ST கொரிய,ர் ஒரு துன்பியல் அனுபவம்

கடந்த வாரம் இணையம மூலமாக PENDRIVE ஒன்று ஆர்டர் செய்தேன்..
மூன்று நாட்களில் டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். பின்பு மூன்ற நாள் கழித்து குன்னத்தூர் ST COURIER இல் இருந்து அழைத்தார்கள். உங்களுக்கு கொரியர் வந்துள்ளது வந்து வாங்கிகங்கனு, நான் பதிலுக்கு "ஏங்க ஊத்துக்குளில இருக்கற நான் எப்படி பதினைந்து கிலோ மீட்டர் வந்து வாங்கறது. நீங்க எப்படியாவது அனுப்புங்க"னு சொல்லிட்டேன்.
அப்பறம் ரெண்டு நாள் ஆகியும் கொரியர் வரல. சரி என்ன ஆச்சுனு குன்னத்தூர் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டா "அது அந்த அன்னைக்கே ஹெட் ஆபீஸ் திருப்பி அனுபிட்டோம், வந்துருமுனு சொன்னாங்க, அதுக்கு ரெண்டு நாள் ஆச்சு இனி எப்ப வரும் கேட்டா "நாங்க திருப்பி அனுபிட்டோம் எங்களுக்கு தெரியாது"-னு சொல்லிட்டாங்க, என்னடா இது ஆன்லைன ஆர்டர் பண்ணி வம்பா போச்சேனு PENDRIVE ஆர்டர் செஞ்ச கம்பெனிக்கு கால் பண்ணேன் (நல்லவேல அது டோல்-ப்ரீ நம்பர்). அவங்க கொரியர் புக்கிங் நம்பர் தந்தாங்க.
அத வச்சு ST COURIER வெப்சைட்ல டிரேக் பண்ணுனா, அது திருப்பூர் ஆபீஸ் வந்து மூணு நாள் ஆகுதுன்னு காட்டுது. சரின்னு திருப்பூர் ஆபீஸ்க்கு கால் பண்ணி கேட்டா. கொரியர் புக்கிங் நம்பர், பேரு, அட்ரஸ் சொல்லுங்க பாத்துட்டு கால் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணினதுதான் அப்புறம் எடுக்கவே இல்ல.
அடுத்த நாள் போன் பண்ணி சத்தம் போட்டேன், அதுக்கு ஒரு ரீசன் சொன்னாங்க பாருங்க,
சாரி சார், அட்ரஸ் அழிஞ்சுபோச்சு, உங்க அட்ரஸ் சொல்லுங்க, நாளைக்கு டெலிவரி செய்து விடுவோம் என்று சொன்னார்கள். சரினு விட்டுட்டேன்.
அந்த அன்னைக்கு சாய்ங்காலம் திருப்பூர் போக வேண்டி இருந்ததால, கொரியர் கையோட வாங்கிட்டு வந்தர்லாம்னு வாங்கிட்டு கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு வரவேண்டியதா போச்சு..

ஒரு பொருள வாங்கிட்டு ஒரு வாரம் நான் பட்ட அவஸ்த இருக்கே அய்யய்யோ னு..
சந்தானம் தான் ஞாபகம் வர்றார்

0 comments: