எங்கேயும் எப்போதும் - தமிழ் சினிமாவின் மற்றொரு அடையாளம்

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்து உள்ள படம்தான் எங்கேயும் எப்போதும்...
ஒரு படத்தின் திரைக்கதை என்பது, படம் பார்க்க வருபவரை படத்தின் உள்ளே இழுத்து அதன் உடன் பயணிக்க வேண்டும், அந்த முயற்சியில் புதுமுக இயக்குனர் சரவணன் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...
இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்...




எங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன ?

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தும் மோதிக்கொள்கின்றன.
திருச்சியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் ஜெய், அஞ்சலி , சரவ் வும்
அதேபோல் சென்னையில் இருந்து செல்லும் பேருந்தில் அனன்யாவும் பயணம் செய்கிறார்கள்.. யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலமாக சொல்லி இருக்கிறார்கள்...



பிளாஷ் பேக்கில் வரும் சரவ் - அனன்யா காட்சிகளும், ஜெய் - அஞ்சலி காதல் காட்சிகளும்
மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
ஜெய் இன்னோசென்ட் கேரக்டரில் அழகாக பொருந்துகிறார் அஞ்சலி கொஞ்சம் துடுக்கான கதாபத்திரத்தில் எல்லோர் மனதையும் கவர்கிறார், சரவ் - ன், சென்னை வாலிபராகவும்,
அனன்யா கிராமத்து பெண் வேடத்திலும ரசிக்க வைக்கின்றனர்.
படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் சத்யா. இவர்கள் இருவரும் படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் மிகை இல்லை..

இரண்டரை மணி நேரம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ஒரு விழிப்புணர்வு எற்படுத்தியுள்ளார் இயக்குனர் சரவணன்.. வாழ்த்துக்கள்

இந்த படத்தை கண்டிப்பாக தியேட்டரில் மட்டும் பார்கவும்..
Don't Miss the Travel..

4 comments:

  1. யதார்த்தமான விமர்சனம்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சொல்லிட்டீங்கள்ள... கண்டிப்பா தியேட்டருக்குப் போயி பார்த்துடறேன்...

    ReplyDelete
  3. நல்ல படத்துக்கு நல்ல பதிவு போட்ட நல்லவரே!
    நீர் வாழ்க!!
    இப்படத்துக்கு நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.
    நன்றியுடன்,
    உலகசினிமாரசிகன்.

    ReplyDelete
  4. நன்றி எனது வலைப்பூ நண்பர்களே.. உங்களது இந்த ஆதரவு தான் என்னை போன்றவர்களுக்கு உற்சாக டானிக்...

    ReplyDelete