடுப்புதான் ஆகுது. இனியும் இவங்க திருந்துவங்காளானு தெரியல?<br />-------------------------------------------------------------------------------------<br /><br />இத பத்தி இங்க எழுத காரணம் சில பல மாதங்கலாவே நடிகர்களை இழிவு செய்து, <br />எஸ்.எம்.எஸ் லயும், பேஸ்புக் லயும் அப்டேட்ஸ் கடுப்பேத்திடே இருந்துச்சு. அதான் அதை பத்தி இங்க பதிவு போடுறேன்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-92200887583156769992011-10-04T10:45:00.000-07:002011-10-04T11:58:50.037-07:00மயக்கம் என்ன - ஏழாம் அறிவு- வேலாயுதம்-தீபாவளிக்கு வெளிவரபோவதாக சொல்லப்படும் இந்த மூன்று படங்களின் பாடல்கள் எப்படி இருக்குது?.நாமளும் கொஞ்சம் அலசுவோம். <br />இருக்கற பிரச்சனைல இது இப்ப தேவையானு. நீங்கா கேக்கறது தெரியுது. என்ன பண்றது, இப்போதைக்கு ஒரு படம் கூட பாக்கல. பாத்து இருந்த அதை பத்தி எழுதி இம்சை பண்ணி இருப்பேன். அதனால பாட்டுகள பற்றியும் எழுதலாமேன்னு இந்த பதிவு<br /><font><span class="Apple-style-span" style="font-size: large;"><b><br /></b></span></font><div><font><span class="Apple-style-span" style="font-size: large;"><b>மயக்கம் என்ன?</b></span></font><span class="Apple-style-span" style="font-size: large;"><b><br /></b></span>தற்போது ஹிட் லிஸ்டில் இடம்பிடித்து பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்தின் பாடல்கள். இசையமைத்து இருப்பவர் - ஜி.வி. பிரகாஷ்குமார். படத்தோட டைரக்டர் தனுஷோட அண்ணன் தான்.படத்துல செல்வராகவன், தனுஷ் ரெண்டு பேருமே பாட்டும் எழுதி பாடியும் இருக்கறாங்க. "ஓட ஓட தூரம் கொரையாள " எதார்த்தமான பாடல் வரிகளோடு தனுஷ் குரலில் கேட்க மிக நன்றாகவே உள்ளது. "காதல் என் காதல் " பாடலும் இப்போது செம ஹிட். இந்த பாட்டுல தனுஷ் பாடும்<br />" வெட்ரா அவள, கொல்றா அவள, தேவையே இல்ல " வரிகள் தான் இப்போது இளைஞர்களின் விருப்பமான வரிகள். எனக்கும் இந்த ரெண்டும் பிடிச்சு போச்சு.<br />அது மட்டும் இல்லாம ட்ரைலர் ல கொஞ்சம் நம்மை கவர்கிறார்கள்.. தீபாவளிக்கு விஜய், சூர்யாவுக்கு தனுஷ் சரியான போட்டியா இருக்க போகிறார்.<br /><object style="height: 300px; width: 400px"><param name="movie" value="http://www.youtube.com/v/Ik_6zec37aQ?version=3"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/Ik_6zec37aQ?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="400" height="300"></object><br /><br /><font style="font-weight:bold;"><span class="Apple-style-span" style="font-size: large;">ஏழாம் அறிவு</span> </font><br />சூர்யா - ஸ்ருதிஹாசன் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படம். முருகதாஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. </div><div>இந்த படத்திற்கு இசை- ஹாரிஸ்ஜெயராஜ்.<br />ஆனால் மயக்கம் என்ன? கொடுத்த இம்பாக்டை, ஏழாம் அறிவு பாடல்கள் கொடுக்க வில்லை .. ஹரிஷ் ஜெயராஜ் வழக்கம் போல பழைய ட்யூன்களையே தந்து இருப்பது கடுபெற்றுகிறது. ஒரே பாடல் எஸ்.பி.பி பாடியுள்ள " யம்மா யம்மா காதல் பொன்னம்மா " பாடல் மட்டும் ரசிக்கும்படியாக உள்ளது. சூர்யாவின் வித்தியாச கெட்டப்கள்,ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம் என ரசிகர்களின் ஹீர்பீட்டை இப்போதே எகிரவைதுள்ள படம்.<br /><object style="height: 300px; width: 400px"><param name="movie" value="http://www.youtube.com/v/nqwMCsAOpYc?version=3"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/nqwMCsAOpYc?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="400" height="300"></object><br /><br /><div><br /></div><div><b><span class="Apple-style-span" style="font-size: large;">வேலாயுதம்</span></b></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">நமது இளைய தளபதி நடித்து இருக்கும் படம். தொடர் தோல்விகளால் நொந்து இருக்கும் விஜய் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்து இருக்கும் படம். படத்தின் இயக்குனர் -ராஜா(ஜெயம் , எம்.குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி போன்ற தெலுங்கு ரீமேக் படம்களை தனது தம்பியை வைத்து மட்டும் இயக்கியவர்). தற்போது சொந்த கதையில் முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்குகிறார். </span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">படத்திற்கு இசை -விஜய் ஆன்டனி, </span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">இதிலும் வழக்கம் போல் விஜய் அறிமுக பாடல் "சொன்னா புரியாது" , கடுபேற்றுகிறது, சங்கீதா ராஜேந்திரன் குரலில் " மாயம் செய்தாயோ " பாடல் பளிச். மற்றொரு பாடல் "மொளச்சு மூணு இலைய விடல பாடல் " காய்கறிகள் வாசனையுடன் கேட்க இனிமையான மெலடி. </span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">மற்றபடி மற்றவை வழக்கம் போல்</span><span class="Apple-style-span" style="font-size: small;">. </span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size: small;"><br /></span></div><div><br /></div></div><br /><object style="height: 300px; width: 400px"><param name="movie" value="http://www.youtube.com/v/CgBFZAWYhEM?version=3"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/CgBFZAWYhEM?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="400" height="300"></object>Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-78853045727796287092011-10-02T10:56:00.000-07:002011-10-02T11:55:40.387-07:00நான் ரசித்த பாடல்கள்- வெண்ணிலா கபடி குழுநான் எவ்வளவோ பாடல்களை கேட்டு இருக்கிறேன். "மன்னிக்கவும், நாம் கேட்டு இருப்போம்", அவற்றில் சில பாடல்கள் மட்டும் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடும் அப்படி எனக்கு பிடித்த பாடல் தான் வெண்ணிலா கபடி குழு பட பாடல்கள் . இதை நான் இப்போது இங்கே எழுதுகிறேன் என்றால் இன்று இந்த படத்தை சன் டிவியில் இன்று மீண்டும் பார்த்தேன். விஷ்ணு - சரண்யா சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் சரண்யாவின் எக்ஸ்பிரசன்ஸ் சான்சே இல்லை.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-78368OosH3k/ToizbC1_eBI/AAAAAAAAAFg/6umM8BqzkEk/s1600/vkk.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 199px;" src="http://2.bp.blogspot.com/-78368OosH3k/ToizbC1_eBI/AAAAAAAAAFg/6umM8BqzkEk/s320/vkk.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5658970208992196626" /></a><br /> இந்த படத்தின் இசையமைப்பாளர் செல்வகணேஷ், அவருக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே பாடலிலும் சரி பின்னணி இசையிலும் சரி பின்னி எடுத்து இருக்கிறார். காதல் காட்சிகளில் வரும் அழகான பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. இப்படம் வெளிவரும் முன்பே ஹிட்டடித்த பாடல் "லேசா பறக்குது மனசு" கார்த்திக் - சின்மயி இன் குரல்களில் இனிமையான மெலடியில் மனதை வருடுகிறது. கார்த்திக்கின் குரலில் மற்றொரு பாடலான "பட பட வென " பாடல் அந்த அளவிற்கு மெலோடியாக இல்லை என்றலும் கேட்கும்போது இனிமை. ஹரிசரண் குரலில் "உயிரில் ஏதோ " பாடல் காதல் பிரிவை காட்டும் சூப்பர் மெலடி. <br /><br /> மெலடி பாடல்கள் எப்போதும் எனது சாய்ஸ். அதனால்தான் இந்த படத்தில் வந்த மூன்று பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். <br />-------------------------------------------------------------------------------Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-5476070295005762902011-09-29T21:24:00.000-07:002011-09-30T10:56:44.912-07:00எனது புத்தக அனுபவங்கள்எனக்கு புத்தகங்கள் படிப்பது என்றால் அலாதி பிரியம், நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் நான் விரும்பி படித்தவை காமிக்ஸ் புத்தகங்கள், விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்ற கதைகள் படித்து வந்தேன்.ஆனாலும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். அதில் வரும் படத்துடன் கூடிய கதைகளை படிப்பதில் ஒரு தனி பிரியம், அதிலும் மாயாவி, கரும்புலி, கௌபாய், ஜேம்ஸ்பாண்ட் போன்ற கதைகள் மிக பிடித்தவை. காமிக்ஸ் புத்தகங்கள் யார் வீட்டில் உள்ளது என்று தேடி பிடித்து படித்து எப்படியாவது படித்து விடுவேன்.<br><br /> பின்பு தினசரிகளில் வார வாரம் வரும் இணைப்பு புத்தகங்கள், ஆனந்தவிகடன், குமுதம் போன்றவைகளும் படிப்பேன். இத்தனையும் நான் படிப்பது நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி வந்துதான். ஒரு முறை நண்பன் ஒருவனின் துணையுடன் நூலகத்தில் இணைந்து புத்தகங்கள் படித்து வந்தேன். அந்த நூலகம் நான் படிக்கும் பள்ளியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மாலை பள்ளி முடிந்தவுடன் தான் நூலகம் செல்ல இயலும்.ஆனால் அந்த நூலகர் நான்கு மணிக்கே கிளம்பிவிடுவார், பள்ளி நான்கு மணிக்கு தான் முடியும். நூலகத்தில் எப்படியாவது புத்தகம் எடுத்து விடவேண்டும் என்று சைக்கிளில் எவ்வளவு வேகம் செல்லமுடியுமோ அவ்வளவு வேகம் செல்வோம். அப்படியும் பல நாட்கள் ஏமாற்றம் தான். இப்படியாக நூலகத்தின் மூலம் தெனாலிராமன், பீர்பால், முல்லா போன்ற கதைகள் பரிச்சயமானது.<br> <br /> நாவல் என்றால் நான் முதலில் படித்து வந்தது ராஜேஷ்குமார் நாவல் தான், அவரது கதைகளின் ஓட்டமும் புத்திசாலிதனமான துப்பறிதலும் நாவலை முடிக்காமல் கீழ் வைக்கவிடாது. பள்ளி காலங்களில் நான் அறிந்த சில எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,, சுஜாதா, வைரமுத்து, பட்டுகோட்டை பிரபாகர்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரே, இவர்களும் நான் வார இதழ்கள் படித்து வந்ததால் தான் பரிச்சயம்.<br><br /> மேல்நிலை, கல்லூரி என பின் வந்த காலங்களில் பல புத்தகங்கள் படிக்கும்<br />வாய்ப்புகள் கிடைத்தது. கலைஞர் அவர்கள் எழுதிய பொன்னர் - சங்கர் தான் நான் படித்த<br />பெரிய வரலாற்று நாவலாகும்.நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என எனது வாசிப்பு<br />கல்லூரி நூலகம்,அரசு நூலகம் என தொடர்ந்தத்து. கவிதைகளை பள்ளி பருவத்தில்<br />விரும்பி படித்து இல்லை, பின்பு நான் மிகவும் விரும்பி படித்தது கவிதைகள் தான்,<br />வைரமுத்து அவர்களின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானது,ஆனாலும் நான்<br />விரும்பும் மற்றொரு கவிஞர் தபூசங்கர். அவரது ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் தான்<br />என்னை அவரை, கவிதைகளை பிடிக்கவைத்தது, அவரது கவிதை தொகுப்புகள் சில படித்து<br />உள்ளேன். கவிதைகள் ஒவ்வொன்றும் காதலை இயல்பாக, புதுமையாக, எடுத்து கூறின.<br />அதனால் தான் என்னவோ அவரது கவிதைகள் என்னை கவர்ந்துவிட்டன.<br /> அவரின் ஒரு கவிதை இங்கே<br /> <blockquote>"உப்பைக் கொட்டியவர்கள்கூட<br /> அள்ளிக்கொண்டு போகிறார்கள்<br /> ஆனால் நீயோ உன் <br /> உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு<br /> அலட்சியமாய்ப் போகிறாயே"</blockquote><br />அவரது ப்ளாக் இங்கே <A HREF="http://thabusankar.blogspot.com/">கிளிக்கவும்</A> <br />ஆனாலும் புத்தகங்களுடன் எனது அனுபவம் என்பது மிக, மிக குறைவு. இன்னும் பல புதகங்ககளை தேடுகிறேன், தேடிக்கொண்டு இருக்கிறேன்.<br />---------------------------------------------------------------------------------<br /><br />டிஸ்கி:<br />இந்த பதிவை ஒரே மூச்சில் எழுதவேண்டும் என்று நேற்று எழுத ஆரம்பித்து நான்கு முறை மின்வெட்டு ஆனது. புத்தகங்கள் பற்றி நிறைய எழுத யோசித்து இருந்தேன், விட்டு விட்டு எழுதியதால் முழுவதுமாக எழுத பல விஷயங்கள் ஞாபகம் வரவில்லை. <br />மீண்டும் மின்வெட்டை அமல்படுத்திவிட்டனர்.Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-62304912660866710972011-09-27T08:09:00.000-07:002011-09-27T09:01:44.009-07:00பாரதியார் - இணையற்ற கவிஞன்என்னங்க பண்றது நானும் எத எழுதுறதுனு ஒசிச்சு பார்த்தேன் ஒன்னும் புலப்படல. சரி பாரதியார் டக்குனு ஞாபகத்துக்கு வந்தாரு,. சரி அவர எனக்கு ரொம்ப பிடிக்குமே, அவர பத்தி ஒரு பதிவாவது போடணும்னு தோணுச்சு. அதனால இந்த ப்ளாக்கில் அவர பத்தி பதிவு போடலனா நல்லா இருக்காதுனு இத எழுதறேன். யார் இத படிச்சாலும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்.<br /> --------------------------------------------------------------------------------<br /> இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞரான பாரதியார் நான் மிகவும் விரும்பும் ஒருவர்,தனக்கே உரிய பானியில், நடையில், எவரைக் கண்டும் அஞ்சாமல் கவிதைகளை அள்ளி வீசியவர், இவரது அஞ்சாமை உணர்வு என்னை மிகவும் கவர வைத்தது. சில கவிதைவரிகளில் வீரம் நம்மை ஆட்கொள்ளும், காதல் உணர்வு நம்மை காதல் வயப்பட வைக்கும். <br />தமிழ் மொழியின் பெருமையை ஒரே வரியில் சொல்கிறார் பாருங்கள் இப்படி <br /><br />" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் "<br /><br />இப்படி இவர் சொல்ல வேண்டுமானால் மற்ற மொழிகளில் எவ்வளவு புலமை இருக்க வேண்டும். <br /> இவர் தான் செய்யும் தொழில் இதுதான் என்று சொல்லும் இடம் எவ்வளவு அழகானது, இயல்பானது என்று பாருங்கள் <br /><br />" எமக்கு தொழில் கவிதை செய்வது "<br /><br />நான் ரசித்த மற்றொரு வரி<br /><br />"காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்<br />காலருகே வாடா சற்றே மிதிக்கிறேன் "<br /><br />மரணத்தை இவ்வளவு துணிவுடன் எதிர் கொண்ட இவரது அஞ்சா நெஞ்சம் என்னை மிகவும் கவர்ந்தது <br />பெண்மை, காதல், வீரம், வாழ்க்கை, நீதி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒரே மகாகவி பாரதி தான்.<br />-------------------------------------------------------------------------------<br />பாரதியார் பத்தி எழுதலாம்னு இதை எழுதுனேன். ஆனாலும் இன்னும் நல்லா எழுத முயற்சி செய்கிறேன்Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8852541690094563044.post-46761132903740902722011-09-26T06:33:00.002-07:002011-09-26T07:03:32.770-07:00நான் தவறவிட்ட எஸ்.ரா வின் கலந்துரையாடல்நேற்று மாலை திருப்பூர் வலை பதிவர்கள் சங்கமான சேர்தளம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து இருந்தது. நான் அவசர பணி காரணமாக கோவை சென்று விட்டதால், என்னால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. நானும் எனது நண்பனும் செல்ல திட்டமிட்டோம், இறுதியில் அவன் மட்டும் சென்று வந்தான். எதிர்பார்த்த அளவு நபர்கள் விழாவிற்கு வரவில்லை என்று சொன்னான். நான் கூட பரிசல்காரனின் பதிவில் தான் தெரிந்து கொண்டேன். <br /> உலகின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ள அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக நண்பன் கூறினான். எனக்கு சிறிய வருத்தம் இன்னும் உள்ளது ஒரு அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டோம் என்று. <br /> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ycJAXdJRL78/ToCFu0ay7fI/AAAAAAAAAFY/rEPKUHFbZYw/s1600/CB05BUSSTAND_157166f.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 174px;" src="http://4.bp.blogspot.com/-ycJAXdJRL78/ToCFu0ay7fI/AAAAAAAAAFY/rEPKUHFbZYw/s320/CB05BUSSTAND_157166f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5656668171368852978" /></a><br />நேற்று மதியம் முதல் இன்று காலை வரை கோவையில் தான் இருந்தேன். கோவை எனக்கு பிடித்த நகரம். திருப்பூர் போல் பரபரப்பாக அல்லாமல் மிக நிதானமான நகரம், மற்றும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை எனக்கு பிடிக்கும். மற்றபடி கோவையில் எனக்கு அனுபவம் என்று எதுவும் இல்லை எப்போதாவது செல்வதோடு சரி. எனக்கு தெரிந்தவரை லிவிங் காஸ்ட் கோவையில் கொஞ்சம் அதிகம். அந்த வகையில் திருப்பூர் எவ்வளவோ பரவாயில்லை.<br />-------------------------------------------------------------------------------Rajanhttp://www.blogger.com/profile/09678839264342220369noreply@blogger.com0