நான் வாசித்த முதல் ப்ளாக்

இங்கு எனது ப்ளாக் அனுபவம் பற்றி குறிப்பிடும் முன்னர், என்னுடைய இன்டர்நெட் அனுபவங்கள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
நான் பதினோராம் வகுப்பில் வரலாறு பாட பிரிவில் படித்த காரணத்தால், எனது கணினி அறிவு அப்போது பூஜ்யம் தான். கணினி படத்தில் படிக்கும் என் நண்பர்கள் இன்டர்நெட், ஈமெயில் பற்றி பேசும் போதெல்லாம், அவர்கள் சொல்வது ஒன்றும் புரியாது. என்னடா பெரிய கம்ப்யூட்டர்னு. அவங்க லேப்ல போய், காதலர்தினம் படத்துல கவுண்டமணி மாதிரி கிண்டல் பண்ணிட்டு வந்துடுவோம்.
அப்பறம் +2 எக்ஸாம் முடிஞ்சு, காலேஜ் போறவரைக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ் போவோமே, அப்டினு போனேன். அங்க கொஞ்ச விஷயங்கள் கத்துகிட்டேன். ஆனாலும் இன்டர்நெட் பத்தி ஒன்னும் கத்துதரல(ஏன்னா அங்க இன்டர்நெட் இல்ல). சரி கம்ப்யூட்டர் பத்தி கத்துடோம் இனி கவலை இல்லன்னு. பி.சி.ஏ கோர்ஸ் எடுத்தேன். அப்பறம் தான் தோனுச்சு ஏன்டா எடுத்தோமுனு, ஏன்னா ப்ரோக்ராம், சாப்ட்வேர் அப்படிங்கற வார்த்தையவே அப்பதான் கேள்விபட்டேன். பேசாம பி.காம், பி.பி.எம் எடுத்து இருக்கலாமேனு தோணுச்சு. சரி என்ன ஆனாலும் இத கத்துக்கணும்னு முடிவு எடுத்தேன்.
அப்பறம் எங்க லெக்சரர் கேட்டாங்க இங்க யார்க்கு ஈமெயில் ஐடி இருக்குனு. நைசா பின்னாடி திரும்பி பாத்தேன் எத்தன பேருக்கு இருக்குனு. அப்புறம் என்னோட சந்தோசத்துக்கு அளவே இல்ல. ஏன்னா ஒருத்தன் தான் கைய தூக்கி இருந்தான். ஆஹா எல்லாரும் என்னைய
போலத்தான் போலன்னு தான் சந்தோசம். அப்புறம் ஒரு வருத்தம் என்னன்னா கைய தூக்குனவன் ஹீரோ ஆயிட்டான்(காரணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை).
காலேஜ் லேப்ல முதல் நாள் இன்டர்நெட் அட்ரஸ் பார்ல நான் டைப் பண்ணுன முதல் வெப்சைட் யாஹூ தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இன்டர்நெட் உபயோகத்த தெரிஞ்சுகிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு தான் கூகிள் சர்ச் இன்ஜின், ஜிமெயில், சாட்டிங் என எந்த இன்டெர்நெட் அறிவு கொஞ்சம் விரிவடைஞ்சது. வெறும் ஈமெயில் மட்டும் தான் அனுப்பலாம்னு நெனச்ச நான் இன்டர்நெட் பத்தி நெறய தெரிஞ்சுக்க விடுமுறை நாட்களில் கல்லூரி லேபை முழுமையா உபயோகபத்தி கிட்டேன்.

ப்ளாக் அறிமுகம்:
நான் இன்டர்நெட் தொடர்ந்து உபயோகபடுத்தி வந்தாலும் ப்ளாக் பத்தி ஓரளவுக்கு தெரியும். ஆனா தமிழ் ப்ளாக் படிச்சதில்ல. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆனந்தவிகடனில் கேபிள்சங்கர் அவர்களின் ப்ளாக் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அவரது ப்ளாக் தான் நான் வாசித்த முதல் வலைப்பூ, அப்போது இருந்து இன்று வரை பல ப்ளாக்குகள் வாசித்து வருகிறேன். பின்பு தான் ஜாக்கிசேகர், பரிசல்காரன், கருந்தேள் இன்னும் பல பிளாக்கர்கள் வலைத்தளம் அறிந்து கொண்டேன்.



நான் இன்னைக்கு இந்த ப்ளாக் எழுதறேன்னா அதுக்கு அன்னைக்கு ஆனந்தவிகடன்-ல கேபிள்சங்கர் அவர அறிமுக படுத்தியதுதான். எனவே இந்த நேரத்துல ஆனந்தவிகடனுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுகறேன்.

3 comments:

  1. எழுதுங்கள் ,தொடர்கிறோம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete