ரசிகர்கள் Vs ரசிகர்கள்

"இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் போல் முட்டாள்கள் எங்கும் பார்க்க முடியுமா என்பது எனக்கு கொஞ்சம் சந்தேகம் உள்ளது."
"எதுக்குயா இப்படி சொல்ற? அவங்கள பத்தி என்ன நெனச்ச ? என்னவெல்லாம் பண்றாங்க தெரியுமா மன்றம் மூலம் எவ்ளோ பண்றாங்க, நடிகைகளுக்கு கோவில் கட்ராங்க, கட் அவுட்டு வைக்கறாங்க, பால் குடம் எடுக்கறாங்க, பால் அபிசேகம் பண்றாங்க படம் ரிலீஸ் ஆனா உடன் டிக்கெட் எவ்ளோ ரூபாய் கொடுத்தும் படம் பாக்கறாங்க. அப்படி பட்டவங்கள முட்டாள்னு சொல்றியே "

"கொஞ்சம் இருங்க நான் சொல்ல வந்தத சொல்றேன். நீங்க சொல்றத பத்தி சொல்ல நான் சொல்ல வரல"

"என்ன சொல்ல வந்தியோ சொல்லிதொல"

பொழுதுபோக்கின் ஒரு அம்சம் தான் சினிமா. நானும் சினிமா பார்ப்பவன் தான், சினிமாவாக மட்டும் பார்ப்பவன். அதில் குறைகள், குற்றங்கள் இருக்கும். அதனால் யாரும் சினிமாவை வெறுப்பதில்லை. ஆனால் பாவம் அதனை சார்ந்தவர்கள் தான், குறிப்பாக நடிகர்கள் நிலைமை கொஞ்சம் திண்டாட்டம் தான். அவரின் படம் வெற்றி பெற்றால் கொண்டடபடுகிறார்கள். தோல்வி அடைந்தால் இழிவு படுத்தபடுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் அல்ல விளையாட்டிலும் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு அவர்களின் நிலமையோ ரொம்ப மோசம். எஸ்.எம்.எஸ் களில், பேஸ்புக், ட்விட்டர் போன்றவை மூலம் அவர்கள் மிக மோசமாக இழிவுபடுத்தபடுகிறார்கள். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை இழிவு செய்வது என்பது மனிதன் செயல் அல்ல. அவர்களும் மனுசங்க என்பதை மக்கள் உணரவில்லை. அவர்களை இழிவுபடுத்துவதால் அவங்களுக்கு கெடைப்பது என்னனுதன் தெரியல. ஒரு பெரிய நடிகரின் ரசிகர்கள் இன்னொரு பெரிய நடிகரை கேவலமாக சித்தரிப்பது, அவர்கள் இவரை கேவல்படுதுவது என தொடர்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்க இதையும் ஒரு வேலையா செய்றவங்கள பாத்தா எனக்கு கடுப்புதான் ஆகுது. இனியும் இவங்க திருந்துவங்காளானு தெரியல?
-------------------------------------------------------------------------------------

இத பத்தி இங்க எழுத காரணம் சில பல மாதங்கலாவே நடிகர்களை இழிவு செய்து,
எஸ்.எம்.எஸ் லயும், பேஸ்புக் லயும் அப்டேட்ஸ் கடுப்பேத்திடே இருந்துச்சு. அதான் அதை பத்தி இங்க பதிவு போடுறேன்.

0 comments: